×
 

வெளியானது சிவகார்த்திகேயனின் 'மதராஸி' படத்தின் கதை...! மகிழ்ச்சியில் எஸ்கே ரசிகர்கள்..!

சிவகார்த்திகேயனின் 'மதராஸி' படத்தின் கதையை பற்றி தெரிந்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

கிட்ஸ்கள் அனைவரையும் கவர்ந்தவர் என்றும் கோட் படத்தில் 'நான் போகிறேன் இனி நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்' என நடிகர் விஜய்யிடம் வாழ்த்து பெற்று அடுத்தடுத்த படங்களில் தனது முழு உழைப்பையும் செலுத்தி முன்னேறி வரும் சிவகார்த்திகேயனின் ஆரம்ப வாழ்க்கை கஷ்டம் தான். அந்த வகையில், சின்னத்திரையில் நீண்ட நாட்களாக தொகுப்பாளராக இருந்த இவருக்கு அடுத்த கட்ட பயணத்திற்கு உறுதுணையாக இருந்தது அட்லீ இயக்கத்தில் உருவான 'முகப்புத்தகம்' என்ற குறும்படம், இதில் நடிக்க தொடங்கிய சிவகார்த்திகேயன் சில விளம்பரங்களிலும் நடித்து, பின் 2012 ஆம் ஆண்டு இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான 'மெரினா' படத்தில் நடித்து வெள்ளித்திரையில் கதாநாயகனாக தனது காலடியை பதித்தார். 

இதுவரை தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயன், மெரினா, 3, மனம் கொத்திப் பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, காக்கி சட்டை, ரெமோ, ரஜினி முருகன், வேலைக்காரன், கனா, சீமராஜா, நம்ம வீட்டுப் பிள்ளை, Mr.லோக்கல், ஹீரோ, டாக்டர், ப்ரின்ஸ், டான், மாவீரன், அமரன், அயலான், தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்) உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார்.  

இதையும் படிங்க: "திடீர் தளபதிக்கு வந்த திடீர் சிக்கல்".. சிவகார்த்திகேயனை வம்பிழுக்கும் ப்ளூ சட்டை மாறன்..!

இந்த நிலையில், ஒரே சமயத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன், ஒன்று பராசக்தி மற்றொன்று ஸ்ரீ லட்சுமி மூவிஸ் தயாரிப்பில், அனிரூத் இசையில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் "மதராஸி". தற்பொழுது இலங்கையில் இப்படத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படி இருக்க, உண்மையில் இந்த படத்திற்கு முதலில் வைத்த பெயர் 'எஸ்கே 23" தான். இதற்கு காரணம் இப்படம் சிவகார்த்திகேயனின் 23வது படம் என்பதால் அவரது பிறந்தநாள் அன்று தான் இப்படத்தின் பெயரை வெளியிடுவோம் என திட்டவட்டமாக சொல்லிவிட்டார் இப்படத்தின் இயக்குனர். அதன் பின், எஸ்கே பிறந்தநாள் அன்று படத்தின் பெயர் "மதராஸி" என கூறிய ஏ.ஆர்.முருகதாஸ் இந்தியில் இப்படத்தின் பெயர் "தில் மதராஸி" என குறிப்பிட்டார்.

இந்த சூழலில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு 'மதராஸி' படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்தனர் படக்குழுவினர். அதன்படி, வருகின்ற செப்டம்பர் மாதம் 5ம் தேதி ஆசிரியர்கள் தினத்தன்று இப்படம் ரிலீஸ் ஆகிறது. அந்த தேதியில் மிலாடி நபி விடுமுறை வருகிறது, அதுமட்டுமல்லாமல் அன்று வெள்ளிக்கிழமை என்பதால் அடுத்த இரண்டு நாட்களும் வார இறுதி நாட்கள், ஆக தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வருகிறது. எனவே ரசிகர்கள் எந்த தொந்தரவும் இல்லாமல் படத்தை காணலாம் என படக்குழுவினர் தெரிவித்து உள்ளனர். 

இந்நிலையில், மதராஸி படத்தின் இறுதிக்கட்ட காட்சிகள் இலங்கையில் படமாக்கப்பட்டு வரும் இந்த வேளையில் இப்படத்தின் தயாரிப்பாளர் சுதீப் எலாமன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போட்டோவை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தினை பார்த்தால் சிவகார்த்திகேயன் துறைமுகத்தில் நங்கூரத்தை பிடித்து இருப்பது போல் உள்ளது. எனவே இப்படம் துறைமுகத்தில் நடைபெறும் கடத்தல் தொடர்பான கதையாக இருக்கும் என ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயன் தரிசனம் பார்க்க ரெடியா..! மதராஸி பட அப்டேட் கொடுத்து அசரவைத்த படக்குழு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share