×
 

அதிமுகவை பாஜவிற்கு விற்றுவிட்டார்... எடப்பாடி பழனிசாமியை விளாசிய உதயநிதி ஸ்டாலின்...!

தமிழ்நாட்டில் பாஜகவிற்கு இடமில்லை என்று சொல்லும் தேர்தல் இந்த தேர்தல் - சென்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக.,வை பாஜக.,விற்கு வாடகைக்கு விட்டார்., இந்த தேர்தலில் விற்று விட்டார் - தளி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை.

கிருஷ்ணகிரி மாவட்டம், தளி சட்டமன்ற தொகுதியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ராமச்சந்திரனை ஆதரித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்:  இந்த தொகுதிக்கு என்னற்ற திட்டங்களை கொடுத்துள்ளார் உங்கள் வேட்பாளர் ராமசந்திரன் என்பதை நியாபகபடுத்த வந்துள்ளேன்.13 கோடி மதிப்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை கொண்டுவந்து உள்ளார். ஐ.டி.ஐ கொடுத்து உள்ளோம், 18கோடி மதிப்பில் அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டிடம், ஏழு கோடி மதிப்பில் காவல் நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

மூன்று கோடி மதிப்பில் வேளாண் விரிவாக்கம் மையம் கொண்டுவரப்பட்டுள்ளது மூன்று கோடி மதிப்பில் புல் விளையாட்டு அரங்கம் கெலமங்கலம் தேன்கனிக்கோட்டை பகுதியில் நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டிருக்கிறது. பல்வேறு கிராமங்களில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இது போன்ற பல்வேறு திட்டங்கள் உங்கள் பகுதிக்கு வர வேண்டும் என்றால் ராமச்சந்திரன் அவர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்க வைக்க வேண்டும். 

இந்த தொகுதிக்கான சில கோரிக்கைகளை ராமச்சந்திரன் முன் வைத்துள்ளார். அதன்படி தளி அம்பேத்கர் நகரில் சமுதாய நலக்கூடம் தேவை நாட்றம்பாளையத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தேவை, ரத்தனகிரி ஊராட்சியில் கால்நடை மருத்துவமனை தேவை, ஏரிகளை புணரமைத்து தண்ணீர் நிரப்ப வேண்டும், புதிய தீயணைப்பு நிலையம் வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் எல்லாம் முன் வைத்துள்ளார், மீண்டும் ராமச்சந்திரன் அவர்களை வெற்றி பெற செய்தால் முதலமைச்சர் இடம் இந்த கோரிக்கைகளை பெற்றுத் தருவார் என வாக்குறுதி அளிக்கிறேன்.

இதையும் படிங்க: நடுவழியில் தடுத்து நிறுத்தப்பட்ட உதயநிதியின் கார்... தேர்தல் பறக்கும் படையினரால் பரபரப்பு... சிக்கியது என்ன?

2021 சட்டமன்ற தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி கொடுத்துள்ளோம் என்ற நம்பிக்கையில் உங்களை சந்திக்க வந்துள்ளோம். ஆட்சி அமைந்ததும் முதல்வர் போட்ட முதல் கையெழுத்து மகளிர் விடியல் பயணம் இதன் மூலம் ஒவ்வொரு மகளிரும் சுமார் ஆயிரம் ரூபாய் வரை சேமித்து உள்ளார்கள் அரசுப் பள்ளியில் குழந்தைகள் பசியோடு படிக்கக் கூடாது என்பதற்காக ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை காலை உணவு திட்டம் முதல்வர் வழங்கிமார். அதன் மூலம் தரமான உணவு தரமான கல்வி வழங்கப்பட்டது. 

அரசு பள்ளியில் படித்து எந்த அரசு தணியார் கல்லூரியில் சேர்ந்தாலும் அரசு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் கல்வி ஊக்கத்தொகை வழங்குகிறது. இதன் மூலம் 13 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளார்கள், அதேபோல் கடந்த மாதம் 10 லட்சம் மாணவர்களுக்கு இலவசமாக லேப்டாப் வழங்கி உள்ளோம்.

லேப்டாப் திட்டம் அதிமுக கொண்டு வந்தது என்றும் அதை நாம் நிறுத்திவிட்டோம் என்ற பொய் குற்றச்சாட்டை வைக்கிறார்கள். அதிமுக ஆட்சியில் பள்ளி படிக்கும் மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்தார்கள். 2019 ஆம் ஆண்டு அந்தத் திட்டம் நிறுத்தப்பட்டது. நம்முடைய முதல்வர் இந்த லேப்டாப் திட்டத்தை கல்லூரி மாணவர்களுக்கு கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும், அவர்கள் மேற்படிப்பு செல்வதற்கும் வேலைக்கு செல்வதற்கும் பயனுள்ளதாக இருக்கும் என கல்லூரி மாணவர்களுக்கு கொடுத்து முடித்து விட்டோம்.

அதேபோல் கடந்த மூன்று ஆண்டுகளில் 1 கோடியே 31 லட்சம் மகளிர்க்கு மகளிர் உரிமைத்தொகை மாதம் ஆயிரம் ரூபாய் முதல்வர் கொடுக்கிறார் அந்தத் திட்டத்தை தேர்தலை காரணம் காட்டி எப்படியாவது நிறுத்த வேண்டும் என பாஜகவும் அதிமுகவும் முயற்சி செய்தார்கள். சில மாநிலங்களில் நீதிமன்றத்திற்கு சென்று நிறுத்தியுள்ளார்கள்.

நம்முடைய முதல்வர் ஆயிரம் ரூபாயை நிறுத்த பார்க்கிறீர்களா என்று 1 கோடியே 31 லட்சம் குடும்பங்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வழங்கினார். இந்தத் திட்டங்கள் தொடர வேண்டுமென்றால் நம்முடைய திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைய வேண்டும்.

அதேபோல் தேர்தல் அறிக்கையில் பல்வேறு உறுதி மொழியை கொடுத்துள்ளோம், திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைந்த உடன் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாயை 2000 ரூபாயாக உயர்த்தி கொடுப்போம் என உறுதிமொழி கொடுத்துள்ளோம் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள காலை உணவு திட்டத்தை எட்டாம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் என்ற உறுதிமொழியை கொடுத்துள்ளோம், கல்வி ஊக்கத்தொகை திட்டம் ஆயிரம் ரூபாயிலிருந்து 1500 ரூபாயாக உயர்த்தி கொடுக்கப்படும், 50 லட்சம் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்பை உருவாக்கித் தரப்படும் என்ற உறுதிமொழி கொடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் அனைத்து கல்லூரி மாணவ மாணவிகளுக்கும் 35 லட்சம் லேப்டாப் வழங்கப்படும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு எந்தவித பினையும் இல்லாமல் 5 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும், இல்லத்தரசி என்ற திட்டம் மூலம் எட்டாயிரம் ரூபாய் மதிப்புள்ள கூப்பன் வழங்கப்படும், அதை வைத்துக்கொண்டு வீட்டிற்கு தேவையான குக்கர், மிக்ஸி, டிவி மைக்ரோவே அவன் உள்ளிட்ட மின்சாதன பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். இந்த திட்டங்கள் நிறைவேற வேண்டுமென்றால் மீண்டும் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைய வேண்டும்.

தமிழ்நாட்டுக்கு ஒவ்வொரு திட்டத்தையும் முதல்வர் பார்த்து பார்த்து செய்து கொண்டிருக்கிறார். ஆனால் இதற்கெல்லாம் பாஜக ஒன்றிய அரசு நிதி கொடுப்பதில்லை, கல்வி நிதி மறுக்கப்படுகிறது. தமிழ்நாட்டுக்கு எந்த திட்டமும் கொண்டு வரப்படுவதில்லை, மாநில உரிமைப் பறிக்கப்படுகிறது, இதை தட்டிக் கேட்க வேண்டிய பழனிச்சாமி பாஜகவுடன் கூட்டு சேர்ந்து கொண்டு பாஜவை கொல்லைப்புரம் வழியாக தமிழ்நாட்டிற்குள் வர முயற்சி செய்கிறார்கள். மீண்டும் பாஜகவிற்கு தமிழ்நாட்டில் இடம் இல்லை என்று சொல்லும் தேர்தல் தான் இந்த தேர்தல்., இந்த தேர்தலில் நம் தமிழ்நாடு எடுத்துக்காட்ட இருக்க வேண்டும். கடந்த தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவை பாஜகவிற்கு வாடகைக்கு விட்டார்., இந்த தேர்தலில் விற்று விட்டார்.

இதையும் படிங்க: அசம்பிள் பீஸ், டெல்லி மேட்... “சும்மா கிழி” - அதிமுக கூட்டணியை கலாய்த்து தள்ளிய உதயநிதி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share