வீரேந்தர் சேவாக் குடும்பத்தில் இறங்கிய இடி..! சோகத்தில் மூழ்கிய உறவுகள்..!
இந்தியாவின் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக்கின் தம்பி. வீரேந்தர் சேவாக்கின் உடன்பிறந்தவர்கள் 4 பேர். அவருடைய இரண்டு சகோதரிகளும் அவரை விட மூத்தவர்கள்.
இந்திய அணியில் முன்னாள் தொடக்க அதிரடி ஆட்டக்காரர் வீரேந்தர் சேவாக் மீது மலைபோன்ற பிரச்சனைகள் விழுந்துள்ளன. அவரது தம்பி வினோத் சேவாக் சண்டிகர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்றத்தால் தப்பியோடிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பின்னர், சேவாக்கின் சகோதரர் சண்டிகரின் மணிமஜ்ரா காவல் நிலைய போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காசோலை மோசடி வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் வினோத் சேவாக் தப்பியோடிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். வீரேந்தர் சேவாக்கின் சகோதரர் வினோத் சேவாக் மீது ரூ.7 கோடி காசோலை மோசடி வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் அவர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியிருந்தது. ஆனால் அவர் ஆஜராகாததால், நீதிமன்றம் அவரை தப்பியோடிய குற்றவாளியாக அறிவித்தது.
இதையும் படிங்க: நியூசிலாந்தை பழி தீர்க்கும் கணக்கு பாக்கி இருக்கு..? 25 ஆண்டு கால ஏக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்குமா இந்தியா?
நீதிமன்றம் அவரைத் தப்பியோடிய குற்றவாளியாக அறிவித்தவுடன், போலீசார் வினோத் சேவாக்கைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றத்தில் ஆஜரான பிறகு, வினோத் சேவாக் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார். வினோத் சேவாக்கின் வழக்கறிஞர் ஜாமீன் மனுவை தாக்கல் செய்துள்ளார், அது விரைவில் விசாரிக்கப்படும்.
வினோத் சேவாக், இந்தியாவின் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக்கின் தம்பி. வீரேந்தர் சேவாக்கின் உடன்பிறந்தவர்கள் 4 பேர். அவருடைய இரண்டு சகோதரிகளும் அவரை விட மூத்தவர்கள். அவரது சகோதரர் வினோத் அவரை விட இளையவர். தற்போது அவரது தம்பி விரோத் சேவாக் போலீஸ் காவலில் உள்ளார்.
இந்திய கிரிக்கெட்டின் சக்திவாய்ந்த தொடக்க வீரர்களில் ஒருவராக வீரேந்திர சேவாக் இருந்து ஓய்வு பெற்றவர். அதிரடி ஆட்டத்திற்கு புகழ் பெற்றவர். எதிரணி பந்து வீச்சாளர்கள் அவரது பேட்டிங்கால் நடுங்குவார்கள். 1999 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான பிறகு, வீரேந்தர் சேவாக் அடுத்த 14 ஆண்டுகள் இந்தியாவுக்காக தொடர்ந்து கிரிக்கெட் விளையாடினார். அவர் மூன்று வடிவங்களிலும் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி தனது முத்திரையைப் பதித்தார்.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சர்வதேச அளவில் அறிமுகமான வீரேந்திர சேவாக், தனது வாழ்க்கையில் 17000 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். தனது 14 வருட கிரிக்கெட் வாழ்க்கையில், அவர் 104 டெஸ்ட் போட்டிகள், 251 ஒருநாள் போட்டிகள் மற்றும் 19 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் டெஸ்ட் போட்டிகளில் 8586 ரன்கள் எடுத்டுள்ளார். ஒருநாள் போட்டிகளில் அவர் எடுத்த ரன்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட சமமாக இருந்தது. ஒருநாள் போட்டிகளில் சேவாக் 8273 ரன்கள் எடுத்துள்ளார். வீரேந்திர சேவாக் சர்வதேச டி20 போட்டிகளில் 394 ரன்கள் எடுத்துள்ளார்.
இதையும் படிங்க: நோன்பிருக்காமல் தண்ணீர் குடித்த ஷமி ஒரு பாவி.. அல்லா மன்னிக்க மாட்டார்- ஜமாத் தலைவர் சாபம்..!