×
 

கூட்டணி முறிவுக்கு 100% திமுக தான் காரணம்... விஜயை குறைத்து மதிப்பீட்டீங்க..! திருமா. தாக்கு!!

திமுகவுடன் ஆன கூட்டணி முடிவு குறித்து திருமாவளவன் விளக்கம் கொடுத்தார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நீண்ட காலமாக திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்று வந்தது. சாதி ஒழிப்பு, சமூக நீதி, மதச்சார்பின்மை ஆகிய கொள்கைகளை முன்னிறுத்திச் செயல்படும் இந்தக் கட்சி, பல ஆண்டுகளாக திமுகவுடன் இணைந்து தேர்தல்களில் போட்டியிட்டு வந்தது. 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்று நான்கு தொகுதிகளை வென்றது. 2024 மக்களவைத் தேர்தலிலும் திமுக கூட்டணியின் ஒரு பகுதியாகச் செயல்பட்டு இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் மாநிலக் கட்சி அங்கீகாரத்தையும் பெற்றது. 2026 சட்டமன்றத் தேர்தலிலும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இணைந்து எட்டு தொகுதிகளில் போட்டியிட்டது. அந்தத் தேர்தலில் இரண்டு தொகுதிகளை வென்றது.2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து 108 தொகுதிகளை வென்றது. ஆனால் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மைக்கு சில தொகுதிகள் குறைவாக இருந்தன.

இந்தச் சூழலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவை தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளித்தன. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிபந்தனையற்ற ஆதரவை அறிவித்தது. இதன் மூலம் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைக்க முடிந்தது. விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.ஆரம்பத்தில் ஆதரவுக் கட்சியாக இருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, பின்னர் அமைச்சரவையில் இடம்பெறும் முடிவை எடுத்தது.

இதையும் படிங்க: மிசாவில் சித்ரவதையை அனுபவித்தவர் மு.க.ஸ்டாலின்! அந்த வரலாற்றை மறக்க முடியாது என திருமாவளவன் பேட்டி!

கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் உள்நாட்டு விவாதங்களுக்குப் பிறகு இந்த முடிவை எடுத்ததாகத் தெரிவித்தனர். சமூக நீதித் துறை உள்ளிட்ட பொறுப்புகளை ஏற்றுக்கொண்டனர். இதனால் கட்சி ஆட்சியில் பங்கு பெறும் நிலைக்கு வந்தது.இந்த மாற்றத்திற்குப் பல காரணங்கள் இருந்தன. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் சூழல், ஆட்சி அமைப்பில் பங்கு பெறும் வாய்ப்பு, சமூக நீதி மற்றும் மதச்சார்பின்மை கொள்கைகளை முன்னெடுக்கும் வாய்ப்பு ஆகியவை முக்கியமாகக் கருதப்பட்டன. 

தர்மபுரியில் திருமண விழா ஒன்றில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். தொடர்ந்து பேசிய அவர், கூட்டணியை விட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியேற 100% திமுக தான் காரணம் என திருமாவளவன் தெரிவித்தார். கூட்டணி உடைவதற்கு திமுகவின் அணுகுமுறை தான் காரணம் என்று தெரிவித்தார். கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் விஜய் மீது வழக்கு பதியாதது ஏன் என்றும் விஜய்யை குறைத்து மதிப்பிட்டதே தோல்விக்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணி கட்சிகளுக்கு மட்டும் விஜய் அழைப்பு விடுத்ததால் திமுகவை தனிமைப்படுத்தும் முயற்சி என சந்தேகப்பட்டதாக தெரிவித்தார். விஜய் மீது அன்று நம்பிக்கை இல்லை என்றும் இன்று நம்பிக்கை வந்து விட்டது எனவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இடதுசாரிகளை தொடர்ந்து தான், தமிழக வெற்றி கழகத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு அளித்ததாக திருமாவளவன் விளக்கம் கொடுத்தார்.

இதையும் படிங்க: முதல்வர் விஜயின் உடல் மொழி சர்ச்சை... கண்ணியமான அணுகுமுறை இல்லை... திருமா. காட்டம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share