×
 

#BREAKING விடிந்ததுமே அதிகாரப்பூர்வ அறிவிப்பு... பனையூரிலிருந்து கட்டளையிட்ட விஜய்... ஆடிப்போன தவெக எம்.எல்.ஏ.க்கள்...!

தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தலைமை அலுவலகத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் விஜயின் தவெக 108 இடங்களை பிடித்தது. காங்கிரஸ் கட்சியிடம் 5 இடங்கள் உள்ளன. தவெகவுக்கு அறுதி பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ் ஆதரவளித்துள்ளது. தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க 118 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில் காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்தாலும் இன்னும் பெரும்பான்மைக்கு தேவையான போதிய எம்எல்ஏக்கள் இல்லை. இந்த சூழலில் நேற்று ஆளுநர் மாளிகைக்கு சென்ற தவெக தலைவர் ஜோசப் விஜய் ஆளுநர் அர்லேகரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது தவெக மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தையும் ஆளுநரிடம் விஜய் வழங்கினார். 

அப்போது ஆட்சி அமைத்த பின்பு பெரும்பான்மையை நிரூபிப்பதாக விஜய் ஆளுநரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்எல்ஏக்கள் பட்டியலை பதவி ஏற்புக்கு முன்பே ஆளுநர் கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் போதிய ஆதரவு இல்லாததால் ஆளுநர் விஜயை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை. இதனால் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக விஜய் பிற கட்சிகளிடம் ஆதரவு கோரி வருகிறார். முதற்கட்டமாக இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஆதரவு கோரி தவெக தலைமை கடிதம் அனுப்பியுள்ளது. 

அந்த மூன்று கட்சிகளும் நாளை வரை தங்களது முடிவை அறிக்கப்போவதில்லை என்பதால், ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. மேலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே விஜய்க்கு கான்வாய் மற்றும் அவரது வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அதுவும் நேற்று இரவோடு இரவாக வாபஸ் பெறப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க: “தவெக ஆட்சி அமைக்க இடையூறு செய்ய மாட்டோம்... ஆனா...” - விஜய்க்கு ஸ்டாலின் போட்ட 2 கன்டிஷன்கள்...!

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு வருமாறு விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் விஜய் முதலமைச்சராக பதவியேற்கவிருந்த விழா ரத்தான நிலையில், எம்.எல்.ஏ.க்களுக்கு அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தவெக எம்.எல்.ஏ.க்களுக்கு விடுக்கப்பட்ட இந்த உத்தரவு மூலமாக விஜய் முதலமைச்சராக இன்று பதவியேற்கவிருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். 

இதையும் படிங்க: தமிழக முதல்வராகும் விஜய்..! தொங்கு சட்டசபை... பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share