×
 

ஹப்பாடா! வர்த்தகப்போர் இனி இல்லை! பங்காளி சண்டையை மறந்து அமெரிக்கா, சீனா பேச்சுவார்த்தை!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இந்த வாரம் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

அமெரிக்க நலன்களுக்கே முன்னுரிமை என்ற கோஷத்துடன் கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற தோ்தலை எதிா்கொண்டு வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப், நாட்டின் அதிபராக ஜனவரி 20-ஆம் தேதி பொறுப்பேற்றாா். அதிலிருந்தே, தனது தோ்தல் பிரகடனத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் பல்வேறு அதிரடி உத்தரவுகளை அவா் பிறப்பித்து வருகிறாா்.

அதன் ஒரு பகுதியாக, இந்தியா உள்ளிட்ட நாடுகள் தங்களுக்கு எந்தெந்த விகிதங்களில் வரி விதிக்கின்றனவோ, அதே விகிதங்களில் அந்த நாடுகளின் பொருள்கள் மீதும் (சற்று தள்ளுபடியுடன்) வரி விதிப்பதாக அறிவித்து அதிா்வலையை ஏற்படுத்தினாா் டிரம்ப்.

அப்போது அவா் வெளியிட்டுள்ள பட்டியலின்படி, சீன பொருள்கள் மீது 34 சதவீதம் கூடுதல் வரி அறிவிக்கப்பட்டது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த சீனா, பதிலுக்கு அமெரிக்க பொருள்கள் மீது கூடுதலாக 34 சதவீத வரி விதிக்கப்படும் என்றும், ஏப். 10-ஆம் தேதி அது அமலுக்கு வரும் என்றும் அறிவித்தது. அதையடுத்து, சீன பொருள்கள் மீது மேலும் 50 சதவீதம் வரி விதிப்பதாக டிரம்ப் அறிவித்தாா். இதன் மூலம், டிரம்ப்பின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் மட்டும் சீன பொருள்கள் மீது விதிக்கப்பட்டுள்ள கூடுதல் வரி விகிதம் 104 சதவீதமாக அதிகரித்தது.

இதையும் படிங்க: உக்ரைன் மீது ரஷ்யா பதில் தாக்குதல்! 5 பேர் பலி.. இது சாம்பிள் தான்! ருத்ரதாண்டவத்துக்கு தயாராகும் ரஷ்யா..!

இதற்குப் பதிலடியாக, ஏப். 10-ஆம் தேதி அமலுக்கு வரவிருக்கும் 34 சதவீத கூடுதல் வரி விதிப்பை 84 சதவீதமாக சீனா தற்போது உயா்த்தியுள்ளது. இதற்கு பதிலடியாக சீனாவுக்கு 125 சதவீதம் வரி வதிப்பதாக அமெரிக்கா புதன்கிழமை அறிவித்தது.

இதனை அடுத்து சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 145% வரியை விதித்தார் ட்ரம்ப். இதற்கு போட்டியாக சீனாவும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிகபட்ச வரியை விதித்தது. அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான இந்த வர்த்தக மோதல் சர்வதேச அளவில் ஒரு நிலையற்ற தன்மையை ஏற்படுத்தியது. சர்வதேச பொருளாதாரமும் ஸ்தம்பித்து போனது. 

உலகின் இரு பெரும் பொருளாதார சக்திகளான அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பொருளாதாரப் போா் பதற்றம் புதிய உச்சத்தை அடைந்தது. இந்த சூழலில் முதற்கட்ட நடவடிக்கையாக அமெரிக்கா மற்றும் சீனா இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இரு நாடுகளும் 90 நாட்களுக்கு இந்த வரி விதிப்பை நிறுத்தி வைப்பதற்கு ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. இந்த 90 நாட்களுக்கும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி 30 சதவீதமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்காவை பொறுத்தவரை அமெரிக்காவுக்கு தேவையான பெரும்பாலான பொருட்கள் மற்றும் அமெரிக்காவின் பெரும்பாலான பிராண்டுகளுக்கான பொருட்கள் சீனாவில் தான் உற்பத்தி செய்யப்பட்டு அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. டிரம்ப்-ன் முதல் ஆட்சியில் அமெரிக்க நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்ட நெருக்கடி காரணமாக சீனா +1 என்ற ஒரு கொள்கை உருவானது. இந்த கொள்கையின் மூலம் சீனாவில் உற்பத்தி மையம் வைத்திருக்கும் அனைத்து அமெரிக்க நிறுவனங்கள் சீனாவிற்கு வெளியே ஒரு உற்பத்தி மையம் உருவாக்க வேண்டிய நிலை உருவானது.

திடீரென சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு டிரம்ப் நிர்வாகம் 145% இறக்குமதி வரியை விதித்ததால் அமெரிக்காவை சேர்ந்த பல நிறுவனங்களும் சீனாவில் இருக்கும் ஆலைகளை மொத்தமாக கைகழுவிட்டு இந்தியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளுக்கு மொத்தமாக மாற்றி விடலாம் என முடிவெடுத்திருந்தன.

இந்நிலையில், வர்த்தக பதட்டங்களைத் தணிப்பது குறித்து, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இந்த வாரம் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. வரி விதிப்பிற்கு முற்றுப்புள்ளி வைப்பது, உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் கூறியதாவது: வர்த்தக பதட்டங்களைத் தணிப்பது குறித்து, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். அதிக வரி விதிப்பு மற்றும் பிற வர்த்தக பிரச்னைகளை தீர்க்க முக்கிய முடிவு எடுக்கப்படும், என்றார்.

இதையும் படிங்க: அமெரிக்காவில் கொடூர தாக்குதல்.. நம் மண்ணில் பயங்கரவாதத்திற்கு இடமில்லை கொந்தளிக்கும் சசிதரூர்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share