×
 

விஜய்க்கு டைம் குடுங்க..! ஆளுநர் நிர்பந்திப்பது முறையல்ல... CPI வீரபாண்டியன் வலியுறுத்தல்..!!

பெரும்பான்மை நிரூபிக்க விஜய்க்கு அவகாசம் வழங்க வேண்டும் என சிபிஐ வீரபாண்டியன் வலியுறுத்தினார்.

தமிழக அரசியல் களம் தற்போது மிகுந்த பரபரப்பு மற்றும் பதற்றத்திற்கு உள்ளாகியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தலைமையிலான கட்சி 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், பெரும்பான்மைக்கு இன்னும் 10 இடங்கள் குறைவாக உள்ளது. இதனால் ஆட்சி அமைக்கும் பணியில் தொடர்ந்து இழுபறி நிலவுகிறது.

ஆளுநர் மாளிகைக்கு சென்ற தவெக தலைவர் ஜோசப் விஜய் ஆளுநர் அர்லேகரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது தவெக மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தையும் ஆளுநரிடம் விஜய் வழங்கினார்.

அப்போது ஆட்சி அமைத்த பின்பு பெரும்பான்மையை நிரூபிப்பதாக விஜய் ஆளுநரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்எல்ஏக்கள் பட்டியலை பதவி ஏற்புக்கு முன்பே ஆளுநர் கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: விஜய்க்கு வழிவிட்ட மு.க.ஸ்டாலின்! அரசை அமைக்குமா தவெக?! ஆட்சி அமைக்கும் நடைமுறை என்ன?

இந்த நிலையில், தவெக சட்டமன்ற சட்டமன்றத்தில் பெரும்பான்மையின் நிரூபிக்க ஆளுநர் விஜய்க்கு அவகாசம் தர வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் வலியுறுத்தினார். விஜய் பெரும்பான்மை நிருபிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்திப்பது முறையல்ல என்று கூறினார். தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் அரசியலமைப்பு சட்டத்தை மதித்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். பதவியேற்புக்கு முன்பே தமிழக வெற்றிக்கழகம் தனது பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் என்று நிர்பந்திக்க கூடாது என்றும் ஆளுநர் அரசியலமைப்பு சட்டப்படி அவகாசம் தர வேண்டும் என்றும் கூறினார். 

இதையும் படிங்க: என் புருசன் ஏன் தோத்தாரு? துர்கா ஸ்டாலின் புலன் விசாரணை?! கொளத்தூரில் நடந்தது என்ன! பகீர் தகவல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share