50 லட்சம் இளைஞர்களுக்கு ஜாக்பாட்... ஸ்டன் ஆன தேர்தல் களம்... ஜாக்பாட் அறிவிப்பை வெளியிட்ட உதயநிதி...!
இந்தியாவின் நம்பர் ஒன் முரட்டு பாஜக அடிமை எடப்பாடி பழனிச்சாமி. தேர்தல் பிரச்சாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை.
நாட்றம்பள்ளி பேருந்து நிலையத்தில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை உள்ளிட்ட வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார். 2026 சட்டமன்ற பொது தேர்தலில் ஜோலார்பேட்டை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கவிதா தண்டபாணி மற்றும் திருப்பத்தூர் வேட்பாளர் நல்லதம்பி ஆகியோரை ஆதரித்து முன்னாள் துனை துணை முதல்வரும் இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நாட்றம்பள்ளி பேருந்து நிலையத்தில் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
பின்னர் அவர் பேசுகையில், ஜோலார்பேட்டை வேட்பாளர் கவிதா தண்டபாணி மற்றும் திருப்பத்தூர் வேட்பாளர் அ.நல்லதம்பி ஆகிய வெற்றி வேட்பாளர்களை தலைவர் உங்களிடம் ஒப்படைத்து இருக்காங்க மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்து சட்டமன்றத்திற்கு அனுப்பவேண்டும்.
சென்ற முறை வாங்கிய வாக்கை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்பிற்கள் என நம்பிக்கை இருக்கிறது.தொடர்ந்து இரண்டு நாட்களாக தமிழ் நாட்டில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறேன்.நானும் ஒரு வேட்பாளர் தான் இதுவரைக்கும் என் தொகுதியில் இன்னும் நான் ஓட்டு கேட்க்கவில்லை ஆனால் நான் என்னுடைய தொகுதி போகும் முன்பே கவிதா தண்டபாணிக்கும்,நல்லதம்பிக்கும் ஒட்டு கேட்டு உங்க முன்னாடி வந்து நிற்கிறேன். என்னுடைய வெற்றியை விட அவர்களுடைய வெற்றியை மிக மிக முக்கியம் இவங்க ரெண்டு பேரையும் ஜெயிக்க வைத்தீர்கள் என்றால் தலைவரை ஜெயிக்க வைத்த மாதிரி அதனாலதான் நான் உங்களை தேடி வந்திருக்கிறேன்.
இதையும் படிங்க: மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டி..! அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!
நானும் தலைவரும் மக்களை சந்தித்து வருகிறோம் எந்த தைரியத்தில் மக்களை சந்தித்து வருகிறோம் கடந்த ஐந்து ஆண்டில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி இருக்கிறோம். என்னென்ன தேர்தல் வாக்குறுதியை சொன்னமோ அது எல்லாம் நிறைவேற்றி இருக்கிறோம் அதனால்தான் மக்களை சந்திக்கிறோம்.
உதாரணத்திற்கு சில திட்டங்களை மட்டும் சொல்கிறேன். நம்முடைய தலைவர் ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து மகளிர்க்கு விடியல் பயணம் திட்டம் நிறைவேற்றி இருக்கிறோம். குழந்தைகள் பள்ளிக்கூடத்தில் படிக்க வேண்டும் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கக்கூடிய அனைத்து குழந்தைகளுக்கும் முதலமைச்சர் காலை உணவு திட்டத்துடன் தரமான கல்வி கொடுக்கப்பட்டுள்ளது. கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக அரசு பள்ளியில் படித்த மாணவ மாணவிகள் எந்த கல்லூரியில் சேர்ந்தாலும் மாதம் ஆயிரம் ரூபாய் நம்முடைய முதலமைச்சர் கொடுத்தார். கிட்டத்தட்ட 12 லட்சம் மாணவர்கள் இதில் பயன்பட்டு இருக்கிறார்கள் போன மாதம் 10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது.
இன்றைக்கு அதிமுக பொய் பிரச்சாரம் பண்ணுறாங்க. லேப்டாப் கொடுத்த திட்டம் அதிமுக திட்டம்னு சொல்றாங்க. அதிமுக ஆட்சியில் ஸ்கூல் படிக்கிற பசங்களுக்கு லேப்டாப் கொடுத்தாங்க 2019 ஆண்டில் இந்த திட்டம் நிறுத்திட்டாங்க. இன்றைக்கு நம்முடைய முதலமைச்சர் பள்ளிக்கூடம் குழந்தைகளுக்கு கொடுப்பதை விட காலேஜ் பசங்களுக்கு லேப்டாப் கொடுத்தா மேல் படிப்பு படிப்பதற்கு பயனுள்ளதாக இருக்கும் 10 லட்சம் மாணவர்களுக்கு கொடுத்திருக்கிறோம் என பேசினார்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் போன சட்டமன்றத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதி இன்றைக்கு மூன்று வருடமா ஒரு கோடியே 31 லட்சம் மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகையை நம்முடைய அரசு கொடுத்திருக்கிறது.
அந்தத் திட்டத்தை எப்படியாவது நிறுத்தனும்னு அதிமுகவும் பாஜகவும் திட்டம் போட்டாங்க தேர்தல காரணம் காட்டி மகளிர் உரிமைத் தொகையை நிப்பாட்டனும்னா முயற்சி பண்ணாங்க ஆனால் நம்முடைய தலைவர் நான் ஆயிரம் ரூபாய் கொடுப்பது நீ தடுக்கிறியா நான் கொடுக்கிறேன் பார் என 5000 ரூபாய் போன மாதம் கொடுத்தார்.
அது மட்டுமல்ல தேர்தல் வாக்குறுதியும் கொடுத்திருக்கிறோம் திராவிடம் மாடல் ஆட்சி 2.o அமைந்தால் மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் இல்லை உயர்த்தி 2000 ரூபாயாக தருகிறோம் என தலைவர் வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.
நம்முடைய தலைவர் சொன்னால் நிச்சயமாக செய்வார். தமிழ் புதல்வன், நான் முதல்வன், ஆயிரம் ரூபாயிலிருந்து உயர்த்தி 1500 ரூபாய் தரப்படும் என வாக்குறுதி கொடுத்துள்ளார். பத்து லட்சம் நபர்களுக்கு கலைஞர் கனவு இல்ல வீடு கட்டி தரப்படும், 50 லட்சம் இளைஞருக்கு வேலைவாய்ப்பு வசதி செய்து தரப்படும், முதலமைச்சர் காலை உணவு திட்டம் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே உள்ளது ஆட்சிக்கு வந்தால் எட்டாம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப்படும் என வாக்குறுதி கொடுத்துள்ளோம்.
மிக முக்கியமான வாக்குறுதி இல்லதரசி திட்டம் முதலமைச்சர் நம்முடைய தலைவர் ஆனதும் மகளிருக்கு 8000 மதிப்புள்ள ஒரு கூப்பன் கொடுத்துருவார். அந்த கூப்பனை வைத்துக்கொண்டு உங்கள் வீட்டிற்கு தேவையான மின்சாதன பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.
இவ்வளவு திட்டங்களையும் கொடுத்திருக்கிற வாக்குறுதையும் செய்து முடிக்க வேண்டும் என்றால் என்றால் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் திராவிட மாடல் 2.O ஆட்சி அமைய வேண்டும் ஆட்சி அமைய வேண்டும். நம்முடைய மீண்டும் முதலமைச்சர் நாற்காலியில் அமர வேண்டும் என்றால் இங்கு இருக்கும் இரண்டு வேட்பாளர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.
நம்பளை எதிர்த்து நிற்கிற அணி யாரு தமிழ்நாடு அணியா டெல்லி அணியா டெல்லி அணியில் யார் இருக்கிறாங்க மோடி அமித்ஷா எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறாங்க பிஜேபிக்கு தெரியும் எப்படி வந்தாலும் தமிழ்நாட்டுக்குள்ள நம்மள அனுப்ப மாட்டாங்கன்னு அதிமுகவை கூட கூட்டிட்டு ஒரு போர்வையாக தமிழ்நாட்டுக்குள்ள வராங்க பாஜாக தமிழ்நாட்டில் என்றும் பாசிச சங்கை கூட்டத்திற்கு அனுமதி கிடையாது மீண்டும் ஜெய்ப்பது நம்முடைய கழகம் தான்.
டெல்லிக்கு சொல்லுவோம் தமிழ்நாடு என்றைக்கும் டெல்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோல் தான் அத ப்ரூவ் பண்ணி காட்ட வேண்டியது இந்த தேர்தல்.
எல்லாம் முரட்டு பக்தர்களை கேள்விப்பட்டிருப்பீங்க முரட்டு தொண்டர்களுக்கு கேள்விப்பட்டிருப்பீங்க இந்தியாவில் நம்பர் ஒன் முரட்டு அடிமை யாரு எடப்பாடி பழனிச்சாமி என பேசினார்.
உடன் இந்த பிரச்சிரத்தின் போது மாவட்ட செயலாளர் தேவராஜ், நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: திமுக வாக்குறுதிகள் தரமா இருக்கும்… BJP பாதம் தாங்கி EPS..! லெஃப்ட் ரைட் வாங்கிய முதல்வர் ஸ்டாலின்..!!