×
 

திரையரங்குகளை முற்றுகையிடுவோம்! தி கேரளா ஸ்டோரி - 2 படத்திற்கு தமிமுன் அன்சாரி எச்சரிக்கை!

மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொது செயலாளர் தமிமுன் அன்சாரி, சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் படங்களை தவிர்க்க வேண்டும் என திரையரங்க உரிமையாளர்களுக்கு கோரிக்கை.

பெரும் விவாதங்களை ஏற்படுத்திய ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தைத் தமிழ்நாட்டில் திரையிட முயன்றால், மிகப்பெரிய அளவில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு. தமீமுன் அன்சாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். சமூக அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் இத்திரைப்படத்தைத் திரையிடுவதைத் திரையரங்க உரிமையாளர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தி கேரளா ஸ்டோரி - 2’ திரைப்படத்தைத் தமிழ்நாட்டில் திரையிட முயற்சி மேற்கொண்டால், அனைத்து ஜனநாயக சக்திகளையும் திரட்டித் திரையரங்குகளை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்துவோம். கலவரங்களை ஏற்படுத்துவதற்குப் பெயர் திரைப்படம் என்றால், அதனை எதிர்ப்பதும் ஒரு ஜனநாயகக் கடமையாகும் என்று அவர் தனது அறிக்கையில் ஆவேசமாகச் குறிப்பிட்டுள்ளார். இத்திரைப்படத்தில் சமூக நல்லிணக்கத்தையும், பொது அமைதியையும் கெடுக்கும் வகையிலான காட்சிகளும், வசனங்களும் இடம்பெற்றுள்ளன. இது மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் முயற்சியாகும்.

இதையும் படிங்க: ஆளுநருக்கு ட்ரீட்மென்ட் தேவை! தமிழை அவமதிச்சா சும்மா இருக்க முடியாது! வழக்கு தொடர தமிமுன் அன்சாரி ஆவேசம்!

தமிழகத்தில் நிலவும் அமைதியான சூழலைப் பாதுகாக்கும் வகையில், இந்தப் படத்தை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும் எனத் திரையரங்க உரிமையாளர்களை அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஏற்கனவே ‘தி கேரளா ஸ்டோரி’ முதல் பாகம் வெளியானபோது பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், தற்போது இரண்டாம் பாகத்திற்கும் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கியுள்ளன. தமீமுன் அன்சாரியின் இந்த எச்சரிக்கை, தமிழகத் திரையரங்கு வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: "தமிழக அரசின் விருது தாயின் முத்தத்திற்குச் சமம்!! கலைஞர்களை வாழ்த்திய துணை முதல்வர்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share