×
 

"மலை முழுங்கி மகாதேவன் ஆச்சே..." - செந்தில் பாலாஜியை சிங்கிள் பாயிண்டில் டேமேஜ் செய்த வைகோ...!

அமைச்சர் கீரத்தனா  பள்ளி ஆய்வு சர்ச்சை குறித்து கேட்டதற்கு என்ன நடந்தது என்ற முழு விவரம் எனக்கு தெரியாது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சத்திரப்பட்டி கிராமத்தில் 97 ஏக்கர் பரப்பளவு உள்ள  சீமைகருவேல மரங்கள் அகற்றும் பணிகளை மதிமுக பொதுச் செயலாளர்  வைகோ  தொடங்கி வைத்தார்.  தலையில் தலப்பை கட்டி, மரம் அறுக்கு இயந்திரத்தை வைத்து, சீமைகருவேவ மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டார். மேலும் ஜேசிபி இயந்திரத்தை இயக்கி சீமை கருவேல மரத்தை அகற்றினார். 

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, தவெக ஆட்சியில் இடம் பெற்றிருந்தாலும் மு.க.ஸ்டாலின்  கருத்து பரிமாற்றம் தொடர்வதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறியதற்கு கேட்டதற்கு   அது நோபல் பரிசு  கொடுக்க வேண்டிய கருத்து அவ்வளவு தான் என்றார்.

அமைச்சர் கீரத்தனா  பள்ளி ஆய்வு சர்ச்சை குறித்து கேட்டதற்கு என்ன நடந்தது என்ற முழு விவரம் எனக்கு தெரியாது. எதை வேண்டுமானாலும் சொல்லி, இந்த அரசு மீது பாயலாம் என்று நினைக்கின்றனர். என்ன நடந்தது என்ற முழு விவரம் தெரியாமல் அதை பற்றி நான் கருத்து கூற முடியாது என்றார்.

இதையும் படிங்க: அமைச்சரவை ஒரு பக்கம்... கூட்டணி இன்னொரு பக்கமா.? நோபல் பரிசு குடுங்க... திருமா. பேச்சை கிண்டலடித்த வைகோ..!!

குதிரை பேரதிற்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி  கூறுவதை பற்றி  கேட்டதற்கு, செந்தில் பாலாஜியா  ஹா ஹா ஹா, மலை முழங்கிய மகாதேவன் ஆயிற்றே அவர். அவர் மேல் எவ்வளவு ஊழல் குற்றச்சாட்டு வந்தது.குதிரையை கண்டுபிடித்தது திமுக தான். வரும்போது கம்பம் சட்டமன்ற தொகுதியில் இருந்து மதிமுக எம்எல்ஏ வை ராஜினாமா செய்ய வைத்து திமுக சார்பில் நிற்க வைத்து  அவரை சட்டமன்ற உறுப்பினராக ஆக்கியதே திமுக தான். இது பெருச்சாளி பேரமா.. நீங்கதான் அதற்கு வழி காட்டினீர்கள்  

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு த. வெ. கவில் சேர்ந்த அதிமுகவினரை தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று கோரிக்கை வைத்துள்ளனர். அதை தடுக்க தேர்தல் ஆணைய விதிமுறைகளில் எவ்வித இடமும் இல்லை. அவர்கள் நிற்கிறார்களோ இல்லையோ என்று எனக்கு தெரியாது ஆனால் இருப்பதை தடுக்க முடியாது  சட்டப்படி என்றார்

அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி மகாமக அறிவாளி. அவர் சொல்வது  சொல்வது எல்லாம் புல்லரிக்க வைக்கும். அவர் இன்னொரு செல்லூர் ராஜு . அதனால அண்ணன் எடப்பாடி பழனிசாமிக்கு நான் எந்த கருத்து கூற முடியாது  

கர்நாடகாவில் தமிழர்கள் அதிகமாக உள்ளனர். ஆத்திரத்தில் அவர்களின் வீடுகள் மற்றும் தமிழர்களை அடிப்பார்கள். வாட்டாள் நாகராஜ் போல  நிறைய வாட்டர் பையங்க அங்க நிறைய இருக்கிறார்கள். பதிலுக்கு கர்நாடக மக்களை அடிக்கக்கூடாது . இப்போது பந்து அறிவித்துள்ளார்கள்அதற்கு பிறகு  தமிழர்களை தாக்கத் தொடங்குவார்கள். அதற்கெல்லாம் முழு காரணம் பிரதமர் நரேந்திர மோடி அரசு தான் என்று குறை சொல்வோம். 

 கூட்டணியில் இருந்த போது ஏன் இவ்வளவு கேள்வி கேட்கவில்லை என்று கேட்கின்றனர் . கூட்டணிக்குள் இருந்து கொண்டு பேசுவது கூட்டணி தர்மம் கிடையாது. நான் விமர்சிக்கவில்லை.  சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று நினைத்தேன் ஆனால் தேர்தலில் போட்டியிடவில்லை என்றால்  கட்சியின் பதிவு ரத்து செய்யப்படும் என்பதால் தேர்தலில் போட்டியிட்டோம். இல்லையென்றால் நிச்சயமாக முன்பு முடிவு எடுத்தது போல தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று முடிவெடுத்து இருந்தோம். மதிமுக பொது குழுவில் உறுப்பினர்கள் வெடித்து விட்டனர். திமுக கூட்டணியிலிருந்து விலகுகிறோம் என்ற சொன்ன மாத்திரத்தில் அரங்கம் இடிந்து விழும்  வகையில் கைதட்டினர். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 34 தொகுதிகளில் நான் தேர்தல் பிரச்சாரம் செய்து எனது கடமையை செய்தேன். தவெக அரசுக்கு வரும் விமர்சனங்களை தடுத்து நிறுத்தி,  விமர்சனங்கள் செய்தவர்கள் மீது திருப்பிவிடும் கேடயமாக மதிமுக இருக்கும் என்றார்

இதையும் படிங்க: திமுகவுக்கு விழுந்த சாட்டையடி... டெல்லி வரை சென்றும் சறுக்கல்... உற்சாகத்தில் துள்ளி குதிக்கும் வைகோ...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share