×
 

#BREAKING: அருப்புக்கோட்டை அருகே பயங்கரம்... மனைவி, 2 பெண் குழந்தைகள் வெட்டிக்கொலை... ரத்த வெள்ளத்தில் கிடந்த சடலங்கள்!

குடும்ப தகராறு காரணமாக மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளை கொலை செய்துவிட்டு கணவன் போலீசில் சரணடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள திருவிருந்தாள்புரத்தை சேர்ந்தவர்கள் பூங்கொடி - சுந்தரவேலு தம்பதி. இவர்களுக்கு ஜெய துர்கா மற்றும் ஜெயலட்சுமி ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். 

இந்த நிலையில், மனைவி பூங்கொடியுடன் சுந்தரவேலுக்கு பிரச்சனை ஏற்பட்டதாக தெரிகிறது. இருவருக்கும் இடையே மோதல் முற்றிய நிலையில், குடும்பத் தகராறு காரணமாக மனைவி பூங்கொடி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் ஜெயலக்ஷ்மி மற்றும் ஜெயதுர்கா ஆகிய மூவரையும் சுந்தரவேலு வெட்டி படுகொலை செய்துள்ளார். 

இதையும் படிங்க: தலைக்கேறிய கஞ்சா போதை.. மூதாட்டியை தரதரவென இழுத்து சென்ற பகீர் காட்சி.. கம்பி எண்ணும் இளைஞர்..!

இதனை அடுத்து காவல் நிலையத்தில் நடந்ததை கூறி சுந்தரவேலு சரணடைந்துள்ளார். சம்பவம் குறித்து அறிந்த போலீசார் மூன்று பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சுந்தர வேலுவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய சம்பவ இடத்தில் மாவட்ட எஸ் பி கண்ணன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். 

கொடூரத்தின் உச்சமாக குடும்ப தகராறு காரணமாக தனது இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் மனைவியை கொலை செய்து விட்டு கணவன் போலீசில் சரணடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: பிரச்சனையை தீர்த்து வைக்க சென்ற நபர் சரமாரியாக வெட்டிக்கொலை.. திருத்தணியில் பயங்கரம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share