×
 

கதர் சட்டை கிழியும் அளவுக்கு காங்கிரஸில் பிரச்சனை… திமுக எதையும் கண்டுக்கல..!! வைகோ பேட்டி..!!!

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் விவகாரம் குறித்து வைகோ கருத்து தெரிவித்தார்.

திமுக கூட்டணியில் இன்று தேமுதிக இணைந்து விட்டது. அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டும் இருக்கிறது. ஸ்டாலினை நேரில் சந்தித்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூட்டணி உறுதி செய்துள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் இணைந்து விட்டதாக கிடைத்த செய்தி தித்திப்பான செய்தி என்றும் மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி எனவும் கூறினார். தேமுதிகவை மகிழ்ச்சியுடன் வரவேற்பதாக வைகோ தெரிவித்துள்ளார். இதன் மூலம் கூட்டணி இன்னும் வலிமை பெறும் என்று தெரிவித்தார். தேர்தல் வெற்றி ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு விட்டதாகவும் கூறியுள்ளார்.

தற்போது தேமுதிகவும் தங்கள் கூட்டணியில் இணைந்து இருப்பதால் எங்கள் கூட்டணி பலமடைந்து கொண்டிருப்பதாகவும் அதிமுக கூட்டணி கலகலப்பு போய்க் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து மாணிக்கம் தாகூர் விவகாரம் குறித்து பேசிய வைகோ, கூட்டணி தர்மத்தில் நெருடல் ஏற்படுத்தக்கூடிய வார்த்தைகளை அவர் பயன்படுத்துவதாகவும், திருப்பி அடிப்போம் என்று கூறி வருவதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஆட்சியில் பங்கா?... திமுகவிடம் எதுவும் எடுபடாது... பலமாக சிரித்த படி காங்கிரஸுக்கு பதிலடி கொடுத்த வைகோ...!

காங்கிரஸ் ஆரம்ப காலத்தில் இருந்தே பல உட்கட்சி பிரச்சினைகள் இருந்ததாகவும் கதர் சட்டைகள் கிழியும் அளவிற்கு பிரச்சனைகள் இருந்ததாகவும் தெரிவித்தார். தற்போது மாணிக்கம் தாகூர் பேசி இருப்பதற்கு கோபண்ணா கண்டனம் தெரிவித்திருப்பதாகவும், பல்வேறு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கண்டித்து இருப்பதாகவும், செல்வப் பெருந்துறை அதனை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதாகவும் கூறினார். இதனை திமுக பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: விடுதலை புலிகள் மீதான தடையை நீக்க கோரிய வழக்கு…! வாதாட வைகோ ஆஜர்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share