விண்வெளி நாயகனின் பட வசூல் வான்வழி அளவுக்கு கூட நெருங்கவில்லையா.. தியேட்டரில் இருந்து ஓடிடிக்கு மாறும் 'தக்லைப்'..!
தோல்வியில் முடிந்த தக்லைஃ ப் திரைப்படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளனர் படக்குழுவினர்.
பல எதிர்ப்புகளின் மத்தியில் வெளியான உலக நாயகன் கமல் ஹாசனின் தக் லைஃப் திரைப்படத்தை பார்த்த மக்கள் இதுக்கா இவ்வளவு ஆர்ப்பாட்டம் என்பதை போல நினைத்து சென்றனர். அந்த அளவிற்கு படத்தை பார்த்த அனைவரும் ஏமாந்து சென்றனர். ஏற்கனவே இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல் ஹாசனின் நடிப்பில் வெளியான இந்தியன் 2 தோல்வியடைந்த நிலையில், தற்பொழுது மணிரத்தினம் இயக்கிய தக் லைஃப் படமும் படுதோல்வி அடைந்துள்ளது.
கர்நாடக மொழி பிரச்சனையின் நடுவில் வெளியான இப்படத்தை குறித்து பார்த்தால், மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிப்பில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகர் சிம்பு ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படிப்பட்ட திரைப்படத்தின் கதைக்களம் எப்படி இருக்க வேண்டும். ஆனால் எப்படி இருந்தது தெரியுமா, " வழக்கம்போல நடிகர் கமலஹாசனுடைய கேங்கிற்கும் சட்டத்தை காப்பாற்றுகின்ற போலீசுக்கும் இடையே நடக்கும் தகராறில் பாவம் பரிதாபமாக நடிகர் சிம்புவின் அப்பா கொல்லப்படுகிறார்.
இதையும் படிங்க: விஸ்வரூபம் எடுக்கும் கமல்ஹாசன் மொழி பிரச்சனை..! தமிழக முதல்வருக்கு வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை..!
இப்படி சிறு வயதிலேயே தனது தந்தையை இழந்த நடிகர் சிம்பு, அந்தத் தகராறில் தான் ஆசை ஆசையாய் பார்த்துக் கொண்ட தனது சகோதரியும் தொலைத்து விட்டு பிரிந்து செல்கிறார். இந்த சூழலில் 'ஜில்லா' திரைப்படத்தில் நடிகர் விஜயை எடுத்து மோகன்லால் வளர்க்கிறாரோ அதேபோல, தந்தை இழந்து பரிதாபமாக நிற்கும் சிம்புவை எடுத்து வளர்க்கிறார் நடிகர் கமலஹாசன். கமலஹாசன் சொல்லும் அனைத்து விஷயங்களையும் தட்டாமல் செய்கின்ற நடிகர் சிம்புவை தனது கேங்ஸ்டர் சாம்ராஜ்யத்திற்கு தலைவனாகவும் இளவரசனாகவும் அறிவிக்கிறார் கமல். அந்த நேரத்தில் 'செக்கச் சிவந்த வானம்' திரைப்படத்தில் வருவதைப் போலவே நடிகர் கமலஹாசன் மீது துப்பாக்கிச் சூடு நடக்கிறது.
இதில் பலத்த காயம் அடைந்த நடிகர் கமலஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வர, அந்த சமயத்தில் தன்னுடைய இடத்தை பிடிக்க சிம்பு தான் இந்த காரியத்தை செய்திருக்க கூடும் என கமலஹாசன் தீர்க்கமாக நம்புகிறார். இதனை அறிந்து மனம் உடைந்து போன சிம்பு தன்னை இத்தனை வருடங்களாக வளர்த்த தனது தந்தையே இப்படி நினைத்து விட்டாரே என மனம் சோர்ந்து அவர் மீது வைத்த மொத்த நம்பிக்கையும் இழந்து போகிறார். வழக்கம்போல இந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட நாசர், பகவதி, ஜோஜூ ஜார்ஜ் ஆகிய மூவரும் திட்டம் தீட்டி சிம்புவினுடைய கைகளாலே கமலை கொள்ள வகை தேடினர். அவர்களது திட்டம் போட்டபடியே, சிம்பு அவரை மலை உச்சிக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து அவரை கீழே தள்ளிவிட பாவம் கமலஹாசன் பரிதாபமாக இறந்து விடுவார். அவ்வளவுதான் இதற்குப் பின்பு தான் கதையே சூடுபிடிக்க ஆரம்பித்தது.
நாம் அனைவரும் ட்ரெய்லரில் பார்த்ததைப் போல கமல் இறந்து விட்டார் என்று கூறி 'இனிமேல் நான் தான் இங்க ரங்கராய சக்திவேல்' என சிங்கம் கர்ஜிப்பதை போல் கர்ஜித்து கமலின் இடத்தை சிம்பு பிடிக்கிறார். இதனை அடுத்து நடிகர் கமலஹாசன் உயிரோடு வருகிறாரா? இல்லையா" தனது இடத்தை பிடிக்கிறாரா? இல்லையா? அல்லது தன்னை மலையிலிருந்து தள்ளிவிட்ட சிம்புவை பழிவாங்குவாரா? மாட்டாரா? என்பதெல்லாம் மீதி கதையாக உள்ளது.
ஒரு வகையில் படம் கொஞ்சம் மிரட்டும் வகையில் இருந்தாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு இணங்க படம் இல்லை என பலரும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தக் லைஃப் படம் வெளியான நாளில் இருந்து இதுவரை ரூ.82 கோடி மட்டுமே வசூல் செய்து படுதோல்வியை சந்தித்துள்ளது. இதனை ஈடு செய்யும் வேளையில் இறங்கியுள்ளனர் படக்குழுவினர். அதன்படி, இத்திரைப்படம் ரிலீஸ் ஆன பின் சுமார் 8 வாரங்கள் கழித்துதான் ஓடிடியில் ஒளிபரப்ப வேண்டும் என நெட்பிளிக்ஸ் தளத்துடன் படக்குழுவினர் ஒப்பந்தம் செய்துள்ளனர்.
ஆனால் தற்பொழுது படம் தியேட்டரிலேயே ஓடவில்லை, யாரும் பார்க்கவில்லை, இதற்கு எதற்கு படம் அங்கு இருக்க வேண்டும் பேசாமல் ஓடிடியில் வெளியிடலாம் என முடிவு செய்து, அதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் விரைவில் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் அதற்குண்டான அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்கின்றனர் படக்குழுவினர்.
இதையும் படிங்க: வெளியானது சிம்புவின் "ஓ மாறா" பாடல்..! ரசிகர்களை உற்சாகப்படுத்திய தக் லைஃப் பட சாங்..!