புஸ்ஸி ஆனந்தை ஆதரித்து தி. நகரில் விஜய் சூறாவளி பிரச்சாரம்..! ஆர்ப்பரிக்கும் தொண்டர்கள்..!!
தியாகராய நகர் தொகுதியில் வேட்பாளர் ஆனந்தை ஆதரித்து விஜய் பரப்புரை மேற்கொள்கிறார்.
சென்னையின் மையப் பகுதியான தியாகராய நகர் தொகுதி, வர்த்தகம், கலாச்சாரம் மற்றும் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. இங்கு தவெகவின் வெற்றி வாய்ப்பை உறுதிப்படுத்தும் வகையில், கழகப் பொதுச் செயலாளருமான என். ஆனந்த் அவர்கள் வீடு வீடாகச் சென்று மக்களிடம் நேரடியாக உரையாடி, அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து வாக்குகளைத் திரட்டி வருகிறார்.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில், 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தவெக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. இந்தச் சூழலில், தியாகராய நகர் தொகுதிக்கு என். ஆனந்தை வேட்பாளராக அறிவித்தது கழகத்தின் உள் நிர்வாகிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. நீண்டகாலமாக கழகத்தின் அர்ப்பணிப்புள்ள உழைப்பாளியாகவும், புஸ்ஸி ஆனந்த் என்று அழைக்கப்படும் என். ஆனந்த், தொகுதியின் பல்வேறு வட்டங்களில் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில், சென்னை தியாகராய நகர் சட்டமன்றத் தொகுதி, ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதி மற்றும் எழும்பூர் (தனி) சட்டமன்றத் தொகுதி ஆகிய தொகுதிகளில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் என்று ரோடு ஷோ மற்றும் பிரச்சாரம் நடத்துகிறார். இந்த நிலையில் தியாகராய நகர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஆனந்தை ஆதரித்து விஜய் வாக்கு சேகரித்தார்.
இதையும் படிங்க: விஜய் நேரா எதுக்கு என் தொகுதியில பரப்புரைக்கு வரணும்..? சீமான் கேள்வி..!
தியாகராய நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் விஜய் நான்கு மணி முதல் 5 மணி வரை 21 நிபந்தனைகளுடன் விஜய் பிரச்சாரம் மேற்கொள்கிறார். விஜய்க்கு மக்கள் ஒரு சாக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். பல மணி நேரமாக விஜயை காண கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் காத்திருந்த தொண்டர்கள் அவரைப் பார்த்ததும் உற்சாகம் முழக்கமிட்டனர்.
இதையும் படிங்க: ரூ.8000 கூப்பனால் பறிபோன உயிர்..! தேர்தல் என்ன சதுரங்க வேட்டையா..? விஜய் கண்டனம்..!