×
 

"வைகையை விட அழுக்கு உதயநிதி பேச்சு"..! அவ்ளோ மோசம்... அண்ணாமலை தாக்கு.!

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சை அண்ணாமலை விமர்சனம் செய்தார்.

தஞ்சாவூரில் திமுக சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பனகல் கட்டிடம் அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், இளைஞர் அணி உள்ளிட்ட துணை அமைப்புகளின் உறுப்பினர்கள் மற்றும் விவசாயச் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ஆடிப்பெருக்கு தினத்தில் காவிரி வறண்டு போய் இருப்பதாக குற்றம் சாட்டினார். நிர்வாகத் திறனற்ற அரசாக தமிழக வெற்றி கழக அரசு இருப்பதாக தெரிவித்தார். குருவை சாகுபடி முழுவதுமாக பொய்த்து போய்விட்டது என்று தெரிவித்தார். ஆகஸ்ட் மாதம் வந்துவிட்டது என்றும் இதுவரை காவிரி நீர் வந்து சேரவில்லை என்றும் தெரிவித்தார்.

ஆட்சி அமைத்து மூன்று மாதங்கள் ஆகியும் முதல்வர் வாயிலிருந்து பாஜக என்ற வார்த்தை வரவில்லை என்ற குற்றம் சாட்டிய உதயநிதி ஸ்டாலின், மகாராஷ்டிராவில் தமிழக விவசாயிகள் துரத்தியடிக்கப்பட்ட பின் முதல்வர் விஜய் வாய் திறக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். கர்நாடகா செல்வதாக நாடக ஒன்றை முதல்வர் விஜய் ஆடியதாகவும் அரை நூற்றாண்டுகளாக நடைபெறும் சட்டப் போராட்டம் என்பதால் கர்நாடகா செல்ல வேண்டாம் என்ற முதலமைச்சர் கூறினோம் எனவும் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: வைகை ஆற்றை சுத்தப்படுத்தும் WE THE LEADERS அமைப்பு..! 80 மரக்கன்றுகளை நடும் அண்ணாமலை..!

முதல்வர் விஜய் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்த போது அருகில் இருந்து ஒரு நடிகையின் பெயரை கூறியுள்ளார்கள். அதற்கு உதயநிதி ஸ்டாலின் சிரித்தபடியே எங்கு தண்ணீர் வரவில்லை என்றாலும் அங்கு தண்ணீர் வர வேண்டும் என்ற வார்த்தையை கூறினார்.

தனிப்பட்ட வாழ்க்கை, ஆதாரம் அற்ற குற்றச்சாட்டுகள் என உதயநிதியின் பேச்சுக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது. இந்த நிலையில் we the leaders அமைப்பின் தலைவர் அண்ணாமலை உதயநிதி பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தார். நேற்று வைகை ஆற்றை சுத்தம் செய்தபோது, "இதைவிட மோசமான மாசு இருக்க முடியுமா?" என்று தோன்றியது., பிறகு உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சைக் கேட்டேன்… என்று கூறியுள்ளார். 

இதையும் படிங்க: கன்னியாகுமரி கடற்கரையில் களமிறங்கிய அண்ணாமலை! 'வீ தி லீடர்ஸ்' மூலம் புதிய முயற்சி! குவிந்தது கூட்டம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share