×
 

நாங்குநேரி இரட்டைக் கொலை..! இதுதான் சட்டம் ஒழுங்கு லட்சணமா? கொந்தளித்த விஜய்..!!

நாங்குநேரியில் நிகழ்ந்த இரட்டை கொலை சம்பவத்தை தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கண்டித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் நேற்றிரவு இருசக்கர வாகனங்களில் சென்ற 9 பேர் கொண்ட கும்பல், சாலையில் சென்றவர்கள், டீக்கடை அருகே நின்றவர்கள் மீது ஆயுதங்களால் சரமாரியாகத் தாக்கியதில் இருவர் உயிரிழந்தனர்.

இரட்டைக் கொலை மற்றும் 5 பேர் வெட்டுக் காயம் அடைந்தனர் என்று வெளியான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இந்தக் கொலைவெறித் தாக்குதல், கடும் கண்டனத்திற்கு உரியது என்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, படுகாயம் அடைந்தவர்கள் விரைந்து குணமடைய வேண்டுவதாகவும் தெரிவித்தார்.

உலக நாடுகளுடன் போட்டி போடும் ஓர் ஆட்சியில் பொதுமக்களின் உயிருக்கு உத்தரவாதம் எங்கே எனவும் கேட்டுள்ளார். இந்தியாவின் டாப் மாநிலத்தில் காவல் துறைக்குச் சட்டம் ஒழுங்கு டிஜிபி எங்கே என்றும் நம்பர்1 மாநிலம் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் ஆட்சியின் சட்டம் ஒழுங்கு லட்சணம் இதுதானா எனவும் 

இதையும் படிங்க: புதிய பாதையில் காங்கிரஸ்? ஹைதராபாத்தில் ராகுல் காந்தி - ஆதவ்... வலுக்கும் சந்தேகம்..!!

போதைக் கும்பல் சுதந்திரமாக வன்முறை நிகழ்த்த இடம் தந்த பொறுப்புமிக்க ஆட்சி இதுதானா என்றும் பொதுமக்கள் ஒவ்வொரு நாளும் புலம்பித் தவித்துக் கோபத்தில் கொந்தளித்துக் கேள்வி எழுப்பி வருவதாக விஜய் தெரிவித்துள்ளார். ஆட்சியே முடியப் போகிறது. இப்போதாவது காவல் துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் தூக்கத்தில் இருந்து எழுவாரா என்று கேள்வி எழுப்பினார். மக்கள் நலன்களை, அவர்தம் பாதுகாப்பைத் துளியும் யோசிக்காத இந்தத் தி.மு.க. ஆட்சி, வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தூக்கி எறியப்படுவது உறுதி என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். 

இதையும் படிங்க: திருச்சி காப்பகத்தில் குழந்தைகளுக்கு சித்திரவதை...!! தவெக கடும் கண்டனம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share