பல பேரின் உயிரை காவு வாங்கிய ஏர் இந்தியா விமானம்..! ஜேம்ஸ் வசந்தன் பதிவால் பதட்டத்தில் மக்கள்..!
விமானப்பயணத்தில் உங்கள் மன ஓட்டம் எப்படியிருக்கும் என இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகள் முழுவதும் பேசிக் கொண்டிருக்கும் ஒரே ஒரு விஷயம் என்றால் அதுதான் அகமதாபாத்தில் நடைபெற்ற ஏர் இந்தியா விமானத்தின் விபத்து. சுமார் 242 பயணிகளுடன் புறப்பட்ட இந்த ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறின் காரணமாக உண்டான விபத்தில் கிட்டத்தட்ட 241 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த ஒருவரை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்தும் வருகின்றனர்.
அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டனுக்கு 242 பயணிகளும் மிகவும் மகிழ்ச்சியாக தனது குடும்பத்துடன் பயணிக்க தொடங்கிய 25 வினாடி பொழுதில் விமானியின் கட்டுப்பாட்டை இழந்த ஏர் இந்தியா விமானம் அருகில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதி மீது விழும் என ஒருவரும் நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள், அதேபோல் இந்த விமான விபத்தில் கல்லூரியில் மகிழ்ச்சியாக சாப்பிட்டுக்கொண்டும் விளையாடிக் கொண்டும் இருந்த மாணவர்கள் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். மேலும் பலர் பலத்த காயங்களுடனும் உயிருக்கு ஆபத்தான நிலையிலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: கழுத்தை நெரித்து வெளியேற்றப்பட்ட நடிகரின் மனைவி...! பெற்ற கடனுக்காக வங்கி ஊழியர்கள் செய்த அட்டூழியம்..!
பல பேரின் உடல்கள் தீயில் கருகி இருப்பதால் அவர்களது உடலை அடையாளம் காண முடியாமல் இருக்கிறது. ஆதலால் டிஎன்ஏ பரிசோதனைகளை மேற்கொண்டு அவர்களை அடையாளம் கண்டு பிறகு குடும்பத்தாருக்கு அவர்களது உடல்கள் ஒப்படைக்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மேலும் டாடா நிறுவனத்தின் சார்பாக உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் எனவும், உயிர் ஆபத்தான நிலையில் போராடி வருபவர்களுக்கு உண்டான மருத்துவ செலவுகள் அனைத்தையும் நிர்வாகமே ஏற்றுக்கொள்ளும் எனவும் விமான விபத்தில் சிக்கிய விடுதியின் கட்டிடத்தை தாங்களே சரி செய்து தருவதாகவும் டாடா நிறுவனம் உறுதி அளித்துள்ளது.
இப்படி இருக்க இந்த விபத்தைக் கண்டு பல பயணிகளும் விமானத்தில் செல்ல அஞ்சி வரும் வேளையில், ஏர் இந்தியா விமானத்தின் தரத்தை குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என மத்திய அரசு அந்நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. இந்த வேலையில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தனது முகநூல் பக்கத்தில் விமான விபத்தை குறித்து பதிவிட்டு உள்ளார். அந்த பதிவு தற்போது பலரையும் அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அதன்படி அவர் வெளியிட்டுள்ள பதிவில், " FLIGHT FRIGHT: விமான விபத்து கொஞ்சம் அச்சத்தைக் கொடுக்கும் செய்திதான். ஏனென்றால், அந்தக்காலம் போல அல்லாமல் இன்று எல்லோருமே பறக்கிறோம். பறக்கிற எல்லோருமே நம் விமானத்துக்கு ஒன்றும் ஆகாது என்கிற வழக்கமான மனித நம்பிக்கையில்தான் ஒவ்வொரு முறையும் பறக்கிறோம். இதற்குப் பயந்து விமானப் பயணங்களையே தவிர்க்கிற பலரையும் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
நாம் காதுகளுக்கு வரவில்லையென்றாலும் அங்கும் இங்குமாய் விமான விபத்துகள் உலகம் முழுக்க நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. 2023-ல் 182 விபத்துகளும், 2024-ல் 258-ம் நிகழ்ந்துள்ளன. இவற்றில் சிறிய விபத்திலிருந்து உயிரிழைப்பை ஏற்படுத்துகிற பெரிய விபத்துகள் வரை எல்லாமே அடக்கம். ஒன்றிரண்டு மணி நேர உள்நாட்டுப் பயணங்களில் விமானப்பயண அச்சம் பெரிதாக இருப்பதில்லை. ஆனால் வெளிநாட்டுப் பயணம் என்றால் அது வேறு மனநிலைதான். விமானத்தில் ஏறி அமர்ந்து பறக்கத் தொடங்கும் வரை இதைக்குறித்த எண்ணம் வராத ஆளே கிடையாது.
எல்லார் மனதிலும் ஒரு கீற்று போல இந்த எண்ணம் வந்துபோகும். அடிக்கடிப் பறப்பவர் ஒரு துணிவை வரழைத்துக் கொள்வதும், அவ்வப்போது பறப்பவர் கொஞ்சம் அச்சத்தோடு அதை மறக்க முயல்வதும், புதிதாய் பறப்பவர் இறங்கும்வரை உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு உறங்க முடியாமல் தவிப்பதும் அன்றாடம் நடப்பவை.உங்கள் அனுபவத்தில் நீண்ட விமானப்பயணத்தில் உங்கள் மன ஓட்டம் பொதுவாக எப்படியிருக்கும்?" என கேள்வி எழுப்பியுள்ளார்.
இவரது பதிவை பார்த்த பலரும் தற்பொழுது கலக்கத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க: கருப்பு நிற மாடர்ன் உடையில் சிவாங்கி..! கவர்ச்சி கன்னியாக மாறியதன் பின்னணி..!