படம்னா.. எப்படி இருக்குன்னு தெரியுமா.. உங்க படத்தை கொளுத்துங்க.. நடிகர் தனுஷ் ஆவேச பேச்சு..!
படங்களை குறித்தான தனது கருத்தை வெளிப்படையாக தெரிவித்து இருக்கிறார் நடிகர் தனுஷ்.
இன்று தமிழ்நாடு மட்டுமல்லாது அனைத்து மொழிகளிலும் பேசப்படும் ஒரே திரைப்படம் என்றால் அதுதான் தனுஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் தான் "குபேரா". ஏனெனில் அந்தத் திரைப்படத்திற்கு தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
தமிழ் திரையுலகம் மட்டுமல்லாது கோலிவுட் பாலிவுட் வட்டாரங்களில் இன்று அதிக பெயரால் ஈர்க்கப்படும் ஒரே ஒரு கலைஞர் என்றால் அவர் தான் நடிகர் தனுஷ், இவர் நடிப்பு மட்டுமல்லாது தயாரிப்பாளர், இயக்குனர், பாடகர், பாடலாசிரியர் என பல திறமைகளை தனக்குள் அடக்கி வைத்து இருக்கும் மிகப்பெரிய கலைஞர்களுள் ஒருவராக இருக்கிறார். இப்படிப்பட்ட நடிகர் தனுஷை குறித்து பார்ப்போமேயானால் இவர் ஆரம்ப காலத்தில் நடிக்க வரும் பொழுது பார்க்க ஒல்லியாகவும் முகத்தில் அழகு என்பது துளிகூட இல்லாமலும் இருந்திருப்பார்.
இதையும் படிங்க: என்னுடைய ட்ரீமே வேற.. படத்தில் நடிக்க துளியும் விருப்பமில்லை.. கண்கலங்கி பேசிய நடிகர் தனுஷ்..!
சில படங்களில் "பார்க்க மட்டும்தான் சுள்ளான் ஆனால் சூடானால் சுளுக்கு எடுத்து விடுவேன்" என்று சொல்லும் இவரது டயலாக்குகளுக்கு எல்லாம் தியேட்டரில் காமெடியாக பேசுகிறார் தனுஷ் என கிண்டலிடித்த வார்த்தைகள் மட்டுமே வந்தது. ஆனாலும் தனக்கு வந்த விமர்சனங்களை ஜெயித்து வெளியே வர நினைத்த நடிகர் தனுஷ், அதற்காக போட்ட முயற்சிகளும் உழைப்பும் மிகவும் பெரியது. இதனை அடுத்து நாளடைவில் அவருடைய திரைப்படங்கள் அனைத்தையும் பார்க்கும் ரசிகர்கள் ஒல்லியாக இருந்தாலும் பையனிடம் ஏதோ ஒரு திறமை ஒளிந்து இருக்கிறது என கண்டுபிடித்து அவருக்கு ஃபேன்ஸாக மாற ஆரம்பித்தனர்.
அவ்வளவு தான் அதற்குப் பின்பு அவர் நடித்த திருடா திருடி படம் ஆகட்டும் திருவிளையாடல், வேங்கை, படிக்காதவன், குட்டி, உத்தமபுத்திரன், நையாண்டி, த்ரீ, வேலையில்லா பட்டதாரி என அனைத்து படங்களும் ஃபேமஸ் ஆனது. இப்படி இருக்க கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக நடிகர் தனுஷ் எங்கே போனார் என அனைவரும் கேள்விகளை கேட்டுக் கொண்டிருக்கும் வேளையில் அவர் பிஸியாக இந்த 'குபேரா' படத்தில் நடித்து வந்தார்.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ், எல்.எல்.பி மற்றும் அமிகோ க்ரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிப்பில், இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில், ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் நடிகை ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜுனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க அவர்களுடன் இணைந்து நடிகர் தனுஷ் நடித்து உள்ளார் . கிட்டத்தட்ட ரூபாய் 102 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இத்திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஃபேன் இந்தியா படமாக வெளியாகி இருக்கிறது.
இப்படி இருக்க, தற்பொழுது இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் வந்த நிலையில், நேற்று ஹைதராபாத்தில் இப்படத்திற்கான வெற்றி விழா நடைபெற்றது. அதில் படத்தில் நடித்தவர்கள் முதல் பட குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு இந்த வெற்றியை கொண்டாடினர். அப்பொழுது பேசிய நடிகர் தனுஷ், " இன்று தமிழ் சினிமா மட்டுமல்லாது கோலிவுட் சினிமாக்களிலேயே ஆக்சன், பாம் ப்ளாஸ்ட், கேங்ஸ்டர்ஸ் போன்ற பெரிய படங்கள் மட்டுமே திரையரங்குகளில் ஓடும் என்ற கட்டுக்கதை அதிகமாக வளம் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் இதன் மத்திலும் 'குபேரா' போன்ற உணர்ச்சி பூர்வமான திரைப்படங்களும் திரையரங்குகளில் ஓடும் என்ற நம்பிக்கையை கொடுத்திருக்கிறது மக்களின் பங்களிப்பு.
என்னுடைய படம் மட்டுமல்ல இதே போல் சமீபத்தில் தமிழில் வெளியான "டூரிஸ்ட் ஃபேமிலி" படமும் அதிக மக்களை திரையரங்குகளுக்கு இழுத்திருந்தது. ஆதலால் எப்பொழுதுமே கேங்ஸ்டர் படமும் ஆக்சன் படங்களை மட்டுமே மக்கள் பார்க்கிறார்கள் என்ற உங்களது கட்டுக்கதைகளை தயவு செய்து மாற்றுங்கள். ஏனெனில் மக்கள் தற்போது இது போன்ற குடும்ப படங்களை மட்டுமே பார்க்க தயாராகி இருக்கிறார்கள்" என தெரிவித்தார்.
இதனைப் பார்த்த நெட்டிசன்கள், தயவு செய்து தனுஷ் நீங்களாவது இதனை புரிய வையுங்கள் குடும்ப படங்களை பார்த்தே பல நாள் ஆகிவிட்டது. ஆக்சன்களையும் சண்டை காட்சிகளையும் பார்த்து பார்த்து.. படம் பார்க்கும் ஆர்வமே போய்விட்டது" என நெட்டிசன்கள் வேதனையுடன் பதிவிட்டு வருகின்றன.
இதையும் படிங்க: என்ன இப்படி சொல்லிட்டாரு...! தனுஷின் 'குபேரா' பட இயக்குனர் பேச்சால் அதிர்ந்த ரசிகர்கள்..!