×
 

சூரியனை வெல்ல யாராலும் முடியாது! நெல்லையில் ஓ. பன்னீர்செல்வம் அதிரடி பேச்சு!

தொடர்ந்து விசில் சத்தம் கேட்டுக் கொண்டிருக்கிறது.விசில் சத்தம் கேட்டாலே மாபெரும் வெற்றி அடையப் போகிறோம் என்பதுதான் நிலை நெல்லையில் ஓ. பன்னீர்செல்வம் பேச்சு.

திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று மதுரை சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ஓ. ரவீந்திரநாத் ஆகியோர் கலந்துகொண்டனர். சமீபத்தில் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த பின், தென் மாவட்டங்களில் அவர்கள் மேற்கொண்ட மூன்று நாள் பிரச்சாரப் பயணம் இன்று நெல்லையில் நிறைவடைந்தது.

எங்களைத் தாய் கழகமான திமுகவில் இணைத்துக் கொண்டதற்கு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். தேர்தல் வாக்குறுதிகளை 100% நிறைவேற்றிய ஒரு முதல்வர் உண்டென்றால் அது ஸ்டாலின் தான். ஆணவப்போக்காலும் சர்வாதிகாரத்தாலும் பொதுச்செயலாளர் பதவியைப் பறித்துக்கொண்ட எடப்பாடிபழனிசாமி, இதுவரை 11 தேர்தல்களில் தோல்வியைச் சந்தித்துள்ளார். இப்போது இருப்பது அதிமுக அல்ல, அது எடப்பாடி முன்னேற்றக் கழகம்.

கூட்டத்தில் தொடர்ந்து விசில் சத்தம் கேட்டதைக் குறிப்பிட்ட ஓபிஎஸ், தொடர்ந்து விசில் சத்தம் கேட்கிறது. விசில் சத்தம் கேட்டாலே நாம் மாபெரும் வெற்றி அடையப் போகிறோம் என்றுதான் அர்த்தம் என உற்சாகமாகப் பேசினார். ஒன்பது கோள்களில் மிகவும் சக்தி வாய்ந்தது சூரியன். அந்தச் சூரியனை (திமுகவை) வெல்ல எவராலும் முடியாது எனப் புகழாரம் சூட்டினார்.

இதையும் படிங்க: விசுவாசத்திற்கு ஓபிஎஸ்..! துரோகத்திற்கு ஈபிஎஸ்..! மதுரையில் எடப்பாடியை வெளுத்து வாங்கிய முதல்வர் ஸ்டாலின்!

தமிழகத்தில் திமுக தலைமையில் ஒரு வலுவான கூட்டணி உள்ளது. ஆனால் மறுபுறம் இருப்பவர்கள் தங்களை அதிமுக என்று கூடச் சொல்லிக்கொள்ள முடியாமல் NDA கூட்டணி என்று அடையாளப்படுத்துகிறார்கள். அங்குப் பெரும் குழப்பம் நிலவுகிறது. நெல்லையின் தற்போதைய எம்.எல்.ஏ (நயினார் நாகேந்திரன்) ஏன் பாஜகவிற்குச் சென்றார் என்பது உங்களுக்கே தெரியும். எடப்பாடியை முதலமைச்சராக்கப் பிடிக்காமல்தான் அவர் சென்றார். இப்போது அவர் தனது தொகுதியிலேயே நிற்க முடியாமல் வேறு இடத்தைத் தேடி அலைகிறார் என விமர்சித்தார்.

கூட்டம் முடிந்து வெளியே வந்த ஓ. பன்னீர்செல்வத்திடம், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் நடிகை நயன்தாரா குறித்துப் பேசிய சர்ச்சை கருத்து குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அந்தக் கேள்வியைக் கேட்டவுடன், எவ்வித பதிலும் சொல்லாமல் தனது தலையில் அடித்தபடி ஓபிஎஸ் காரில் ஏறிச் சென்றார்.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் உருவாக்கிய அதிமுக இப்போது 'அபகரிப்பு திமுக'வாக மாறிவிட்டது!  ஓ. பன்னீர்செல்வம் அதிரடி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share