×
 

பாலியல் புகாரில் சிக்கிய வளசரவாக்கம் டாக்டர் விபரீத முடிவு! மன உளைச்சலால் உயிரை மாய்த்துக் கொண்ட சோகம்!

பாலியல் புகாரில் சிக்கிய வளசரவாக்கத்தைச் சேர்ந்த மருத்துவர், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை: வளசரவாக்கம் ஆழ்வார் திருநகர் வீரப்பா நகரைச் சேர்ந்த 59 வயதான மருத்துவர் உல்லாஸ், பாலியல் தொல்லை புகாரில் சிக்கிய மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முகப்பேர் மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனையில் பணியாற்றி வந்த உல்லாஸ், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 15 நாட்களாக வீட்டில் ஓய்வில் இருந்தார். நேற்று அவரது வீட்டு படுக்கையறையில் சுயநினைவின்றி கிடந்ததை வீட்டு ஊழியர்கள் கண்டு, உடனடியாக அவரது மனைவி மோனாவுக்கு தகவல் தெரிவித்தனர். மோனா போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார்.

ஆம்புலன்ஸ் மூலம் உல்லாஸை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் ஏற்கெனவே உயிரிழந்திருப்பது தெரியவந்தது. முதலில் மாரடைப்பு எனக் கூறப்பட்ட நிலையில், பின்னர் கழுத்தில் தெரிந்த காயங்களைக் கண்டு மருத்துவர்கள் தற்கொலை என போலீசாரிடம் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: என் ரூமுக்கு தனியா வா!! கொஸ்ட்டீன் பேப்பர் தரேன்!! மாணவியிடம் அத்துமீறிய கல்லூரி பேராசிரியர் கைது!

வளசரவாக்கம் போலீசார் மனைவி மோனாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது மோனா, “கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பிரச்னை பெரிதாகுமோ என அச்சத்தில், கார் ஓட்டுநர் சதீஷ் உயிரிழந்ததாக முதலில் தவறாகக் கூறினார்” என ஒப்புக்கொண்டார்.

விசாரணையில் முக்கிய தகவல் வெளியானது. 2024-ம் ஆண்டு உல்லாஸ் பணியாற்றிய மருத்துவமனையில் தொழில்நுட்பப் பணியாளராக இருந்த பெண் ஒருவர், அவருக்கு எதிராக பாலியல் தொல்லை புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் திருமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, தற்போது மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கால் ஏற்பட்ட தொடர் மன உளைச்சலே தற்கொலைக்கு காரணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

உல்லாஸ் மருத்துவத் துறையில் நீண்ட காலம் பணியாற்றியவர். அவரது மரணம் குடும்பத்தினரை மட்டுமல்லாமல், மருத்துவ வட்டாரத்திலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வளசரவாக்கம் போலீசார் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாலியல் புகார்கள் மற்றும் மனநலப் பிரச்னைகள் தொடர்பாக மருத்துவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் சென்னை முழுவதும் பேசப்படுகிறது.

இதையும் படிங்க: சென்னையில் மட்டும் 7 அமைச்சர்கள்!! தலைநகரில் தனிகவனம் செலுத்தும் விஜய்! பின்னணி இதோ!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share