வீ த லீடர்ஸ் அமைப்பின் இரண்டாவது மாநாடு..! அதிரும் சென்னை... அதிரடி காட்டும் அண்ணாமலை..!!
அண்ணாமலை தொடங்கிய வி த லீடர்ஸ் அமைப்பின் இரண்டாவது மாநாடு சென்னையில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னாள் தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை, கட்சியிலிருந்து விலகிய பிறகு தொடங்கிய வீ தி லீடர்ஸ் அமைப்பு தமிழக அரசியல் களத்தில் புதிய அலையை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களை ஒன்றிணைத்து, அடிமட்ட மட்டத்தில் தலைமைப் பண்புகளை வளர்க்கும் நோக்கத்துடன் துவங்கப்பட்ட இந்த இயக்கம், வெறும் அரசியல் கட்சியாக இல்லாமல் சமூக மாற்றத்தை முன்னெடுக்கும் இயக்கமாக தன்னை அறிமுகப்படுத்தியது. உறுப்பினர் சேர்க்கையில் மிகுந்த தீவிரம் காட்டிய இந்த அமைப்பு, தொடக்கம் முதலே பெரும் கவனத்தை ஈர்த்தது.
ஜூன் 2026-ல் அண்ணாமலை இந்த இயக்கத்தை அறிவித்த சில மணி நேரங்களுக்குள் 13 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக இணைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போதைப்பொருள் ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன், சமூக நீதி உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை மையப்படுத்தி செயல்படும் இந்த அமைப்பு, தமிழகம் முழுவதும் தன்னார்வலர்களை திரட்டி வருகிறது. அண்ணாமலை இதை "மக்களுக்கான இயக்கம்" என்று வலியுறுத்தி வருகிறார். இதன் இணையதளம் மற்றும் செயலி மூலம் உறுப்பினர்களை சேர்த்து, பயிற்றுவிப்பதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த இயக்கத்தின் முதல் மாநில மாநாடு ஜூலை 12, 2026 அன்று கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் "போதையில்லா பொள்ளாச்சி விழிப்புணர்வு மாநாடு" என்ற பெயரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டதாக தகவல்கள் வெளியாகின. அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், போதைப்பொருள் ஒழிப்பு இயக்கத்தை முதன்மைப்படுத்தி பேசப்பட்டது. மாநாட்டில் அவர் பேசுகையில், இளைஞர்களின் பங்கேற்பு மூலம் தமிழக அரசியலை மாற்ற முடியும் என்று வலியுறுத்தினார். மாநாட்டில் பங்கேற்றவர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்திய இந்த நிகழ்வு, அண்ணாமலையின் புதிய அரசியல் பயணத்தின் முதல் பெரிய காட்சியாக அமைந்தது.
இதையும் படிங்க: திருச்செந்தூரில் நடக்கல..!! "வீ த லீடர்ஸ்"-ன் 2வது மாநாடு தற்காலிகமாக ரத்து..!!
இந்த நிலையில் வீ தி லீடர்ஸ் அமைப்பின் இரண்டாவது மாநாடு சென்னையில் நடைபெற இருப்பதாக கூறப்பட்டுள்ளது. முதல் மாநாட்டின் வெற்றியை தொடர்ந்த இரண்டாவது மாநாட்டை சென்னையில் நடத்த அண்ணாமலை தரப்பு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. தேதி மற்றும் இடம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அண்ணாமலையின் புதிய இயக்கம்.. வடிவேலு பாணியில் கலாய்த்த தமிழக காங்கிரஸ் தலைவர்!