×
 

மணமகனாக மாறிய 'பசங்க' பட நடிகர் ஸ்ரீராம்..! காதலியை கரம்பிடித்த அந்த தருணமே.. என்ன நடந்தது பாருங்க..!

குழந்தை நட்சத்திரமாக இருந்த ஸ்ரீராமுக்கு காதல் திருமணம் நடைப்பெற்றுள்ளது.

கோலிவுட் சினிமாவில் இன்று எத்தனை திரைப்படங்கள் வந்தாலும் அத்தனை திரைப்படங்களிலும் மிகவும் முக்கியமாக பார்க்கப்படும் திரைப்படம் தான் "பசங்க". இப்படிப்பட்ட இந்த திரைப்படம் அனைவரது மனதிலும் நீங்கா இடம் பிடிக்க காரணம் அதில் சுட்டித்தனமாக நடித்த நடிகர் ஸ்ரீராம் தான். 

தனது அழகிய சிரிப்பில் அனைவரது மனதையும் கொள்ளை கொண்டு சென்றவர் தான் நடிகர் ஸ்ரீராம். தமிழ் திரை உலகில் நடிகர் விமல் நடிப்பில் வெளியான பசங்க திரைப்படத்தில் ஜீவா என்ற கேரக்டரில் நடித்து பிரபலமானஇவர் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தோன்றி பல வருடங்கள் கழித்து ஆளே மாறி இருக்கிறார் என்றால் மிகையாகாது. குறிப்பாக இவரை குறித்து பார்த்தால், கடந்த 2009-ம் ஆண்டு இயக்குநர் பாண்டியராஜ் இயக்கத்தில் வெளியான இந்த "பசங்க" திரைப்படத்தில் இவர் நடித்திருந்தாலும் இதில் அவர் செய்த சுட்டித்தனமான காரியங்கள் மக்கள் மனதில் அவரை ஆழமாக கொண்டு சேர்த்தது. 

இதையும் படிங்க: நடிகை சமந்தாவின் அந்த விஷயத்தை சொல்லி கிண்டலடித்த ரசிகர்..! கடுப்பில் அவர் கொடுத்த ரிப்ளேவை பாருங்க..!

குறிப்பாக பள்ளி வகுப்பறையில் தனது நண்பர்களுக்கு முன்பாக தான் கெத்து என்பதை நிரூபிப்பதற்காக அவர் செய்யும் சுட்டித்தனங்களும் பார்ப்பவர்களை மகிழ செய்யும். அதிலும் குறிப்பாக ஸ்ரீராம், தனது சட்டை பாக்கெட்டை கிழிக்கும் பொழுது அவனுடைய நண்பர்கள், இப்பொழுது ஜீவா சட்டை கிழிப்பான் பாரு... கைய முறுக்கு வா பாரு... இப்ப அடிப்பான் பாரு என்று சொல்வதெல்லாம் காமெடியின் உச்சமாகவே இருக்கும்... நடிகர் சிவகார்த்திகேயனின் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' திரைப்படத்தில் சொல்வதைப்போல இந்த "ஊரில் நான்கு பேர் நான்கு விதமாக பேசுவதால் தான் நான் பயந்து என் பொண்ணுங்களுக்கு கல்யாணம் செய்தேன்" என சத்தியராஜ் சொல்வதைப் போலவே, இந்த திரைப்படத்தில் ஜீவாவுடன் இருக்கும் இரண்டு நண்பர்கள் சொல்வதைக் கேட்டு தனது கெத்தை விட்டு விடக்கூடாது என ஜீவா கேரக்டரில் அற்புதமாக வாழ்ந்திருப்பார் நடிகர் ஸ்ரீராம். 


இதனை அடுத்து தமிழ் படம், தீராத விளையாட்டுப் பிள்ளை, வேங்கை, ஜில்லா ஆகிய திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். ஆனால் அந்த திரைப்படங்கள் அவருக்கு பெரிதளவில் கை கொடுக்கவில்லை என்றாலும் 2014 ஆம் ஆண்டு வெளியான 'கோலி சோடா' திரைப்படம் ஸ்ரீராமுக்கு அபார வெற்றியை கொடுத்தது. இதனை அடுத்து கமலஹாசனின் பாபநாசம், சமுத்திரக்கனியின் அடுத்த சாட்டை, ஸ்ட்ரீட் லைட்  முதலிய படங்களில் நடித்து வெற்றி கண்டார். மேலும் நவரசா, ஃபை, முதலிய வெப் சீரியஸ்களிலும் நடித்து இருந்தார். 

இந்த நிலையில் தனது நீண்ட நாள் காதலியான 'நிகில் பிரியா' என்பவரை  காதல் திருமணம் செய்து உள்ளார் நடிகர் ஸ்ரீராம். இவர்களது காதல் கதை எங்கே உருவானது என பார்த்தால் 'பயோடெக் கம்பெனி ஒன்றின் உரிமையாளராக இருக்கும் ஸ்ரீராம், அங்கு பணிபுரிய வந்த நிகில் பிரியாவுடன் ஏற்பட்ட பழக்கத்தில் தான் இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. இவரது திருமணம் தற்பொழுது சைலன்டாக நடைபெற்று இருந்தாலும் திருமணத்தைக் குறித்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த வருகின்றனர்.

மேலும் அவரது காதல் திருமண புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் அன்று குழந்தையாக வந்தவர் இன்று கல்யாணமே பண்ணிவிட்டார், இதிலிருந்து நாட்கள் எவ்வளவு வேகமாக செல்கிறது என்பதை பாருங்கள் என தெரிவித்து வருவதுடன் அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். 

இதையும் படிங்க: நடிகர் சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட பாலிவுட் ஸ்டார் அமீர் கான்..! ஷாக்கில் ரசிகர்கள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share