×
 

கணபதி பப்பா மோரியா..!! கண்கவரும் வகையில்.. சென்னைக்கு கம்பீரமாக வந்த விநாயகர் சிலைகள்!!

3 முதல் 5 அடி வரையிலான விநாயகர் சிலைகள் அந்தப் பகுதி சாலையோரத்தில் தற்போது கம்பீரமாக வீற்றிருக்கின்றன.

இந்துக்களின் முக்கியமான விழாக்களில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி அடுத்த மாதம் செப்டம்பர் 14ஆம் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. விநாயகப் பெருமானின் பிறந்தநாளாகக் கருதப்படும் இந்த விழா, தடைகளை நீக்கி அருள் பாலிக்கும் என்ற நம்பிக்கையுடன் தமிழகம் முழுவதும் சிறப்பாக அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும், அண்டை மாநிலங்களிலும் விநாயகர் சிலை தயாரிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

சென்னை புரசைவாக்கம் கொசப்பேட்டை பகுதியில் ஏற்கனவே பல்வேறு வகையான விநாயகர் சிலைகள் வந்து குவிந்துள்ளன. கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டின் பல ஊர்களில் இருந்து ஆர்டர் செய்யப்பட்ட இந்த சிலைகள் சாலையோரங்களில் அணிவகுத்து நிற்கின்றன. 3 முதல் 5 அடி உயரம் வரையிலான இந்த சிலைகள் கண் கவரும் வகையில் அமைந்துள்ளன. 

குழந்தை வடிவ விநாயகர், கையில் லட்டுடன் அமர்ந்திருக்கும் விநாயகர் உள்ளிட்ட பல்வேறு வடிவங்கள் பக்தர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் இந்த சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். மண் மற்றும் இயற்கை வண்ணங்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட சிலைகள் மழைநீரால் பாதிக்கப்படாமல் இருக்க பிளாஸ்டிக் கவர்களால் மூடப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன. 

இதையும் படிங்க: இந்தியாவுக்கு முக்காடு போட திட்டமா?... சி.எம்.விஜயை கடுமையாக விமர்சித்த ஆர்.பி.உதயகுமார்...!

இன்னும் சில நாட்களில் கூடுதல் சிலைகள் சென்னைக்கு வரவுள்ளதாகவும், சுமார் ஒரு வாரத்தில் முழு அளவிலான விற்பனை தொடங்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். கோயம்பேடு, மயிலாப்பூர், தியாகராயநகர் உள்ளிட்ட சென்னையின் பல முக்கிய பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. விலை ரூ.5,000 முதல் ரூ.25,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அளவு, வடிவமைப்பு மற்றும் அலங்காரத்தைப் பொறுத்து விலை வேறுபடுகிறது.

விநாயகர் சதுர்த்தி அணுகும் வேளையில் இந்த சிலைகளைப் பார்த்து ரசித்துச் செல்லும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பக்தர்கள் தங்களது வீடுகள் மற்றும் சமுதாய பூஜைகளுக்காக ஏற்ற சிலையைத் தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். விழாவை முன்னிட்டு சென்னையில் விநாயகர் வழிபாடு மேலும் சிறப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

இதையும் படிங்க: அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்.? வாக்குறுதி என்ன ஆச்சு CM..! வலுக்கும் கண்டனம்.!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share