நிலாவுக்கு மனிதர்களை அனுப்பப்போவது எப்போது? - இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் விளக்கம்!
நிலாவிற்கு மனிதர்களை அனுப்புவது மிகப்பெரிய திட்டம் - 2040 ஆம் ஆண்டில் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டம் செயல்படும் என இஸ்ரோவின் தலைவர் வி. நாராயணன் தெரிவித்துள்ளார்.
தேனி அருகே வடபுதுப்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் பங்கேற்று பி.எட் பயிற்சி முடித்த பயிற்சி ஆசிரியர்களுக்கு பட்டமளித்து கௌரவித்தார் தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் உரையாற்றினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோவின் தலைவர் வி. நாராயணன் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், சந்திராயன்-2 செயற்கைக்கோள் வெற்றியடையாமல் போனது குறித்து கண்டறிய 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு ஒரு மாத காலமாக தூக்கம் இன்றி கடுமையாக உழைத்து 8 மாதங்களில் செய்கின்ற பணியை 1 மாதத்தில் முடித்து பின் சந்திரயான் 3 செயற்கைக்கோளை வெற்றிகரமாக நிறைவேற்றினோம்.
சந்திராயன் - 4 திட்டம் 9600 கிலோ கிராம் எடை கொண்டது. சந்திரன் 3 திட்டம் நிலவில் தரையிறங்கி 14 நாட்கள் மட்டுமே ஆய்வு செய்தது ஆனால் சந்திராயன் -4 நிலவில் இறங்கி ஆழமாகச் சென்று சாம்பில்களை எடுத்துகொண்டு மீண்டும் பூமிக்கு திரும்பும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது அதற்கான பணிகளில் செயல்பட்டு வருகிறோம்.
இதையும் படிங்க: பயங்கரவாதத்தை நிறுத்தும் வரை ஒரு சொட்டு சிந்து நீர் கிடைக்காது... வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் திட்டவட்டம்!
மேலும் சந்திராயன் 5 திட்டம், சந்திராயன் 3 போல் ஒரு லேண்டர் இது 100 நாட்கள் நிலவில் ஆய்வு செய்யும் வகையில் உருவாக்கப்படுகிறது. நிலவில் மனிதர்களை அனுப்புவது பெரிய திட்டம் 2040 ஆம் ஆண்டில் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டம் நடைபெறும் அதற்கான பணி தொடங்கி நடைபெற்று வருகிறது
இஸ்ரோவின் மூன்றாவது ஏவுதள மையம் ஶ்ரீ ஹரிஹோட்டாவில் அமைக்க உள்ளோம். இரண்டாவது ஏவு தளம் மையம் குலசேகரபட்டினத்தில் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது இதற்காக 95% இடங்களை தமிழக அரசு ஒதுக்கி தந்துள்ளது . 2026 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் குலசேகரப்பட்டினத்தில் இருந்து ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: பாகிஸ்தானே ஓடிவிடு... 3-ம் நாடுகள் மூக்கை நுழைக்க முடியாது... இந்தியா அதிகாரப்பூர்வ எச்சரிக்கை..!