×
 

41 குடும்பத்தோட சாபம் சும்மா விடுமா? - சிபிஐ வலையில் சிக்கிய விஜய்... வெளியானது ஷாக்கிங் வீடியோ... !!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி தொண்டர்கள் கதறிக் கொண்டிருந்த அதே சமயத்தில், விஜய் பிரசார வாகனத்தின் மீது நின்று கொண்டு தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பதும், கூட்டத்தில் மக்கள் அலைமோதும் காட்சிகளும் ட்ரோன்கள் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 2025 செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜய் கலந்து கொண்ட கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து நீதிமன்ற உத்தரவின்பேரில், சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் விஜய் 2 முறை ஆஜராகி விளக்கம் அளித்தார். மேலும் மூன்றாவது முறையாக கடந்த 15ம் தேதி காலை 11 மணிக்கு டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விஜய் விசாரணைக்காக ஆஜரானார். 

இந்த விசாரணை 7 மணி நேரம் நீடித்தது. விசாரணை முடிந்து மாலை 6 மணி அளவில் சிபிஐ அலுவலகத்தில் இருந்து விஜய் வெளியே வந்தார். சிபிஐ கேட்ட அனைத்து கேள்விகளுக்கு விஜய் பதிலளித்ததாகவும், புதிதாக சில கேள்விகளை சிபிஐ இணைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. 

அந்த வகையில் கேள்வி குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன. நாமக்கல், கரூர் கூட்டம் ஜனநாயகன் படப்பிடிப்புக்கு பயன்படுத்தப்பட்டதா? என்ற கேள்வி சிபிஐ விசாரணையில இடம் பெற்றதாக சொல்லப்படுகிறது. மேலும் சிபிஐ அதிகாரிகள் கேட்ட பெரும்பாலான கேள்விகளுக்கு தனக்கு எதுவும் தெரியாது என்ற பதிலையே விஜய் அளித்ததாக கூறப்படுகிறது. என்ன நேரம் சொல்லி இருந்தீங்க? எத்தனை மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டீங்க? கரூர்ல பகல் 12 மணிக்கு பிரச்சாரம் என புஸ்ஸி ஆனந்த அறிவித்தது பற்றி உங்களுக்கு தெரியுமா? என கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. 

இதையும் படிங்க: நேரில் ஆஜரா..?? எலெக்ஷன் முடியும் வரை டைம் கொடுங்க..!! கோர்ட் படியேறும் விஜய்..!!

இதையும் படிங்க: விஜய் பங்கேற்கும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி..!! கட்சி தலைமை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

அப்போது விஜய், அனுமதிக்கப்பட்ட நேரத்தில் பிரச்சாரத்தை நிறைவு செய்ததாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.  குறிப்பாக அந்த கூட்டத்தை ஷூட்டிங்கிற்காக பயன்படுத்தினீங்களா?, கட்சி தரப்பில இருந்து அறிவிக்கப்பட்ட நேரம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா? சென்னையில இருந்து நீங்க கிளம்புறப்போ நேரம் இதுவாக இருந்ததா? அங்க நீங்க சென்றிருக்க வேண்டிய நேரம் என்னவா இருந்தது? போன்ற கேள்விகளையும் சிபிஐ எழுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. 

இதனிடையே கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி தொண்டர்கள் கதறிக் கொண்டிருந்த அதே சமயத்தில், விஜய் பிரசார வாகனத்தின் மீது நின்று கொண்டு தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பதும், கூட்டத்தில் மக்கள் அலைமோதும் காட்சிகளும் ட்ரோன்கள் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த காட்சிகளைத் தான் விஜய் தனது ஜனநாயகன் படத்திற்கு பயன்படுத்துவதற்காக ஷூட் செய்ததாகவும், 41 பேர் உயிரிழந்ததையடுத்து அந்த காட்சிகளை எல்லாம் டெலிட் செய்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் தனது பிரசார வாகனத்திற்குள் இருந்த காட்சிகளையும் டெலிட் செய்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஒட்டுமொத்த ஆதாரங்களையும் அழித்துவிட்டதாக நினைத்த விஜய்க்கு அங்கு தான் ட்விஸ்ட்டே ஆரம்பித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சிபிஐ அலுவலகம் சென்ற விஜயிடம் அவர் டெலிட் செய்துவிட்டதாக நினைத்த ட்ரோன்களை ரெகவர் செய்துவிட்டோம் என்பதை காட்டித் தான் சிபிஐ அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மேலும் ட்ரோன் ஷாட்டில் கூட்டத்தை காட்ட வேண்டும் என்பதற்காகவே  மனித தடுப்பு சங்கிலியை அமைத்து மக்களை வெளியே செல்ல விடாமல் தடுத்து வைத்ததாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. 

இவ்வளவு வேலத்தனம் பண்ணீட்டு ,

41 பேரை அநியாயமாக கொ×னுட்டு ..

கொஞ்சம் கூட மனசாட்சியே இத எப்ட்றா அப்படியே திமுக பக்கம் தள்ளி உட்ட @TVKPartyHQ .. 🤬🤬🤬 pic.twitter.com/uqyUrfAgE2

— Sathiya Sothanai (@Timepassna) March 19, 2026

இதுதொடர்பாக அடுத்தடுத்து சிபிஐ கேள்விகளை எழுப்ப விஜய் மழுப்பலாக பதிலளித்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பிட்ட ட்ரோன் காட்சிகளும், தகவல்களும் வெளியானது முதலே விஜயை திமுக, அதிமுக, பாஜக மற்றும் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் சோசியல் மீடியாக்களில் சரமாரியாக விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக 41 பேரின் குடும்பங்கள் விட்ட கண்ணீரும், சாபமும் சும்மா விடுமா? என விஜயை பல்வேறு தரப்பு நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர். 

இதையும் படிங்க: "எமனாகும் திமுக" ... காமுகர்களின் கூடாரமா அறிவாலயம்?.. வெளுத்து வாங்கிய தவெக..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share