×
 

மின்வாரியமா..? பணப்பறிப்பு வாரியமா..? அதிர்ச்சியூட்டும் பில்..! வேல்முருகன் தாக்கு..!!

மின்கட்டண கணக்கீடு பிரச்சனையை சுட்டிக்காட்டி வேல்முருகன் பல கேள்விகளை எழுப்பினார்.

மின்கட்டண கணக்கீடு பிரச்சனை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் மக்கள் பெரும் அவதியடைந்து உள்ளனர். மின்வாரிய குளறுபடிகள் மற்றும் மின் கட்டண பிரச்சனை உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டி உள்ள தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மின்சார வாரியமா அல்லது மக்கள் பணத்தைப் பறிக்கும் வாரியமா என கேள்வி எழுப்பியுள்ளார். 

200 யூனிட் இலவச மின்சாரம் என்று அறிவித்து மக்களின் கைத்தட்டலைப் பெற்ற அரசு, இன்று அதே மக்களின் கைகளில் அதிர்ச்சியூட்டும் மின்கட்டண இரசீதுகளைத் திணித்து வருகிறது என தெரிவித்துள்ளார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து, அதிகப்படியான மின்கட்டணம், சலுகைச் சரியாகக் கணக்கிடப்படாதது, கணக்கீட்டில் வெளிப்படைத்தன்மை இல்லாதது போன்ற புகார்கள் தொடர்ச்சியாக எழுந்து வருகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக, அரசின் அமைச்சர்களே விசாரணை நடைபெற்று வருவதாகக் கூறியிருக்கிறார்கள் என்றும் அப்படியிருக்க, தவறு நடந்திருக்க வாய்ப்பு இருப்பதை அரசே மறைமுகமாக ஒப்புக்கொள்கிறது எனும் பட்சத்தில், தவறால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி எப்போது கிடைக்கும் என்று கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: டாஸ்மாக்..! இரட்டை நிலைப்பாடு ஏன்.? சொல்லுங்க CM..! வேல்முருகன் தாக்கு.!

தமிழ்நாடு அரசு உடனடியாக மின் கட்டணம் வசூலிப்பதை நிறுத்தி, மின்கட்டணக் குளறுபடிகள் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் எனவும், தவறாக வசூலிக்கப்பட்ட அனைத்து தொகைகளையும் உடனடியாகத் திருப்பி வழங்க வேண்டும் எனவும், 200 யூனிட் இலவச மின்சாரச் சலுகை நடைமுறையை வெளிப்படையாக வெளியிட வேண்டும் எனவும், தவறுக்குக் காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். 

இதையும் படிங்க: கூடங்குளம் டேட்டா லீக்... யார் பொறுப்பு..? மத்திய அரசுக்கு வேல்முருகன் டிமாண்ட்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share