×
 

மார்ச் 27க்குள் இது நடக்காவிட்டால் தமிழகமே ஸ்தம்பிக்கும்... தேர்தல் நேரத்தில் விக்கிரமராஜா விபரீத எச்சரிக்கை...!

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் வியாபாரிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றி தருவதாக எழுத்துப்பூர்வமாக வாக்குறுதி அளிக்கும் கட்சிக்கு தமிழ்நாடு வணிகர் சங்கம் ஆதரவு அளிக்கும் என்றும் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தாலும் வணிகர்கள் 2 லட்சம் ரூபாய் வரை எடுத்து செல்ல தேர்தல் ஆணையம் அனுமதி வேண்டும் என்று கோரிக்கைவிடுத்து இருப்பதாகவும் வரும் 27-ந்தேதிக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் மாவட்ட ஆட்சியர்கள் அலுவகங்கள் முற்றுகை போராட்டம், அதனை தொடர்ந்து மாநிலம் தழுவியா கடைஅடைப்பு போராட்டம் என தொடர் போராட்டம் நடத்தபடும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா  தெரிவித்துள்ளார். 

மே 5 ம் தேதி திருவாரூரில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் 43-வது வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடு நடைபெறுகிறது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் உதகையில் உள்ள வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டார்.  இந்தக் கூட்டத்தில் நீலகிரி மாவட்டத்தை வணிகர் சங்கத்தின் நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் நீலகிரி மாவட்டத்தில் நிலவி வரும் தங்கும் விடுதிகள் பிரச்சனை, உதகை குன்னூர் பகுதிகளில் மார்க்கெட் பிரச்சனை, கார்ப்ரேட் நிறுவனங்களால் வியாபரிகள் பாதிக்கபட்டு வருவது குறித்தி ஆலோசிக்கபட்டது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய விக்ரமராஜா: மே 5-ந்தேதி வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடு சிறப்பாக நடத்த முடிவு செய்து இருப்பதாகவும் உதகை, குன்னூர் மார்க்கெட் கட்டுமான பணிகளை விரைந்து முடித்து முறையாக கடைகளை ஒதுக்க வேண்டும், கூடலூர் பகுதியில் நிலவும் செக்சன் 17 பிரச்சனையால் 5 லட்சம் பேர் பாதிக்கபட்டு உள்ளதாகவும் தொரப்பள்ளி - மேற்கம்மநள்ளி தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேர போக்குவரத்து தடையால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கபடுவதை தவிர்க்க மேம்பாலம் அமைக்க வேண்டும் என்றார்.

இதையும் படிங்க: திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு!

குறிப்பாக கார்ப்ரேட் வணிக நிறுவனங்களால் தமிழகத்தில் 15 லட்சம் இது வரை மூடபட்டு இருப்பதாகவும் எனவே தமிழகத்தில் கார்ப்ரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்தை தடுக்க வேண்டும் என்றார்.மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் வியாபாரிகள் பொருட்களை வாங்க செல்ல பணத்தை கொண்டு செல்ல முடிவதில்லை என்றும் தேர்தல் ஆணையம் வியாபாரிகள் இடையே கடுமையாக நடந்து கொள்வதற்கு கண்டனம் தெரிவித்தார். 

குறிப்பாக காரில் பயணம் செய்பவரிடம் சோதனை மேற்கொண்டு பணத்தை பறிமுதல் செய்யும் தேர்தல் ஆணையம் பேருந்துகளிலும் ரயில்களிலும் விமானங்களிலும் இதுபோன்ற சோதனையை நடத்த முடியுமா? என்று கேள்வி எழுப்பிய விக்கிரமராஜா வணிகர்கள் 2 லட்சம் ரூபாய் வரை கொண்டு செல்ல தேர்தல் அனுமதிக்க வேண்டும் என்றும், அது குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கபட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். வரும் 27-ந் தேதிக்குள் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காவிட்டால் 31-ம் தேதி சென்னையில் போராட்டம் நடத்தப்படும் என்றும், அதற்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டமும், அதனை தொடர்ந்து மாநிலம் தழுவிய கடை அடைப்பு போராட்டம் நடத்தபடும் என அறிவித்தார். 

 தமிழகத்தில் கேஸ் தட்டுப்பாடு காரணமாக ஏராளமான உணவகங்கள் மூடப்பட்டு அதன் உரிமையாளர்கள் பாதிப்படைந்துள்ளதாகவும் எனவே ஒன்றிய அரசு கேஸ் தட்டுபாட்டு பிரச்சனைக்கு போர்கால அடிப்படையில் தீர்வு காண வேண்டும் என்றும் கேஸ்தட்டுபாட்டால் பாதிக்கபடும் வியாபாரிகளுக்கு மாதம் 25 ஆயிரம் ரூபாயை வழங்க வேண்டும் என்றார். மேலும் கள்ளச் சந்தையில்  சிலிண்டர்களை விற்பனை செய்தால் அவர்களை உடனடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்ற அவர் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக எந்த கட்சி எழுத்து பூர்வமாக தங்களுக்கு உறுதி அளிக்கிறதோ அந்தக் கட்சிக்கு ஆதரவு அளிக்கபடும் என்று தெரிவித்தார்.
 

இதையும் படிங்க: அதிமுக கவுன்சிலருக்கு ஆயுள் தண்டனை... கொலை வழக்கில் திருவண்ணாமலை கோர்ட் அதிரடி உத்தரவு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share