×
 

கண்ணீருடன் ஓய்வை அறிவித்த ரஹானே! சர்வதேச கிரிக்கெட்டுக்கு குட் பை சொன்னார் இந்தியாவின் ஹீரோ!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், வீரருமான அஜின்கிய ரஹானே, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் மூத்த வீரருமான அஜிங்க்ய ரஹானே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவில் தனது முடிவை பகிர்ந்த ரஹானே, உணர்ச்சிவசப்பட்டு பேசியது ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியில் இடம் கிடைக்காத போதிலும், உள்நாட்டு கிரிக்கெட் மற்றும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வந்த ரஹானே, சமீபத்திய தொடரில் கொல்கத்தா அணியின் கேப்டனாக செயல்பட்டார். இருப்பினும், அந்த அணி புள்ளிப்பட்டியலில் 7-வது இடத்தைப் பிடித்து தொடரில் இருந்து வெளியேறியது. 38 வயதான ரஹானே, இந்திய அணிக்காக கடைசியாக 2023-ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்தார்.

ஓய்வு அறிவிப்பு வீடியோவில் பேசிய அவர், "ஒவ்வொரு பயணத்திற்கும் ஒரு தொடக்கமும் ஒரு முடிவும் உண்டு. சரியான நேரத்தில் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும். நான் எப்போதும் இந்த விளையாட்டை முழு நேர்மையுடன் விளையாடினேன். ஏற்ற, இறக்கங்களில் எனக்கு துணையாக இருந்த ரசிகர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி" என்று உருக்கமாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: அடுத்தடுத்து பதக்கங்களை அள்ளும் இந்தியா... காமன்வெல்த் அரங்கில் கலக்கும் வீரர்கள்! இன்று நீரஜ் சோப்ராவை நோக்கி தேசத்தின் பார்வை!

அஜிங்க்ய ரஹானே இந்திய அணிக்காக 85 டெஸ்ட், 90 ஒருநாள் மற்றும் 20 டி20 போட்டிகளில் விளையாடி மொத்தம் 8,414 சர்வதேச ரன்கள் குவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் நம்பகமான நடுவரிசை பேட்ஸ்மேனாக நீண்ட காலம் விளங்கிய அவர், அமைதியான அணுகுமுறையாலும் பொறுப்பான ஆட்டத்தாலும் தனித்துவமான இடத்தைப் பிடித்தார்.

ரஹானேயின் கிரிக்கெட் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணமாக 2020–21 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் அமைந்தது. முதல் டெஸ்டில் இந்திய அணி 36 ரன்களுக்கு சுருண்ட பிறகு, விராட் கோலி தாயகம் திரும்பிய நிலையில் கேப்டனாக பொறுப்பேற்ற ரஹானே, இளம் வீரர்களுடன் இந்திய அணியை வழிநடத்தி 2-1 என்ற கணக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க தொடரை வென்று சாதனை படைத்தார். மெல்போர்ன் டெஸ்டில் அவர் அடித்த சதம் இந்தியாவின் மறக்க முடியாத வெற்றிகளில் ஒன்றாக இன்று வரை நினைவுகூரப்படுகிறது.

அமைதியான தலைமைத்துவம், நிதானமான பேட்டிங், அணிக்காக தன்னலமின்றி போராடிய மனப்பான்மை ஆகியவற்றால் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்த அஜிங்க்ய ரஹானேவின் சர்வதேச கிரிக்கெட் பயணம் நிறைவுக்கு வந்தாலும், இந்திய கிரிக்கெட் வரலாற்றில் அவரது பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும்.

இதையும் படிங்க: உலக கோப்பையில் இந்தியாவுக்கு இரட்டை மகிழ்ச்சி... ஈஷா சிங் தங்கம், மனு பாக்கர் வெண்கலம் வென்று அசத்தல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share