நடிகை சமந்தாவின் அந்த விஷயத்தை சொல்லி கிண்டலடித்த ரசிகர்..! கடுப்பில் அவர் கொடுத்த ரிப்ளேவை பாருங்க..!
தன்னை குறித்து பேசியவர்களுக்கு தரமான பதிலடி கொடுத்திருக்கிறார் நடிகை சமந்தா.
ஒரு காலத்தில் சினிமா உலகையே தனது உள்ளங்கையில் வைத்து அசத்தியவர் என்றால் அவர் தான் நடிகை குஷ்பூ, ஆனால் காலங்கள் மாறிப்போனதால் இனி வரும் இளசுகளுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று தனது திரை உலக பயணத்தை முடித்துக் கொண்டார். இனி குஷ்பூ படங்களில் நடிக்கவில்லையா என அனைவரும் வேதனைப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் ரசிகர்களின் மனக்குமுறலை மாற்றி அமைக்க வந்தவர் தான் குட்டி குஷ்பூவான நடிகை சமந்தா.
இவர் பார்க்க அழகு முகத்தோற்றத்தில் இருந்தாலும் தனது சிரிப்பால் அனைவரையும் வருடி இழுத்தவர் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு ஜெனிலியாவை போல இவரது நடக்கையிலும் பேசுகையிலும் ஒரு விதமான குழந்தை தன்மை வெளிப்படும் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இப்படிப்பட்ட சமந்தா தனது திரையுலக பயணத்தில் பல வெற்றிகளை கண்டு வந்தாலும் வாழ்க்கை என்ற பயணத்தில் சில சருக்கல்களை சந்தித்து இருக்கிறார். எப்படிப்பட்ட பிரபலங்களாகவே இருந்தாலும் அவர்களுக்கும் வாழ்க்கை என்பது சாதாரணமான ஒரு காரியம் தான் என்பது இவரது வாழ்க்கைக்கு பொருந்தும். ஏனெனில் மிகப்பெரிய ஸ்டார் நடிகரான நாகார்ஜுனாவின் மகனான நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்து கொண்டார் நடிகை சமந்தா.
இதையும் படிங்க: ஒரு வழியாக மீண்டும் இணைந்த நாக சைதன்யா, சமந்தா..! மகிழ்ச்சியில் துள்ளிகுதிக்கும் ரசிகர்கள்..!
ஒரு மிகப்பெரிய ஸ்டார் குடும்பத்தில் சமந்தா வாக்கப்பட்டிருக்கிறார் என்பதை கண்டு ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு இருக்க, அடுத்த சில வருடங்களிலேயே இருவரும் மாறி மாறி அடித்துக் கொண்டு வெளியேறிய காட்சிகள் ரசிகர்களின் மனதை மிகவும் புண்படுத்தியது. ஆனாலும் இன்று வரை இவர்களது பிரிவுக்கான காரணம் யாருக்கும் தெரியவில்லை. தனது அன்பு காதலனை பிரிந்த சோகத்தில் இருந்த நடிகை சமந்தா சில வருடங்களாக திரையுலகில் தனது முகத்தை காண்பிக்காமல் அமைதியாக இருந்தார்.
அப்பொழுது திடீரென ஒரு நாள் புஷ்பா திரைப்படத்தில் "ஓ சொல்றியா மாமா" பாடலுக்கு நடனமாடி அனைவரையும் திக்கு முக்காட வைத்தார். சில நாட்கள் ஈஷா யோகா மையம் வெளியுலக பயணம் என தனிமையை இனிமையாக்கி வந்த நடிகை சமந்தா திடீரென்று ஒரு நாள் தனது முன்னாள் கணவரான நாக சைதன்யா, சோபிதா துலிபாலாவை திருமணம் செய்த தகவலை கேட்டு ஒரு பக்கம் மனம் உடைந்தாலும் மறுபக்கம் ஆத்திரம் கொண்டார்.
இதனை அடுத்து தனது முன்னாள் கணவரான நாக சைதன்யாவே தனது வாழ்க்கையை மாற்றிக்கொண்டு அடுத்தடுத்த பயணத்தை மயில் கல்லாக வைத்து சென்று கொண்டிருக்கும் பொழுது நான் மட்டும் ஏன்? சும்மா அமர்ந்திருக்க வேண்டும் என யோசித்த சமந்தா, அடுத்ததாக ஒரு தயாரிப்பு நிறுவனத்தை அதிரடியாக ஓபன் செய்து மக்களிடம் நான் மீண்டும் நடிக்கப் போகிறேன் என சொல்லி மகிழ்ச்சியை ஏற்படுத்தினார்.
மேலும் இவர் செல்லும் அனைத்து மேடை நிகழ்ச்சிகளிலும் ரசிகர்கள் இவர் மீது வைத்திருக்கும் அன்பை பார்த்து கண்ணீர் விட்டு கதறி வருகிறார் நடிகை சமந்தா. இப்படி இருக்க தான் அவ்வப்பொழுது தன் உடல் நிலையை எப்படி பாதுகாத்துக் கொள்கிறேன்.. அதற்கு எப்படி யோகாசனம் செய்கிறேன்.. மேலும் உடற்பயிற்சி என்பது எவ்வளவு முக்கியத்துவம் என்பதை தனது இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் மக்களுக்கு தெரிவித்து வரும் நடிகை சமந்தாவை ஹேட்டர்ஸ்களும் விட்டபாடில்லை.
அந்த வகையில் தற்பொழுது அவருக்கு நடந்த ஒரு சம்பவம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி தற்போது தொடர் சிகிச்சையில் இருப்பதால் நடிகர் சமந்தாவின் உடல் எடை மிகவும் குறைந்து ஒல்லியாக காணப்படுகிறார். இதனை அடுத்து அவரை instagram மூலமாக பார்க்கும் நெட்டிசன்கள் அனைவரும் அவரை கொஞ்சம் உடல் எடையை அதிகரிங்க சமந்தா என ட்ரோல் செய்து வருகின்றனர் . இதனால் தன்னை ஒல்லிக்குச்சி என ட்ரோல் செய்தவர்களுக்கு தற்பொழுது பதிலடி ஒன்றை கொடுத்திருக்கிறார் நடிகை சமந்தா. அதன்படி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கும் நடிகை சமந்தா, " என்னை ஒல்லிக்குச்சி... நோயாளி என்றெல்லாம் அழைப்பவர்கள் இந்த மூன்று விஷயங்களை முதலில் உங்களால் செய்ய முடியுமா என பாருங்க" என்று காட்டமாக பதிவிட்டு இருக்கிறார்.
தற்பொழுது அவருடைய பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: மச்சக்காரி சமந்தா முதுகில் இருந்த டேட்டோ எங்கப்பா..! திணறும் இணையவாசிகள்..!