பயமா இல்ல பயங்கரமா இருக்காரு..! ரசிகர்களை மிரள விட்ட செல்வராகவனின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!
செல்வராகவனின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் படுமாஸாக உள்ளது என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
மலையாள சினிமாவில் தனது தனித்துவமான நடிப்பால் புகழ் பெற்றவர் ஷேன் நிகம். 'பறவ', 'கும்பளாங்கி நைட்ஸ்' போன்ற படங்களில் தனது அட்டகாசமான நடிப்பால், ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியவர். இந்த இளம் திறமையான நடிகர் தற்போது தனது 25-வது படமாக உருவாகியுள்ள "பல்டி" திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் உருவாகியுள்ளது.
இது அவரது பன்முக தமிழ் பயணத்திற்கான புதிய அத்தியாயமாகவும் பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட "பல்டி" திரைப்படம் ஒரு கபடி விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. உன்னி சிவலிங்கம் இயக்கும் இப்படம், ஒரு கபடி வீரனின் வாழ்க்கை, சவால்கள், வெற்றிக்கான போராட்டம் மற்றும் சமூகத்தின் எதிர்ப்புகள் என இவை அனைத்தையும் திரையில் பிரதிபலிக்கிறது. இது ஒரு ஸ்போர்ட்ஸ் டிராமா மட்டுமல்ல.. உணர்வுகள், உறவுகள் மற்றும் உள்ளார்ந்த போராட்டங்களை வெளிப்படுத்தும் மனோதத்துவக் கதையாகவும் அமைந்துள்ளது. இப்படத்தில் ஷேன் நிகம் – கதையின் நாயகனாக, கபடி வீரனாகவும், பிரீத்தி அஸ்ரானி – கதாநாயகியாக, முக்கிய பெண் கதாப்பாத்திரத்திலும், சாந்தனு பாக்யராஜ் – சக வீரனாகவா? எதிரியாகவா? – சஸ்பென்ஸ் மேன்டெயின் செய்து வருகின்றனர். மேலும் செல்வராகவன் – 'போர்த்தமரை பைரவன்' என்ற அதிரடியான பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த சூழலில் இன்றைய தினத்தில், படக்குழு வெளியிட்ட ஒரு அதிகாரப்பூர்வ போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், நடிகரும், இயக்குனருமான செல்வராகவனின் கதாப்பாத்திரம் பற்றிய தகவல் வெளிவந்துள்ளது. அதில் "போர்த்தமரை பைரவன்" – இது அவரது கதாபாத்திரத்தின் பெயர். அந்த பெயரே ஒரு மிதக்கும் வன்மத்தையும், உள்ளார்ந்த ஆழத்தையும் வெளிப்படுத்துகிறது. இது ஒரு வில்லனா? வழிகாட்டியா? பழிவாங்கும் ஒருவனா? என்பது படம் வெளியாகும் வரை மர்மமாகவே இருக்கப்போகிறது. செல்வராகவனின் நெருப்பான கண்ணோட்டம், அடக்கி வைத்த வெறித்தனமும், ஆழ்ந்த கதாபாத்திரக் கலைப்படைப்பும் இந்த கதையின் முக்கிய அச்சமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: வெயிட்டிங்களையே வெறியேறுதே..! சூப்பர் டூப்பர் அப்டேட் கொடுத்த "டியூட்" படக்குழு...!
இந்த படம் ஆகஸ்ட் 29-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலைகளில், இந்த ரிலீஸ் தேதி சிறந்த வணிக உச்சப்புள்ளியாகவும், ஸ்போர்ட்ஸ் டிராமாக்கள் குறைவாக வெளிவரும் ஒரு ஸ்லாட்டாகவும் அமையலாம் என திரையுலக வல்லுநர்கள் கருதுகின்றனர். ஆகவே "பல்டி" திரைப்படம், ஒரு வித்தியாசமான வழியில் தமிழ் மற்றும் மலையாள திரையுலகத்தில் ஒரே நேரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு ஸ்போர்ட்ஸ், சமூகவியல் மற்றும் மனித உணர்வுகள் கலந்து உள்ள திரைப்படமாக உருவாகியுள்ளது.
ஷேன் நிகம், தமிழில் இந்த அளவுக்கு முக்கியமான கதாபாத்திரத்துடன் நடிப்பது, அவரின் ரசிகர்களுக்கு ஒரு பரிசாக அமைந்துள்ளது. மேலும் செல்வராகவனின் மாறுபட்ட, திகிலூட்டும் 'போர்த்தமரை பைரவன்' கதாபாத்திரம் படத்தின் ஹைலைட்டாக அமைவதற்கான வாய்ப்பு அதிகம். எனவே ஆகஸ்ட் 29 அன்று "பல்டி" படம் வெளியாகும் போது, இது திரையரங்குகளை மட்டுமல்ல.. ரசிகர்களின் மனங்களையும் தாக்கும் என எதிர்பார்க்கலாம்.
இதையும் படிங்க: பீடி பத்தவச்சது ஒரு குத்தமா.. கூலி படத்துல ரஜினிக்கு சிகரெட் பற்ற வைத்த சர்ச்சை - அமீர்கான் ஓபன் டாக்..!