×
 

MLA அமுல் கந்தசாமி மறைவு..! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு..!

எம்எல்ஏ அமுல் கந்தசாமி மறைவையடுத்து வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் அன்னூரை சேர்ந்த அமுல் கந்தசாமி வால்பாறை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும், அதிமுகவில் எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில துணை செயலாளராகவும் பணியாற்றி வந்தார். சிறுவயது முதலே அதிமுகவில் இருந்து வந்த அவர், ஒருமுறை மாவட்ட ஊராட்சி துணைத் தலைவராகவும், ஒருமுறை மாவட்ட கவுன்சிலராகவும் பணியாற்றி உள்ளார். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவியும், சுபநிதி என்ற மகளும் இருக்கின்றனர்.

சொந்த தொகுதியில் போட்டியிடாமல் வால்பாறை தொகுதியில் போட்டியிட்டாலும், சுமார் 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஐ வேட்பாளர் ஆறுமுகத்தை வீழ்த்தி வெற்றிபெற்றவர் அமுல் கந்தசாமி. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பாக முதல் வெற்றியை பதிவு செய்த எம்எல்ஏ அமுல் கந்தசாமி தான். இந்த நிலையில், வால்பாறை தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி உடல்நல குறைவால் உயிரிழந்தார். கடந்த இரண்டு மாதங்களாக உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 21 ஆம் தேதி உயிரிழந்தார்.

இந்த நிலையில் வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சட்டப்பேரவை செயலகம் வெளியிட்டுள்ளது.

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share