×
 

தமிழகத்தில் முதல் முறை: கேஸ் சிலிண்டர் பதுக்கிய இருவர் குண்டர் சட்டத்தில் கைது...!

மதுரையில் கள்ளச்சந்தையில் விற்க வேண்டும் என்பதற்காக காஸ் சிலிண்டர் பதுக்கிய இரண்டு பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

தமிழகத்திலேயே முதல் முறையாக சமையல் சிலிண்டர்களை பதுக்கி விற்பனை செய்ய முன்ற இருவர் மதுரையில் குண்டர் சட்டத்தில் கைது - 398 சிலிண்டர்கள் பறிமுதல் - குடிமைப் பொருள் கடத்தல் குற்றப் புலனாய்வுத்துறையினர் அதிரடி

ஈரான் - அமெரிக்கா போரால் கச்சா எண்ணெய் ஏற்றுமதி, இறக்குமதி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வீட்டு மற்றும் வணிக சிலிண்டர்களுக்கு பல பகுதிகளில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் ஒட்டல்கள் பல பகுதிகளில் மூடப்படுவதாக அறிவிக்கப் பட்டது.

இந்த நிலையில் பொதுமக்கள் வீடுகளுக்கு பயன்படுத்தும் சிலிண்டர்கள் மற்றும் வனிக நிறுவனங்களுக்கு வழங்கப்படும் சிலிண்டர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டது. மதுரை அலங்காநல்லூர் அருகே உள்ள கோவில்பாப்பாகுடி பகுதியை சேர்ந்த மதன்குமார் (27), பழனி (47) என இருவர் பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய மானிய சிலிண்டர் மற்றும் வணிக நிறுவன சிலிண்டர் என 398 சிலிண்டர்களை வீட்டின் அருகே பதுக்கி கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்க பதுக்கி வைத்திருப்பதாக தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி ஆய்வில் தெரிய வந்ததை தொடர்ந்து.

இதையும் படிங்க: இது சோழர்களின் பூமி! இங்கு இருப்பது பெருமை! கபாலீஸ்வரர் கோயிலில் புதிய ஆளுநர் ஆர்லேகர் தரிசனம்!

பொதுமக்களுக்கு வழங்காமல் சிலிண்டர்களை பதுக்கிய இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மதுரை ஆட்சியர் பிரவீன்குமார் உத்தரவிட்டதின் பேரில் இருவரையும் கைது செய்த அதிகாரிகள் குற்றவாளிகள் இருவரையும் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய சிலிண்டர்களை கள்ள சந்தையில் விற்க  பதுக்கினால் தண்டனை வழங்கப்படும் என மதுரை ஆட்சியர் எச்சரித்துள்ளார். தமிழகத்திலேயே முதல்முறையாக மதுரையில் சிலிண்டர்களை பதுக்கியதாக இருவர் மீது இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது இதுவே முதல் முறை என்கின்றனர் அதிகாரிகள்

இதையும் படிங்க: ஹார்முஸ் நீரிணை திறக்கப்படாது! ஈரானின் புதிய தலைவர் மொஜ்தபா கமேனி அதிரடி அறிவிப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share