2வது இன்னிங்ஸில் இந்திய அணி; ஹாரி புரூக்கால் பவுலர்களுக்கு நெருக்கடி... புஜாரா சொல்வது என்ன?
இங்கிலாந்து அணி வெற்றிக்கு மிகவும் முக்கியமான வீரராக ஹாரி புரூக் இருப்பார் என டெஸ்ட் தொடருக்கான வர்ணனையாளர் புஜாரா தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்த் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் தற்போது இந்திய அணி விளையாடி வருகிறது. 350 ரன்களுக்கு மேல் இலக்கை நிர்ணயித்தால் மட்டுமே இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற சூழலில் இந்த தொடரில் இந்திய அணிக்கு ஹாரி புரூக் மிகவும் அபாயகரமான வீரராக இருக்கப் போகிறார் என புஜாரா தெரிவித்துள்ளார்.
முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி தடுமாறிய போது ஹாரி புரூக் 99 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதில் 11 பவுண்டரி, இரண்டு சிக்ஸர்கள் அடங்கும். இந்த நிலையில் ஹாரி புரூக் குறித்து பாராட்டி பேசிய புஜாரா, நான் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது ஹாரி புரூக் அறிமுகமானார். முதல் போட்டியில் இருந்து முதிர்ச்சியை காட்டி வருகிறார். தற்போது ஒட்டுமொத்த இங்கிலாந்து அணியிலும் ஸ்டார் வீரராக உருவெடுத்திருக்கின்றார்.
இதையும் படிங்க: ஒரே இன்னிங்சில் நடந்த பல சம்பவங்கள்... தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!!
இதன் காரணமாக பொறுப்புகளை உணர்ந்து அவர் விளையாடுகிறார். அவர் ஆடிய ஷாட்டுகளை பார்த்தாலே பல வீரர்களால் அது செய்ய முடியாது என்று நமக்கு புரிய வரும். அவர் விளையாடுவதை பார்க்கும் போது ரிஷப் பண்டை பார்ப்பது போல் இருக்கின்றது. ஏனென்றால் இரண்டு வீரர்களுமே பயமின்றி விளையாடுகிறார்கள். இரண்டு வீரர்களுமே பவுலர்களின் பந்துவீச்சை சிதறடிக்கும் நோக்கத்தில் செயல்படுகிறார்கள்.
இதன் மூலம் பவுலர்களுக்கு நெருக்கடி ஏற்படுகின்றது. இதனால் தான் ஹாரி புரூக் இங்கிலாந்து அணி வெற்றிக்கு மிகவும் முக்கியமான வீரராக இருப்பார். எப்போதெல்லாம் அணி தடுமாறுகிறதோ அப்போது ஹாரி புரூக், அணியை காப்பாற்றுவார் என நினைக்கின்றேன். அது மட்டுமில்லாமல் தொடர்ந்து அதிரடியாக ஆடுவதால், அது இந்திய அணிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 7 ஆண்டுகளுக்குப் பிறகு கம் பேக் கொடுத்த கருண் நாயர்... இப்படி ஆகும்னு எதிர்பாக்கல!!