×
 

பாடகர் ஜூபின் கார்க் நினைவிருக்கா.. அவர் இறப்பு திட்டமிட்ட கொலையாம்..! ஹிமந்தா பிஸ்வா சர்மா கொடுத்த ஷாக்கிங் ரிப்போர்ட்..!

பாடகர் ஜூபின் கார்க் இறப்பு திட்டமிட்ட கொலை என அசாம் மாநில சட்டசபையில் முதல்-மந்திரி பரபரப்பு தகவலை கொடுத்துள்ளார்.

அசாமைச் சேர்ந்த பிரபல பாடகர் ஜூபின் கார்க் கடந்த செப்டம்பர் மாதம் சிங்கப்பூரில் கடலில் நீச்சல் அடிக்கும் போது உயிரிழந்த சம்பவம் உலகின் கவனத்தை ஈர்த்தது. ஆரம்பத்தில் இது ஒரு ஆக்சிடேண்ட் என்றே கருதப்பட்டது, ஆனால் பின்னர் மரணத்தில் மர்மம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து அசாம் மாநில போலீஸ் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து தீவிர விசாரணையை நடத்தினது. விசாரணையின் போது, ஜூபின் கார்க் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது, இதன் பின்னர் அதிரடியாக 7 பேர் கைது செய்யப்பட்டனர். சிறப்பு விசாரணை முடிவுகளின் பின்னர், அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா சட்டசபையில் பேட்டி அளித்து, பாடகர் ஜூபின் கார்க் இறப்பு திட்டமிட்ட கொலை என அதிகாரப்பூர்வமாக உறுதி செய்தார். அவர் கூறியதன்படி, “முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு, பாடகர் ஜூபின் கார்க் இறப்பு எதிர்பாராத மரணம் அல்ல, திட்டமிட்ட கொலைதான். அசாம் போலீஸ் அனைத்து ஆதாரங்களையும் பரிசீலித்து, அது உண்மையென உறுதி செய்துள்ளது. அதனால்தான், அவர் இறந்த மூன்று நாட்களுக்குள் பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் 103-வது பிரிவு சேர்க்கப்பட்டது” என்றார்.

முதலமைச்சர் மேலும் கூறுகையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் 7 பேரில் ஒருவர் ஜூபின் கார்க்கை நேரடியாக கொலை செய்துள்ளார். மற்றவர்கள் அவருக்கு உதவியதாகவும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதில் ஒருவர் மீது நேரடி கொலை குற்றம் வருவதால், இதன் பின்னணி தீவிர விசாரணைக்கு உட்பட்டுள்ளது. பாடகர் ஜூபின் கார்க் கொலையைப் பற்றி சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. சிறப்பு விசாரணைக் குழு, குற்றவாளிகள் தொடர்பான முழுமையான ஆதாரங்களை சேகரித்து, நீதிமன்றத்தில் விளக்கமளிக்க தயாராக உள்ளது.

இதையும் படிங்க: 'கருத்தமச்சான்' பாடல் ட்ரெண்ட் தான ஆச்சு..அதுல என்னங்க உங்களுக்கு பிரச்சனை..! இளையராஜாவுக்கு டோஸ் விட்ட நீதிபதி..!

அசாமில் இதுபோன்ற பரபரப்பான கொலைவழக்கில் இதுவரை இல்லாத அளவிற்கு சமூக வலைத்தளங்களில், மீடியாவில், மற்றும் பத்திரிகைகளில் மக்கள் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர். அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா குறிப்பிட்டபடி, டிசம்பர் மாதத்தில் வலுவான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். இதன் மூலம், ஜூபின் கார்க் கொலையின் முழு பின்னணி, குற்றவாளிகள் செயல்முறை மற்றும் குற்றத்திற்கு வழிவகுத்த காரணங்கள் வெளிப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவர் குறிப்பிட்டதாவது, “இந்த வழக்கு உலகம் முழுவதும் கவனத்தை ஈர்க்கும் அதிர்ச்சிகரமான சம்பவமாக இருக்கும்” என்றார். இந்த வழக்கு மீண்டும் இந்தியாவில் மற்றும் வெளிநாட்டிலும் பரபரப்பை கிளப்பியுள்ளது. ரசிகர்கள், இசை ஆர்வலர்கள், மற்றும் மனிதநேய உரிமை அமைப்புகள் ஜூபின் கார்க் கொலை சம்பவம் குறித்த முறையான விசாரணை நடைபெறும் என்பதை எதிர்நோக்கி உள்ளனர். குறிப்பாக, திட்டமிட்ட கொலை என்ற அதிகாரப்பூர்வத் தகவல் வெளிவந்ததால், குற்றவாளிகளின் செயல்முறை, முன்னோடி திட்டங்கள் மற்றும் அவர்கள் மீதான சட்ட நடவடிக்கைகள் மீண்டும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளன.

சிறப்பு விசாரணை குழுவின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தமிழக-அசாம் போலீசாரின் இணைந்த முயற்சிகள் இந்த வழக்கின் விசாரணையை தீவிரமாக நடத்தும் வகையில் அமைந்துள்ளன. இதன் மூலம், குற்றவாளிகள் முறையாக தண்டனை பெற்றுக்கொள்ளவும், பாடகர் ஜூபின் கார்க் குடும்பத்திற்கு நீதி கிடைக்கவும் அசாம் அரசு உறுதி செய்துள்ளது. இந்த சம்பவம், இந்திய சினிமா உலகிலும் பாடகர்கள் பாதுகாப்பு, வெளிநாட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகள், குற்றவியல் விசாரணை முறைகள் மற்றும் போலீசார் நடவடிக்கைகள் தொடர்பாக மீண்டும் கவனத்தை ஈர்க்கும் விதமாக அமைந்துள்ளது.

இதன் விசாரணை முடிவுகள் வெளியான பிறகு, குற்றவாளிகள் மீது நீதிமன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, இந்த கொலையின் முழு பின்னணி வெளிப்படையானதாகும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: என்னை ஏனப்பா கஷ்டப்படுத்திறீங்க.. நான் மோசமானவன்னு சொல்றிங்களே நியாமா..! கங்கை அமரன் கதறல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share