#BREAKING: விஜய் மனு ஏற்பு..! கையெழுத்து போட்ட வழக்கறிஞரே உயிரோட இல்ல.. போர்க்கொடி தூக்கிய எதிர்க்கட்சிகள்..!!
விஜய் மனு பெரம்பூர் தொகுதியில் ஏற்கப்பட்டதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்த நிலையில் தேர்தல் பார்வையாளர்கள் மனு ஏற்கப்படுவதை உறுதி செய்தனர்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய், சென்னையின் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் தனது வேட்பு மனு ஏற்கப்பட்டது. 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான இந்த நிகழ்வு, அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தவெகவின் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை விஜய் அறிவித்த பின்னர், பெரம்பூரில் அவர் வேட்பு மனு தாக்கல் செய்த நிகழ்ச்சி, அவரது அரசியல் அறிமுகத்தின் முக்கியமான தருணமாகப் பார்க்கப்பட்டது. தவெக தலைவராக விஜய், இந்தத் தேர்தலில் தனது கட்சியின் முதல் வேட்பாளராகவே பெரம்பூர் தொகுதியைத் தேர்வு செய்தார். விஜய் வேட்பு மனுதாக்கல் செய்த நிலையில் மனுக்கள் மீதான பரிசீலனை இன்று தொடங்கியது.
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் களமிறங்கும் பெரம்பூர் தொகுதியில் வேட்பு மனு மீதான பரிசீலனை தொடங்கியது. பெரம்பூர் தொகுதியில் விஜயின் வேட்பு மனு ஏற்கப்பட்டது. பலமுறை திருத்தம் செய்து தாக்கல் செய்யப்பட்ட விஜயின் வேட்பு மனு இயக்கப்பட்டதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதே போல் பாமகவினரும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் தேர்தல் பார்வையாளர்கள்
இதையும் படிங்க: #BREAKING: விசில் போடு..! பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் வேட்பு மனு ஏற்பு..!
சென்றிருந்தனர். விஜயின் வேட்பு மனு தொடர்பாக சுயேட்சை வேட்பாளர்களும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதைத்தொடர்ந்து இரண்டாவது முறையாக விஜய்யின் வேட்பு மனு பரிசீலனை செய்யப்பட்டது. விஜய் மனுவில் கையெழுத்து போட்ட வழக்கறிஞரே உயிரோடு இல்லை எனக் கூறி வாக்குவாதம் செய்தனர். தொடர்ந்து பிரமாண பத்திரம் தொடர்பாக பிரச்சனை எழுந்த நிலையில் தேர்தல் பார்வையாளர்கள் முறையான பரிசீலனை செய்து விஜய்யின் வேட்புமனு ஏற்பதை உறுதி செய்தனர்.
இதையும் படிங்க: வில்லிவாக்கத்தில் வெற்றி உறுதி...! தவெக வாகைச் சூடும்... ஆதவ் நம்பிக்கை..!!