தேவயானியை பிரிய காரணம் எனது மனைவி தான்..! மனம் திறந்த நடிகர் நகுல்..!
தனது அக்காவான தேவயானியை பிரிய காரணமே எனது மனைவி தான் என நடிகர் நகுல் பேசியுள்ளார்.
"மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு" என்ற பாடலை இன்று கேட்டாலும் அனைவரது மனதிலும் உடனே நினைவுக்கு வருபவர் நடிகை தேவையானி. தேவயானி நடிப்பில் வந்த அனைத்து படங்களும் இன்றும் பார்க்க கூடிய அழகிய படங்களாகவே இருக்கும். அதிலும் தேவயானி நடிப்பில் வந்த சூர்யவம்சம் படத்தில் ஒரே பாடலில் கலைக்டர் ஆகி, பலரது மனதிலும் ஊக்கம் கொடுத்தவர்.
எப்பொழுதும் இவரை படத்தில், சேலையில் அல்லது சுடிதாரில் தான் பார்க்க முடியும். தமிழ் திரையுலகில் கவர்ச்சி காட்டாமல் நடித்த நடிகை என்ற பெருமைக்கு சொந்தகாரர் தான் தேவயானி. இவர் படத்தில் மட்டுமல்லாமல் சீரியல்களிலும் ஃபேமஸ் தான். பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "கோலங்கள்" சீரியலில் நடித்து தனக்கான பெண்கள் ரசிகை பட்டாளங்களை உருவாக்கியவர். இப்படி அழகாக தமிழ் பேசும் தேவயானி, மும்பையில் பிறந்து வளர்ந்தவர். அதன்பின்பு தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் பெங்காலி ஆகிய மொழி படங்களில் 90 மற்றும் 2000 காலகட்டத்தில் நடித்து முன்னனி நடிகையாக வலம் வந்தார்.
இதையும் படிங்க: உலகநாயகன் கமல்ஹாசனுக்கு இப்படி ஒரு பதவியா..! இவரு ஓட்டு போட்டாத்தான் இனி எல்லாமே..!
அதன் பிறகு, இயக்குனர் ராஜகுமாரன் என்பவரை காதலித்து திருமணம் செய்தது கொண்டார். தேவையானி மற்றும் ராஜ்குமாரன் தம்பதிகளுக்கு இனியா, பிரியங்கா என்ற இரண்டு அழகான பெண் பிள்ளைகள் உள்ளனர். இப்படி திரையுலகில் இன்றும் கலக்கி வரும் தேவயானி, காதல் கோட்டை, கல்லூரி வாசல், விவசாயி மகன், சூர்யவம்சம், நினைத்தேன் வந்தாய், நீ வருவாய் என, பாட்டாளி, தெனாலி, வல்லரசு, பாரதி, அப்பு, பிரெண்ட்ஸ், விண்ணுக்கும் மண்ணுக்கும், அழகி, பஞ்சதந்திரம், நியூ, கிரி, ஐந்தாம் படை, ஸ்ட்ராபெரி, களவாணி மாப்பிளை, எழுமின், ஜீனி உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார்.
இப்படி இருக்க, அவரது மூத்த மகளான இனியா, தற்பொழுது பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாட்டு போட்டி நிகழ்ச்சியில் பங்கு பெற்று தனது அழகிய குரலால் அனைவரையும் மகிழ்வித்து வருகிறார். மேலும், அவரது தாயான நடிகை தேவயானி, எனது மகளுக்கு சினிமாவில் பாடுவதற்கு என்னால் ஈசியாக சான்ஸ் வாங்கி கொடுக்க முடியும். ஆனால் அது எனக்கு தேவையில்லை. பிள்ளைகள் வாழ்க்கையை போட்டி போட்டு கற்று கொள்ள விரும்புகிறேன். அவளது திறமையை மற்றவர்களுடன் போட்டி போட்டால் தான் அவளால் புரிந்து கொள்ள முடியும். குறைகளை நிறைவாக்கவும் முடியும் என்பதை நம்புகிறேன். ஆதலால் இந்த நிகழ்ச்சியை எனது மகளுக்கு போட்டி காலமாக இருப்பதால் அதில் இறக்கி விட்டு இருக்கிறேன் என மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார். இதனை பார்த்த பலரும் தேவயானியை பாராட்டி வருகின்றனர்.
இப்படி இருக்க, நடிகை தேவயானி இயக்குனர் ராஜ்குமாரை காதலித்து வந்ததுடன் குடும்பத்தில் உள்ளவர்களின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டார். இதனால் பலவருடங்களாக பேசிக்கொள்ளாத தேவையானியும் அவரது தம்பி நகுலும் தற்பொழுது ஒன்று கூடியுள்ளனர். இப்படி இருக்க, சமீபத்தில் தேவயானி மகள் கலந்து கொண்டு பாடிவரும் "சரிகமப" நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரையும் மகிழச்செய்தார் நடிகர் நகுல். இதனை அடுத்து, சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகை தேவயானியின் சகோதரரும், நடிகருமான நகுல் தனது சகோதரியான தேவையானி குறித்து பேசியுள்ளார்.
அதில், " அக்காவின் கணவரை எனக்கு மிகவும் பிடிக்காது. அவர்களது திருமணத்தில் எனக்கு துளியும் விருப்பமில்லை ஆதலால் அக்கா தேவயானியை நகுல் ஒதுக்கிவைத்து விட்டார் எனவும் எனது மனைவியான ஸ்ருதிஅக்காவையும், தம்பியையும் பிரித்துவிட்டார்கள் என்று அனைவரும் சொல்லும்பொழுது எல்லாம் முதலில் எனக்கு அதிகப்படியான கோபம் வந்தது. இப்போது அதை எல்லாம் கேட்டால் என்னடா... சீரியல் போல பேசுறீங்க.. கொஞ்சமாவது மாத்துங்கடா என்று தான் சொல்லத் தோன்றுகிறது " என்று நகைப்புடன் பேசியிருக்கிறார்.
இதையும் படிங்க: ஓ.. மனைவியை இப்படியும் கோபப்படுத்தலாமா... தனது வாழ்க்கை பற்றி பேசி ஆர்த்தியை கடுப்பாகிய ரவி மோகன்..!