×
 

நடிகர் விஜயகாந்தை தொடர்ந்து AI மூலம் வருகிறார் நடிகர் முரளி..! 'பராசக்தி' படத்தின் மாஸ் அப்டேட்..!

ஏ.ஐ மூலம் படத்தில் வர உள்ளாரா நடிகர் முரளி என்பதை பற்றி தெரிவித்து இருக்கிறார் நடிகர் ஒருவர்.

அன்று பராசக்தி ஹீரோ யாருன்னு கேட்டா சிவாஜின்னு சொல்லுவாங்க....ஆனா இப்ப பராசக்தி ஹீரோ யாருன்னு கேட்டா சிவகார்த்திகேயன்னு சொல்லுவாங்க என்று ரசிகர்கள் கூறிவரும் அளவிற்கு மிகவும் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் பராசக்தி. இந்த பெயரை எங்கேயோ கேட்டதை போல் உள்ளதே என தோன்றுகிறதா.. ஆம், சிவாஜி திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த், வில்லனிடம் "பராசக்தி ஹீரோடா" என சொல்லும் பொழுது உடனே அவர் "சிவாஜி" என்பார். அதே போல் தான் தற்பொழுது இந்த படமும் உருவாகி வருகிறது. 

இறுதிச் சுற்று, சூரரைப் போற்று' என மெகா ஹிட் கொடுத்த இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா முதலானோர் நடிப்பில் விறுவிறுப்பாக தயாராகி வரும் படம் தான் பராசக்தி. சிவகார்த்திகேயனின் பிறந்த நாளையொட்டி 'பராசக்தி' படப்பிடிப்புத் தளம் மற்றும் படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட கொங்கரா, அதற்கு கீழ் "பிறந்தநாள் வாழ்த்துகள் ஹீரோ. சினிமாவைத் தொடர்ந்து இயக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டுவது அதன் பயணம்தான். அந்த வகையில் உங்களோடு இணைந்து பயணித்து, பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சியிருக்கிறது." என்று நெகிழ்ச்சி பொங்க பதிவிட்டு இருந்தார். இதில் சிவா-வின் கெட்டப்புகளை பார்த்த ரசிகர்கள் படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கின்றனர். 

இதையும் படிங்க: வெளியானது சிவகார்த்திகேயனின் 'மதராஸி' படத்தின் கதை...! மகிழ்ச்சியில் எஸ்கே ரசிகர்கள்..!

இப்படத்தில், மலையாள திரையுலகின் இயக்குநரும் நடிகருமான பசில் ஜோசப் நடித்து வருவதாக கூறப்படுகிறது. பசில் ஜோசப்  மலையாள திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர் ஆவர். பல படங்களில் பிசியாக இருக்கும் இவர் சமீபகாலமாக இலங்கையில் நடைபெற்று வரும் பராசக்தி படப்பிடிப்பில் இணைந்துள்ளார் என்ற தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. இப்படி இருக்க, பராசக்தி படம் எப்பொழுது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலாக காத்து கொண்டிருந்த வேளையில்,இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான டவுன் பிக்சர்ஸின் நிறுவனர் ஆகாஷ் பாஸ்கரன், சமீபத்தில் பராசக்தி படத்தின் போஸ்டரை பதிவு செய்து அதன்கீழ் "This Pongal" என குறிப்பிட்டு இருந்தார். இதன்மூலம் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் பொங்கலுக்கு வெளிவருவது உறுதி செய்தது. 

இப்படி இருக்க, இப்படத்தை குறித்த அதிரடி அப்டேட்டை நடிகர் அதர்வா தெரிவித்து இருக்கிறார். அதன்படி, மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், " நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த பராசக்தி படப்பிடிப்பு இன்னும் 2 மாதங்களில் முடிந்துவிடும். அதனால் இனி அடுத்தடுத்து பராசக்தி படத்தின் அப்டேட் உங்களுக்கு கிடைக்கும் என கூறினார். பின் செய்தியாளர் ஒருவர் விஜயகாந்தை போல நடிகர் முரளியையும் ஏ.ஐ மூலம் இந்த படத்தில் கொண்டு வர இருப்பதாக சொல்லுகிறார்களே அது உண்மையா அல்லது  வாய்ப்பிருக்கிறதா? என்று கேட்டார். இதற்கு பதிலளித்த அதர்வா, எனக்கும் ஆசை தான்.

ஆனால் அதற்கு ஏற்ற நல்ல ஸ்கிரிப்ட் வேண்டும். இப்போதைக்கு அந்த மாதிரி எந்த ஐடியாவும் எனக்கு இல்லை. ஒருவேளை எதிர்காலத்தில் வருமா என பார்க்கலாம். ஆனால் அதனையும்  என்னால் உறுதியாக கூற முடியாது" என பேசிவிட்டு சென்றார்.

இதையும் படிங்க: சவுண்ட ஏத்துங்க.. ஆட்டம் போடுங்க..! இன்று ட்ரீட் கொடுக்க வருகிறது "கூலி" படத்தின் முக்கிய பாடல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share