×
 

பிக்பாஸ் பிரபல நடிகை திடீர் மரணம்..! புலம்பி அழும் ரசிகர்கள்... நடந்தது என்ன..?

நடிகை ஷெபாலி ஜிரிவாலா திடீர் மரணத்தால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

கடந்த சில வருடங்களாகவே திரையுலகில் உள்ள மிகப்பெரிய ஜாம்பவான்களான நடிகர் நடிகைகள் மரணிப்பது ரசிகர்களுக்கு வேதனை அளித்து வருகிறது. குறிப்பாக நடிகர் விவேக், மனோபாலா, மயில்சாமி என ஒவ்வொருவரும் மரணிக்க ஆரம்பித்ததில் இருந்து தங்களை மகிழ்விக்க வந்த நாயகர்களின் மரணங்கள் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியாதவையாகவே இருக்கிறது. 

இப்படி இருக்க தற்பொழுது போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட  நடிகர்களை பார்த்து நீங்கள் அனைவரும் இதனை உட்கொண்டால் சீக்கிரம் மரணித்து விடுவீர்கள்.. அப்படியானால் எங்களை மகிழ்விக்கவும் உங்களையே நம்பி இருக்கும் நாங்கள் என்ன செய்வோம் என ரசிகர்கள் தங்களது வேதனைகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்பொழுது ரசிகர்களின் அதிக அளவு அன்பையும் பேர் ஆதரவையும் பெற்ற நடிகை ஒருவர் மரணித்து இருப்பது அவனைவரையும் கவலைக்குள்ளாக்கி இருக்கிறது. இப்படி பாலிவுட் சினிமாவில் மிக பெரிய நட்சத்திர நாயகியாக வலம் வந்த நடிகை தான் ஷெபாலி ஜிரிவாலா. இவர் பாலிவுட் சினிமாவில் வெளியான 'காந்தா லாகா' என்ற பாடலின் மூலம் பலரது மனதில் குடி பெயர்ந்தார். 

இதையும் படிங்க: போதை வழக்கில் அடுத்த செக் அருண்விஜய்-க்கா..! உஷாராக அவர் செய்த வேலையை பாருங்க..!

ஆனாலும் இவரை மக்கள் தங்கள் மனதில் அன்பு நாயகியாகவும் குடும்பத்தில் ஒருவராகவும் நினைக்க வைத்தது பிக்பாஸ் சீசன் 13 தான்.  இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட்கார்ட் ரவுண்டு மூலமாக உள்ளே வந்த இவர், உள்ளே நூறு நாட்களைக் கடந்து வெற்றி கண்டார். அதோடு மட்டுமல்லாமல் அங்கு இருக்கும் பொழுது வந்த ஒவ்வொரு பிரச்சினைகளையும் அவர் கையாண்ட விதங்களும் ஒரு பெண்ணாக தைரியமாக எடுத்த முடிவுகளையும் கண்ட மக்கள் அவர் மீது அதீத அன்புவைக்க ஆரம்பித்தனர். இதனால் உலகப் புகழ் பெறும் அளவிற்கு மிகவும் ஃபேமஸான இவருக்கு ரசிகர் பட்டாளம் புடைசூழ ஆரம்பித்தது.  மேலும் இவர் பிக் பாஸ்க்கு சென்று வந்த பின்னர் இவருக்கு பல திரைப்படங்கள் அடுக்கடுக்காக குவிய ஆரம்பித்தது. 

மேலும் பார்க்க அழகாகவும் மாடலிங் கெரியரிலும் இருந்த இவர் கிசுகிசுகளுக்கு தப்பாதவராகவே இருந்தார். ஆனால் அதைக் குறித்து ஒருநாளும் கவலைப்படாத அவர் தன்னுடைய சினிமா பயணத்தில் கவனமாக சென்று கொண்டே இருந்தார். இவருக்கு ஒவ்வொரு முறையும் பக்க பலமாக இருந்தவர் யார் என பார்த்தால் அவரது அன்பு கணவரான பராக் தியாகி தான். இப்படி அன்பான கணவர் அழகான குடும்பம் அட்டகாசமான ரசிகர்களை தன்னிடம் வைத்திருந்த ஷெபாலி அவ்வப்போது தனது புகைப்படங்களை instagram-ல் பதிவிட்டு வருவார்.

இந்த நிலையில் 42 வயதான இவர் நேற்று இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டதாக கூறப்படுகிறது. விவரமாக பார்த்தால் வீட்டில் இருக்கும் பொழுது அவருக்கு மாரடைப்பு ஏற்பட, அவரை அவரது கணவர் பராக் உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு அவரை காப்பாற்ற மருத்துவர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் ஷெபாலி ஜிரிவாலா.

அவருடைய இறப்புச் செய்தியை கேட்ட திரைத்துறையினர்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் சோகத்தில் ஆழ்ந்து உள்ளனர்.

இதையும் படிங்க: அழகையே பொறாமை படவைத்த பேரழகு...! பாவாடை தாவணியில் கலக்கும் ரம்யா பாண்டியன்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share