×
 

உச்சக்கட்ட கொடூரம்...!! - சாக்கு மூட்டைக்குள் கிடந்த அதிர்ச்சி... ஸ்டன் ஆகிப்போன போலீஸ்...!

கிணற்றில் சாக்கு மூட்டையில் கொலை செய்யப்பட்ட பெண் சடலம் மீட்பு- அதிகாரிகள் விசாரணை.

கோவை மாவட்டம், அன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் கோப்பிராசிபுரம் பகுதியில் சாலையோரம் தனியாருக்கு சொந்தமான இடத்தில் உள்ள கிணற்றில் சாக்கு மூட்டையில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலுடன் கல் வைத்துக் கட்டி கிணற்றில் வீசி கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. அன்னூர் வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார், தீயணைப்புத்துறை அதிகாரிகளுக்கு தெரிய தெரிவித்தனர்.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றில் இருந்த சடலத்தை கயிறு கட்டி மேலே எடுத்தனர். அதில் பெண் சடலம் அழுகிய நிலையில் இருப்பதை கண்ட அதிகாரிகள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட சடலம் அழுகிய நிலையில் இருந்ததுடன், பெண்ணின் உடல் சாக்கு மூட்டையில் கட்டப்பட்டிருந்தது. மேலும், உடலுடன் கற்களும் கட்டப்பட்டிருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த பெண் கொலை செய்யப்பட்ட பின்னர், சடலம் மேலே மிதந்து வராமல் இருப்பதற்காக கற்களை கட்டி கிணற்றில் வீசியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும், அந்த பெண்ணுக்கு ஏதேனும் தகாத சம்பவங்கள் நடைபெற்றிருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சடலம் புழுக்கள் பிடித்த நிலையில் இருந்ததால், சுமார் மூன்று நாட்களுக்கு முன்பு இந்த கொலை நடைபெற்றிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

விசாரணையின் ஒரு பகுதியாக, சம்பவ இடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் குறித்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். எனினும், அந்த பகுதியில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான சிசிடிவி கேமராக்கள் மட்டுமே உள்ளதுடன், சில கேமராக்கள் செயலிழந்த நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், சம்பவம் நடைபெற்றதாக கருதப்படும் காலகட்டத்தில், அப்பகுதியில் சேதமடைந்த நிலையில் ஒரு கார் நிறுத்தப்பட்டிருந்ததாக சிலர் போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் அடிப்படையிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்த பெண் யார் என்பது இதுவரை உறுதியாக தெரியவரவில்லை. பல்வேறு காவல் நிலையங்களில் பெண்கள் காணாமல் போனதாக அல்லது கடத்தப்பட்டதாக ஏதேனும் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனவா என்பது குறித்தும் போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

பெண்ணின் அடையாளத்தை கண்டறிந்து, இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

 

 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share