மாமன் படத்தில் ஐஸ்வர்யா செய்த சேட்டை..! மனம் திறந்த நடிகர் சூரி..!
மாமன் படத்தில் ஐஸ்வர்யா செய்த சேட்டை குறித்து மனம் திறந்துள்ளார் நடிகர் சூரி.
இயக்குநர் பிரஷாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் சூரி, ஐஸ்வர்யா லட்சுமி, ராஜ்கிரண், ஸ்வாசிகா ஆகியோர் நடித்துள்ள படம் தான் 'மாமன்'. இந்த படம் வெளியாகி குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவரது படம் வெளியான அதே நேரத்தில் நடிகர் சந்தானத்தின் 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படமும் வெளியானதால் யாருடைய படம் வெற்றி அடையும் என ரசிகர்கள் கூறி கொண்டு இருக்க, தற்பொழுது பாக்ஸ் ஆபிசில் சந்தானத்தின் படத்தை விட, நடிகர் சூரியின் மாமன் படம் அதிக வசூலை பெற்றுள்ளது.
தாய்மாமன் உறவையும் அதன் முக்கியத்துவத்தையும், அக்கா தம்பியின் உறவை குறித்தும், கணவன் மனைவியின் இல்லற வாழ்க்கைகளை குறித்தும், வெளிப்படையாக சொல்லும் திரைப்படமாகவே இப்படம் உள்ளது என மக்கள் அனைவரும் கூறி வருகின்றனர். நன்றாக இருக்கும் அக்கா தம்பியின் உறவுகளுக்கு விரிசல் விட காரணமாய் அக்காவின் மகனே இருக்கிறார்.
இதையும் படிங்க: என்ன பெத்தாரே.. முருகன் தந்தாரே..! ரசிகரை திட்டிய சூரி இப்ப எங்கு இருக்கிறார் பாருங்க..!
ஆதலால் தனது தம்பியின் வாழ்க்கையை காப்பாற்ற தனது மகனையும் தம்பியையும் பிரிக்க அக்கா செய்யும் திட்டம் ட்யூஸ்ட்களிலேயே அல்டிமேட் ஆக இருந்தது. ஆனாலும் படத்தில் பாசங்கள் சற்று அதிகமாகவே இருக்கிறது என்றும் சென்டிமென்ட் காட்சிகள் கொஞ்சம் குறைவாக தான் இருக்கிறது. படத்தில் காமெடி என்பது துளி கூட இல்லை. சண்டைக் காட்சிகள் எதற்காக வைத்தார்கள் என்று தெரியவில்லை என ஒரு சில குறைகளை ரசிகர்கள் முன் வைத்து சென்றனர். ஆனாலும் குடும்ப ஆடியன்ஸை கவர்ந்த படமாக இப்படம் இருப்பதால் அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது சூரியின் மாமன் படம்.
படத்தின் வெற்றியை தொடர்ந்து, நடிகர் சூரி, சுவாசிகா, சரவணன், ஒளிப்பதிவாளர் தினேஷ் ஆகிய அனைவரையும் குறித்து அழகான பதிவை பதிவிட்டு இருந்தார் நடிகர் சூரி. இந்த நிலையில், மாமன் திரைப்படத்தில் நடிகர் சூரியை விட முக்கிய கதாபாத்திரமாக இருந்தவர் நடிகை ஐஸ்வர்யா. அவரது நடிப்பு இந்த படத்தில் அபாரமாக இருந்தது. மேலும், இந்த படத்தில் அவர் அழகாக நடிக்க காரணம் அவர் இயற்கையாகவே டாக்டர் என்பதால் இந்த படத்தில் அருமையாக நடித்துள்ளார்.
இப்படி இருக்க நடிகை ஐஸ்வர்யாவை குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் சூரி, அதில் " ஐஸ்வர்யா லட்சுமி இந்த படத்துக்கு பெரிய ஆதரவாக இருந்தார். உண்மையில் டாக்டரா இருப்பதால, திரையில் டாக்டர் கதாபாத்திரத்தை நம்பிக்கையுடனும், இயல்பான முறையிலும் சிறப்பாக செய்திருக்கிறார். படத்தில முக்கியமான சில காட்சிகளை முழுக்க அவர் தாங்கி சென்றார். அவருடைய நேர்மை மற்றும் நல்ல மனசு அவரை இன்னும் உயரம் நோக்கி கொண்டு செல்லும். படத்தைப் பிரமோட் செய்யவும், முழு முயற்சியுடன் ஈடுபட்டதுக்கும் ஐஸ்வர்யா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி " என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மண்சோறு சாப்பிட்டா படம் ஓடுமா..? விளாசிய சூரி.. பாராட்டிய வைரமுத்து...!