×
 

மலையாள பிட்டு படங்களுடன் என்னை வச்சு பேசுறாங்க..! சினிமாவும் வாழ்க்கையும் ஒன்னா.. நடிகை திரிஷா அப்செட்..!

தன்னை பற்றி அவதூறாக விமர்சனம் செய்கிறார்கள் என வேதனையில் கதறியுள்ளார் திரிஷா.

மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிப்பில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியாக தயாராக இருக்கும் தக்லைஃப் படத்தில் நடித்து இருக்கிறார் நடிகர் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படி இருக்க இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 5ம் தேதி பல பிரச்சனைகளை கடந்து இப்படம் வெளியானது. இப்படி இருக்க, இப்படம் வெளியாக சில நாட்களுக்கு முன்பு ப்ரமோஷன்கள் அதிகமாக செய்யப்பட்டு வந்த வேளையில் நடிகை த்ரிஷா பேட்டி அளித்திருந்தார். 

தக் லைஃப் படத்தில் தனது கேரக்டர் குறித்து திரிஷா வெளியிட்டுள்ள செய்தியில், "இந்த படத்தில் எங்களது ஜோடி திரையில் மாயாஜாலமாக இருக்கும். என்றாலும் எனது கேரக்டரை கண்டிப்பாக சிலர் விமர்சிக்கவும் செய்வார்கள். இதை எல்லாம் முன்கூட்டியே தெரிந்து தான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்கவே நான் ஒப்பு கொண்டேன். அதுமட்டுமல்லாமல் இப்படத்திற்காக "கமலும், மணிரத்னமும் எவ்வளவு புரிதலுடன் இணைந்து செயல்பட்டார்கள் என்பதை அனைத்து நடிகர்களும் கண்டிப்பாக பார்க்க வேண்டும். அது கூட ஒரு மாயாஜாலம் போல்தான் எனக்கும் இருந்தது" என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: வயசுக்கு தகுந்த மாதிரி நடிங்க கமல்... அப்பனும் பையனும் ஒரே பெண்ணோட... இதுவா சினிமா - கடுப்பான பிரபலம்

இப்படி இருக்க, அவர் சொன்னபடி படம் வெளியான பின்பு த்ரிஷாவை குறித்தும் கமல்ஹாசன் மற்றும் சிம்பு குறித்தும் பல சர்ச்சை பேச்சுக்கள் எழுந்துள்ளன. குறிப்பாக இத்திரைப்படத்தில் நடிகர் கமலஹாசன் எடுத்து வளர்த்த மகன்தான் நடிகர் சிம்பு. இப்படி இருக்க, எப்படி நாயகன் திரைப்படத்தில் நடிகர் கமலஹாசனின் ரெட் லைட் ஏரியா சீன் வருமோ அதே போலத்தான் இத்திரைப்படத்திலும் நடிகை திரிஷாவை ரெட் லைட் ஏரியாவில் இருந்து அழைத்து வந்து தனக்கு மனைவியாக அந்தஸ்தை கொடுத்து அவருடன் வாழ்ந்து வருகிறார் கமல். ஆனால் நாசரின் பிளான் படி கமலஹாசனை சிம்பு மலையிலிருந்து தள்ளிவிட்டு கொலை செய்ய முயற்சிக்கிறார். அதன் பின்பு, கமலஹாசன் இறந்துவிட்டார் என நினைத்த சிம்பு, தனக்குத் தாயாக இருக்கும் த்ரிஷாவிடமே அசிங்கமாக நடந்து கொள்வதை எல்லாம் யாராலும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை என்றே கூறலாம்.

அவர் சொன்னதை போலவே பலரும் அவரை வசைபாடி வரும் இந்த வேளையில் நடிகை திரிஷா மிகவும் வேதனையுடன் தனது கருத்துக்களை படக்குழுவினரிடம் வெளிப்படுத்தி இருக்கிறார். அதில், இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நான் நடித்த 'பொன்னியின் செல்வன்' படம் வந்த பொழுது என்னை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள். அதனாலேயே அப்படத்தில் வந்த குந்தவை கதாபாத்திரம் என் சினிமா வாழ்க்கையிலேயே மிகவும் முக்கியமான பாத்திரமாக அமைந்தது. ஆனால், தற்பொழுது வெளியாகியுள்ள 'தக் லைஃப்' படத்தில் நான் நடித்த இந்திராணி கேரக்டரை மிகவும் மோசமாக திட்டி தீர்க்கிறார்கள். அதிலும் ஒருசிலர் கமல்ஹாசன் மற்றும் சிம்பு ஆகியோருக்கு இடையேயான என்னுடைய  கேரக்டரின் காதல் காட்சிகளை வைத்து என்னை மிகவும் மோசமான ஆபாச வார்த்தைகளால் விமர்சனம் செய்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் மலையாளத்தில் வெளியான பல பிட்டு படங்களுடன் ஒப்பிடுகிறார்கள்.


 

உண்மையிலேயே நான் இயக்குனர் மணிரத்தினம் சார் சொன்னபடியே நடித்தேனே தவிர வேறு ஒன்றுமில்லை அவ்வளவுதான். இப்படி  மணிரத்னம் கமல்ஹாசன் காம்போவை கடுமையாக நீங்கள் விமர்சனம் செய்யலாமா? சரி அதிலும் நான் என்ன செய்தேன் உங்களுக்கு. சோஷியல் மீடியாவை திறக்கவே பயமாக இருக்கிறது. ஒரு சினிமாவை ஏன் மக்கள் இப்படி வாழ்க்கையுடன் ஒப்பிடுகிறார்கள்" என திரிஷா  புலம்பியபடி இருக்கிறாராம்.

இதையும் படிங்க: கமல்ஹாசனுக்கு இவ்வளவு கடன் இருக்கா..! சொத்து மதிப்புக்கு ஈடா கடனும் வச்சிருக்காரே..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share