×
 

ஓணம் பண்டிகையை முன்னிட்டு குடும்ப பெண்ணாக மாறிய கீர்த்தி சுரேஷ்..!

கீர்த்தி சுரேஷ் குடும்பத்துடன் ஓணம் பண்டிகையை கொண்டாடிய புகைப்படங்கள் இதோ.

தமிழ் திரையுலகில் குழந்தை நட்சித்திரமாக தனது பயணத்தை ஆரம்பித்து பின் நடிகர் விஜய், சிவகார்த்திகேயன், 

விக்ரம், என பல முன்னணி நடிகர்களுடன் நாயகியாக நடித்து இன்று தனது பெயரை இந்தியா முழுவதும் நிலைநாட்டி இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இதையும் படிங்க: திருமணம் முடிஞ்ச கையோடு வெயிட் கூடியாச்சு..! குறைக்க இத மட்டும் தான் செய்தேன் - நடிகை கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்..!

2000களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், 2013 ஆண்டில் கீதாஞ்சலி எனும் மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாகி, 

தமிழில் விக்ரம் பிரபு நடித்த "இது என்ன மாயம்" திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார்.

இந்த நிலையில், கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் 'அந்தோணி தட்டிலை' 15 வருடங்களாக காதலித்து வந்த கீர்த்தி சுரேஷ், 

கடந்த 2024 டிசம்பர் 12ஆம் தேதி கோவாவில் பாரம்பரிய தமிழ் பிராமண மற்றும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்துகொண்டார். 

இவரது திருமண நிகழ்ச்சியில் ஏராளமான திரை பரபலங்கள் கலந்துகொண்டனர்.   

இதுவரை நடிகை கீர்த்தி சுரேஷ், இது என்ன மாயம், தொடரி, ரெமோ, ரஜினி முருகன், பாம்பு சட்டை, பைரவா, சண்டகோழி 2, சீமராஜா, சாமி 2, சர்கார், நடிகையர் திலகம், 

தானா சேர்ந்த கூட்டம், மிஸ் இந்தியா, பெண்குயின், மரக்கர், அரபிக்கடலின் சிம்ஹம், அண்ணாத்த, சாணிக் காயிதம், குட் லக் சகி, மாமன்னன், சைரன், ரகு தாத்தா, கல்கி 2898 AD முதலிய படங்களில் நடித்துள்ளார். 

இதையும் படிங்க: திருமணம் முடிஞ்ச கையோடு வெயிட் கூடியாச்சு..! குறைக்க இத மட்டும் தான் செய்தேன் - நடிகை கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share