×
 

விளாத்திகுளம் +2 மாணவி கொலையில் சிக்கிய காமுகன்? - வடமாநில தொழிலாளர்களைத் தேடி குஜராத் விரைந்தது தனிப்படை...!

காற்றாலையில் வேலை பார்த்த வடமாநில தொழிலாளர்களை தேடி ஒரு தனிப்படை போலீசார் குஜராத்துக்கு சென்றுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவி கடந்த 10ம் தேதி காணாமல் போன நிலையில்  11ஆம் தேதி அருகில் உள்ள காட்டுப் பகுதியில் மாணவி கொலை  செய்யப்பட்ட நிலையில் உடல் மீட்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் உத்தரவின் பேரில் 10 தனி படைகள் அமைக்கப்பட்டு இந்த கொலை வழக்கில் தொடர்புடைய நபர்கள் யார் 
என்பது குறித்து மாணவியின் உறவினர்கள் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் அந்தப் பகுதி அருகே வேலை பார்த்த வட மாநில தொழிலாளர்கள் பள்ளி மாணவர்கள்  என சுமார் 60-க்கும்  மேற்பட்டோரிடம் விசாரணை நடைபெற்றது. 

இருப்பினும் குற்றவாளிகள் கண்டுபிடிக்க முடியாத நிலையில் இந்த வழக்கில்  சந்தேகத்தின் பேரில் 5 பேருக்கு டிஎன்ஏ மருத்துவ பரிசோதனையும் காவல்துறையினர் எடுத்து அதன் முடிவுகளுக்கு காத்திருக்கின்றனர். மேலும் 3 பேருக்கு டிஎன்ஏ மருத்துவ பரிசோதனையும் எடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: ஹார்முஸ் தடையை தாண்டிய 3வது எண்ணெய் கப்பல்..!! குஜராத் வந்து சேர்ந்த 'ஜக் லட்கி'..!!

இந்நிலையில்  வேடநத்தம் கிராமம் காட்டுப் பகுதியில் அமைந்துள்ள ஒரு காற்றாலையின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்வதில் சம்பவம் நடந்த அன்று அந்தப் பகுதியில் ஒரு இருசக்கர வாகனம் வந்து சென்றிருப்பது  காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். அந்த இருசக்கர வாகனத்தின் நம்பரை சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கண்டு பிடித்ததில், அந்த இருசக்கர வாகனம் ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் பகுதியில் இருந்து மர்ம நபரால் திருடி கொண்டுவரப்பட்டது என தெரிய வந்தது. அந்த இருசக்கர வாகனம் திருடு போயிருப்பதாக காவல் நிலையத்திலும் புகார் செய்யப்பட்டு  இருப்பதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் சென்ற காவல்துறையினர் அங்கே இருசக்கர வாகன சிசிடிவி காட்சி குறித்து ஆய்வு செய்ததில் அந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர் திருடியது தெரிய வந்தது. திருடிய இருசக்கர வாகனத்தில் மர்ம நபர் வேடநத்தம் காட்டு பகுதிக்கு எதற்கு வந்தார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதைத் தொடர்ந்து அந்த மர்ம நபரை பிடிக்க தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் காற்றாலையில் வேலை பார்த்த வட மாநில தொழிலாளர்களை விசாரிப்பதற்காக ஒரு தனிப்படை போலீசார் குஜராத்துக்கு சென்றுள்ளனர். மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை நெருங்கி விட்டதாகவும் விரைவில் கைது செய்யப்படுவர் என்ன காவல்துறை தரப்பில் கூறப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: பெரும் எதிர்ப்பார்ப்பு..! பாஜக - அதிமுக தொகுதி பங்கீடு..! EPS, பியூஷ் கோயல் நாளை வெளியிடுவார்கள் என தகவல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share