இனி வீட்டில் "தலைவன் தலைவி" தான் போங்க..! தியேட்டரை தாண்டி ஓடிடியில் எப்பொழுது தெரியுமா..!
தலைவன் தலைவி ஓடிடியில் வெளியாக போகிறது என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
"பசங்க", "வம்சம்", "மெரினா", "கடைக்குட்டி சிங்கம்", "நம்ம வீட்டு பிள்ளை", "எதற்கும் துணிந்தவன்" போன்ற பல்வேறு வெற்றி திரைப்படங்களை இயக்கி குடும்ப பார்வையாளர்களின் நம்பிக்கைக்குரிய இயக்குநராக உயர்ந்தவர் தான் பாண்டிராஜ்.
அவரது புதிய முயற்சியாக நடிகர் விஜய் சேதுபதியின் 52-வது படமான ‘தலைவன் தலைவி’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படம் கடந்த ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியானது. வெளியான உடனே அனைத்து தரப்பினரிடையும் நல்ல வரவேற்பை பெற்றது. குடும்ப வட்டாரங்கள், நவீன திருமண வாழ்க்கை, பரஸ்பர புரிதல், பெண்களின் மனவளம், போன்ற பல உணர்வுகளை நுட்பமாக சித்தரித்த இந்த திரைப்படம், தற்போது அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் வெளியிடப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த சூழலில் ‘தலைவன் தலைவி’ திரைப்படம் ஒரு குடும்பக் கதையாக உருவாகியுள்ளது. இதற்கான தளமாக, நவீன நகர்ப்புறத்தில் வாழும் ஒரு கணவன்-மனைவியின் வாழ்க்கையை எடுத்துக் கொண்டு, விவாகரத்து என்பது தீர்வு அல்ல என்பதையே இயக்குநர் பிரதிபலிக்கிறார். அதன்படி, திருமண உறவுகளில், தவறான புரிதல்கள், பேச்சுத் தகராறுகள், வெளிச்சமற்ற அன்பு தேடல்கள் மற்றும் சமூகக் கண்ணோட்டங்களால் ஏற்படும் அழுத்தங்கள் என இவை அனைத்தும் இயல்பானவை. ஆனால் அதற்கான தீர்வாக மனிதநேயமும், சிந்தனையும், பரஸ்பர அக்கறையும் முக்கியம் என்பதை தெளிவாக படம் கூறுகிறது. மேலும் விஜய் சேதுபதி, தனது 52-வது திரைப்படத்தில், ஒரு சாதாரண கணவனின் பாத்திரத்தில் நடித்து, இயற்கையான மனநிலை மாற்றங்களை அசாத்தியமாகக் கொண்டு வந்திருக்கிறார். பெரும்பாலும் நகைச்சுவையும், நுட்பமான உணர்வுகளும் கலந்து காட்டும் அவர், இதில் தோல்வியும், கோபமும், கண்ணீரும் கொண்ட உணர்வுப் பூர்வமான பக்கத்தை பதிவு செய்துள்ளார்.
மேலும் நித்யா மேனன், தேசிய விருது பெற்ற நடிகையாக, தனது அழுத்தமான நடிப்பை மற்றொரு கட்டத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார். ஒரு பெண்ணின் மனக் குழப்பம், அவமானம், சிந்தனை, சுய அடையாள தேடல் ஆகியவற்றை அவரால் நம்பும்விதமாக சித்தரிக்க முடிந்துள்ளது. இப்படியாக இருவரும் ஒன்றாக கலந்து நடித்த காட்சிகள், அதிர்ச்சி தரும் உண்மை வசனங்கள், நுட்பமான மாறுபட்ட பாய்ச்சல்கள், தெரிந்துவிடாத காதல், போன்றவை திரையில் வெளிப்படையாக பிரதிபலித்துள்ளன. அதிலும் இந்த படத்தில் யோகி பாபு, வழக்கமாக கையாண்ட வேடம் மட்டுமின்றி, ஒரு நண்பனாக, குடும்ப சூழ்நிலைகளை புரிந்து கொள்ளும் அழுத்தமான துணை பாத்திரமாக நடித்துள்ளார். அவரது நகைச்சுவை நடிப்பி, படத்தில் சமநிலைப்படுத்தும் இடங்களில் நன்றாக அமையும் வகையில் அமைந்துள்ளது. படத்திற்கு இசையமைத்துள்ளவர் சந்தோஷ் நாராயணன். அவர் படத்தின் உணர்வுகளுக்கு ஏற்ப மென்மையான மெலடிகள், மற்றும் நவீன இசைத்துணுக்குகளை கொடுத்து, படத்தின் கதையின் சூழ்நிலையை அற்புதமாக மேம்படுத்தியுள்ளார். அதிலும் "மௌனம் பேசுது", "நெஞ்சிலே சொல்லாத வார்த்தை", "இன்னொரு நாளுக்கு" போன்ற பாடல்கள், இசை ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. மேலும், பின்னணி இசை படத்தில் வரும் முக்கியமான உணர்வுப் பிம்பங்களை உயர்த்தி எடுத்துரைக்க உதவியுள்ளது. இப்படிப்பட்ட படம் கடந்த ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியாகி, சிறப்பான விமர்சனங்களையும், குடும்பங்களிடையே பரவலான ஆதரவையும் பெற்றது.
இதையும் படிங்க: அவ்வளவு தான் இனி தான் ஆட்டமே...! `தண்டகாரண்யம்' படத்திற்கு தணிக்கை குழு வழங்கிய சான்றிதழ்..!
தற்போது, இதே திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில், வரும் ஆகஸ்ட் 22-ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த தகவலை அமேசான் பிரைம் மற்றும் படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். ஆகேவ தியேட்டரில் தவறவிட்ட ரசிகர்கள், குடும்பத்துடன் வீட்டில் அமைதியாக படத்தை அனுபவிக்க திட்டமிட்டு உள்ளனர். விமர்சகர்களும், சமூகக் கருத்தாளர்களும், படத்தின் திருமண வாழ்க்கையின் சிக்கல்கள் பற்றிய நேர்மையான அணுகுமுறைக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். “தலைவன் தலைவி” படத்தின் நேர்த்தியான பேச்சுக்கள், மற்ற தமிழ் ஓடிடி படங்களை விட உயர்ந்த தரத்தில் இருக்கிறது என பலரும் கருத்து கூறியுள்ளனர். எனவே ‘தலைவன் தலைவி’ திரைப்படம், இன்றைய திருமண வாழ்க்கையின் உண்மை நிலையை நம்மில் பலரின் அனுபவங்களை மையமாக வைத்து, சிந்திக்க வைக்கும் படமாக உள்ளது. குறிப்பாக பாண்டிராஜ் வழக்கமான கிராமத்துக்கேற்ப மெட்ரோ வாழ்க்கையின் சங்கடங்களை தன்னுடைய பார்வையில் சொல்ல முயற்சித்துள்ளார். விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் ஆகியோரின் நடிப்பு, அந்த வாழ்க்கையின் வெவ்வேறு பரிமாணங்களை மிக நுட்பமாக சித்தரிக்கிறது.
ஆகவே இப்படம், திருமணமாகி சில ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஜோடிகள், காதலால் திருமணம் செய்து குழப்பங்களை சந்திக்கும் பசுமை காதலர்கள், பெண் வாழ்க்கையின் மனவுணர்வுகளை புரிந்து கொள்ள விரும்பும் குடும்பங்கள், வெறும் காதல் படம் அல்ல, உண்மையை பேசும் கலைப்படம் என நினைப்பவர்கள் என எல்லாருக்கும் இது ஒரு கண்ணாடி போல உணர்த்தும் திரைப்படமாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: இன்று நயன்தாராவின் தரிசனம் காண தயாரா..! “டியர் ஸ்டூடெண்ட்ஸ்” டீசர் அப்டேட்..!