×
 

ஒன்னு இல்ல ரெண்டு பேர்.. விபூதி அடிக்க நினைத்த சீரியல் நடிகை.. உஷாராகி போலீசில் சிக்கவைத்த ஸ்வீட் ஹஸ்பண்ட்..!

தனது இரண்டாவது கணவருக்கு விபூதி அடிக்க நினைத்த நடிகை ரிஹானா பேகத்தை போலீசில் பிடித்து கொடுத்திருக்கிறார் ஹாஸ்பன்ட்.

டீவி மற்றும் இன்டர்நெட் முதலானவைகள் இல்லாத காலகட்டத்தில் உலகில் எந்த தவறுகள் நடந்தாலும் அவை அனைத்தும் மக்கள் பார்வையில் படாமல் மறைந்த படியே நடந்து கொண்டு இருந்தது. ஆனால் என்று இன்டர்நெட் மற்றும் தொழில்நுட்பத்தின் ராஜ்ஜியங்கள் அதிகமாக வளர ஆரம்பித்ததோ அன்றிலிருந்து ஒரு சிறிய தவறுகள் கூட வெளியாகி மக்கள் மத்தியில் வைரல் ஆகிறது. 

இப்படிப்பட்ட தான இந்த வேலையில் ஒரு காலத்தில் திரையரங்குகளுக்கு சென்று படம் பார்த்த காலங்கள் போய் தற்பொழுது ஓடிடி என்ற செயலி மூலமாக வீட்டிலிருந்து அனைத்து திரைப்படங்களையும் பார்க்கும் வண்ணம் காலங்கள் மாறி இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் ஒரு காலத்தில் டிவிடி பிளேயரும் சிடி பிளேயர்களையும் கையில் வைத்துக்கொண்டு படம் எப்பொழுது கேசட்டில் வெளியாகும் என காத்துக் கொண்டிருந்த காலங்கள் போய் தற்பொழுதெல்லாம் இன்டர்நெட்டில் எப்பொழுது வெளியாகும் என்று சொல்லக்கூடிய நாட்கள் வந்து இருக்கிறது. ஆனால் அன்றைய காலம் முதல் இன்றைய காலகட்டம் வரை மாறாத ஒன்று என்றால் அதுதான் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள். 

இதையும் படிங்க: நடிகை ராய் லட்சுமியின் கலக்கல் பர்த்டே செலிப்ரேஷன்..! வாழ்த்துக்களை குவிக்கும் இளசுகள்..!

இந்த சீரியல்களை பார்க்க ஒரு கூட்ட மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த வகையில் தற்பொழுது சீரியல்கள் என பார்த்தால் அப்பொழுதிலிருந்தே வாணி ராணி, சின்ன பாப்பா பெரிய பாப்பா, மை டியர் பூதம், மெட்டிஒலி, தென்றல், கோலங்கள், சித்தி என பல சீரியல்கள் அப்பொழுதிலிருந்து இப்பொழுது வரை ரசிகர்களைப் பெற்று வருகிறது. அந்த வகையில் பிரபல தனியார் தொலைக்காட்சியில்  தற்பொழுது சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி, பொன்னி, மகாநதி, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, ஆஹா கல்யாணம் என பல சீரியல்கள் ஓடிக்கொண்டே இருக்கிறது. அதில் குறிப்பாக சொல்ல வேண்டுமானால் "பாண்டியன் ஸ்டோர்ஸ்" முதல் பாகம் முடிந்து தற்பொழுது இரண்டாம் பாகம் ஆனது ஓடிக்கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட பாண்டியன் ஸ்டோர்ஸில் நடித்து பிரபலமானவர்தான் நடிகை ரிஹானா வேகம்.

ஏற்கனவே மீனாட்சி பொண்ணுங்க, ஆனந்த ராகம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமான இவர் தற்பொழுது மோசடி வழக்கு ஒன்றில் சிக்கி இருக்கிறார். இவரை வசமாக சிக்க வைத்தவர் யார் என்றால் சென்னை போரூர் அருகே கொளப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஹோட்டல் அதிபரான 'ராஜ் கண்ணன்' என்பவர் தான். இவர்தான் தற்பொழுது நடிகையின் மீது பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். என்ன நடந்தது என்பதை கீழே பார்க்கலாம், பிரபல ஹோட்டல் அதிபரான ராஜ் கண்ணனின் நண்பர் மூலமாக அவருக்கு அறிமுகமானவர் தான் நடிகை ரிஹானா பேகம். அறிமுகமான சில நாட்களிலேயே இவர்கள் பழக்கவழக்கங்கள் நட்பு ரீதியாக மாறி இருக்கிறது. இந்த நிலையில் தனது வாழ்க்கையை குறித்து ராஜ் கண்ணனிடம் கூறிய நடிகை ரிஹானா, தனக்கு விவாகரத்து ஆகி இருப்பதாகவும் இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் ராஜ் கண்ணனிடம் கூறியிருக்கிறார். 

இதனால் ரிஹானா பேகத்தை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த ராஜ் கண்ணன் தனது விருப்பத்தை அவரிடம் கூறியிருக்கிறார். அதன் பின்பு நீண்ட நாட்களாக இருவரும் நெருங்கி பழகி இருக்கின்றனர். இதனை அடுத்து ஒரு நாள் திருமணத்தை குறித்து ராஜ் கண்ணன் ரிஹானாவிடம் கேட்ட பொழுது அவர் நகை பணம் உள்ளிட்டவற்றை கேட்டு இருக்கிறார். இதனை அடுத்து சுமார் 20 லட்சம் ரூபாய் பணத்தையும் ஒரு சில நகைகளையும் ரிஹானா பேகத்திற்கு ராஜ் கண்ணன் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து இருவரும் திருமணம் செய்து இருக்கின்றனர். 


இப்படி இவர்கள் இருவருக்கும் திருமணமாகி ஒரு வருடம் ஆகியிருக்கும் நிலையில் திருமணம் ஆன சில நாட்களிலேயே சீரியல் படப்பிடிப்பு எனக் கூறி அவர் அடிக்கடி வெளியூறுக்கு சென்று இருக்கிறார். சென்னையில் இருக்கக்கூடிய சீரியல் படப்பிடிப்புக்கு எதற்காக அடிக்கடி இவர் வெளியே செல்கிறார் என்பதில் ராஜ் கண்ணனுக்கு சந்தேகம் எழ, அவரைப் பின்தொடர்ந்து விசாரிக்க ஆரம்பித்து இருக்கிறார் ராஜ் கண்ணன். அப்பொழுதுதான் அவருக்கு அதிர்ச்சிகரமான ஒரு தகவல் கிடைத்தது. அது என்னவெனில் தனது முதல் கணவரை விவாகரத்து செய்ததாக கூறிய ரிஹானா உண்மையில் அவரை விவாகரத்து செய்யாமல் அவருடன் வாழ்ந்து வந்தது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து அவர் தன்னிடம் பெற்ற நகைகளையும் பணங்களையும் தனது முதல் கணவரிடத்தில் கொடுத்து செலவழித்ததாக கூறப்படுகிறது. 

இதனால் மனமுடைந்த ராஜ் கண்ணன், ரிஹானா பேகம் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து புகாரை பெற்ற காவல் துறையினர், ராஜ் கண்ணன் மற்றும் ரிஹானா ஆகிய இருவருக்கும் சம்மன் நோட்டீஸ் அனுப்பி இருக்கின்றனர். அதன்படி நாளை இருவரும் பூந்தமல்லி போலீஸ் முன்பு ஆஜராக வேண்டும் என அந்த சம்மனில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை போலீசாரின் முன்பு நடைபெறும் பேச்சு வார்த்தையில் சுமூக தீர்வு கிடைக்குமேயானால் அவர் ஜெயிலுக்கு போவது சற்று தள்ளி வைக்கப்படும் என கூறப்படுகிறது.

இதனை பார்த்த பல நெட்டிசன்கள் யாரை நம்புவது என தெரியவில்லை.. இனி கல்யாணம் செய்ய வேண்டுமானால் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஒருமுறை சட்டரீதியாக ஜெக் செய்து திருமணம் செய்யனும் போல என தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ஏகே 64 படத்திற்கு அஜித் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா..! அதிர்ச்சியில் சினிமா பிரபலங்கள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share