படம் நல்லா இருந்தா தான் இமோஜி.. இல்லைனா கிடையாது..! அனிருத் பேச்சால் கலக்கத்தில் இயக்குநர்கள்..!
அனிருத் தனது எக்ஸ் பக்கத்தில் படம் நல்லா இருந்தான் இமோஜி..இல்லைனா போடமாட்டேன் என கூறியிருக்கிறார்.
ஆரம்பத்தில் விளையாட்டு சிறுவனாக தோற்றமளித்து இசையமைப்பாளரா என சந்தேகம் அடைந்த அனைவரையும் தனது ரசிகர்களாக்கி இன்று இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், யுவன் சங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி, ஹிப் ஹாப் ஆதி, டி.இமான் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்கள் வரிசையில் முதன்மையான இடத்தில் இருக்கிறார் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன். அந்தவகையில் உண்மையிலேயே "உன் அலும்ப பார்த்தவன்….ஒங்க அப்பன் விசில கேட்டவன்" என்ற வரிகளுக்கு சொந்தகாரர் என்றால் அது இசையின் அரக்கன் என்று மக்களால் அன்புடன் அழைக்கும் அனிருத் ரவிச்சந்திரன் மட்டுமே. இவரது படைப்பில் பல பாடல்கள் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தது.
குறிப்பாக அனிருத்தின் காதல் வலி பாடல் என்றால் "அழகாய் மலர்வது போல் உதிர்வது காதல்" என்ற பாடல்தான், "அம்மா அம்மா நீ எங்க அம்மா" என்று அனைத்து உள்ளங்களையும் கரைய வைத்த பாடலையும், விஜயின் பிஸ்ட் பட பாடல்கள் மற்றும் தமன்னாவின் காவாலையா, ரஜினியின் டைகர் முதலிய பாடல்களுக்கு சொந்த காரர். இப்படிப்பட்ட அனிருத் ஆரம்பத்தில் தனது இசை பயணத்தை "ஜினகஷ்" என்ற இசைக்குழு பள்ளியில் ஆரம்பித்தார். அதற்கு பின் அவரது 21ம் வயதில் தனுஷின் '3' படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு கிடைத்தது. அதில் "போ நீ போ", "why this கொலவெறி" போன்ற பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து சினியுலகில் இவரது பெயர் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் மத்தியில் அடிபட துவங்கியது. இதனை அடுத்து இவர் இசையில் வெளியான "டேவிட்" திரைப்படத்தின் "கனவே கனவே" பாடல் ரசிகர்களை கவர்ந்து பிரபலமாகியது. பின்பு மீண்டும் நடிகர் தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான "எதிர்நீச்சல்" திரைப்படத்தில் வந்த அனைத்து பாடல்களுக்கும் இசையமைத்து தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக மாறினார்.
இதுவரை இவர், வணக்கம் சென்னை, இரண்டாம் உலகம், கத்தி, என்னமோ ஏதோ, மான் கராத்தே, வடகறி, வேலையில்லா பட்டதாரி, ரோமியோ ஜுலியெட், மாரி, நானும் ரௌடி தான், காக்கி சட்டை, தங்க மகன், வேதாளம், ரெமோ, விவேகம், ரம், கோலமாவு கோகிலா (கோ கோ), தானா சேர்ந்த கூட்டம், Mr.லோக்கல், தும்பா, பேட்ட, தனுசு ராசி நேயர்களே, சங்கத்தமிழன், நம்ம வீட்டுப் பிள்ளை, சாஹோ, பாவ கதைகள், தாராள பிரபு, பட்டாஸ், தர்பார், பூமி, மாஸ்டர், அனபெல் சேதுபதி, டாக்டர், ஜகமே தந்திரம், சுல்தான், ப்ரின்ஸ், டான், ஆர் ஆர் ஆர் - (இரத்தம் ரணம் ரௌத்திரம்), விக்ரம், பீஸ்ட், எதற்கும் துணிந்தவன், காத்துவாக்குல ரெண்டு காதல், திருச்சிற்றம்பலம், ஜவான், மாவீரன், ஜெயிலர், வீரன், லியோ, வாரிசு, துணிவு, LIC - லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன், அமரன், வேட்டையன், அந்தகன், இந்தியன் 2, ஆக்கோ, விடாமுயற்சி போன்ற படங்களுக்கு இசையமைத்தும் பாடல்களை பாடியும் உள்ளார் அனிருத்.
இதையும் படிங்க: சாட் ஜிபிடி-யால் அனிருத் செய்த வேலை..! நேர்மையான பேச்சால் சிக்கிய இசையமைப்பாளர்..!
இதுமட்டுமல்லாமல் அடுத்ததாக, ஜெயிலர் 2, கைதி 2, மதராஸி, கூலி, ஜனா நயகன், எஸ் கே 17, இருபத்தியாறு 26 உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இப்படி பல போராட்டங்களுக்கு பின்பு இசையில் நட்சத்திர நாயகனாக ஜொலிக்கும் அனிரூத்,'கூலி' படத்தில் சிக்கிடு, மோனிகா மற்றும் பவர் ஹவுஸ் போன்ற பாடல்களுக்கு இசையமைத்து உள்ளார். இந்த பாடல்களை வெளியாகி மக்களால் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படி இருக்க சமீபத்தில் ரஜினி நடிக்கும் 'கூலி' படத்தின் இசை வெளியீட்டுவிழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. படத்திற்கு தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படி இருக்க வழக்கமாக அனிருத் இசையமைக்கும் படங்கள் வெளியாவதற்கு முன்பு அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பயர் எமோஜி போடுவது வழக்கம். ஆனால் சமீப காலங்களில் அவர் இசையமைத்து வெளியான படங்களுக்கு அனிருத் பயர் எமோஜி போடாதது பேசுபொருளாக மாறியது. இந்த நிலையில் அதற்கு பதிலளித்துள்ள அனிருத், "நான் பயர் எமோஜி போடுவதை நிறுத்திவிட்டேன். பல படங்கள் நன்றாக இல்லை என்று எனக்குத் தெரியும், தெரிந்தும் எமோஜி போட்டால் அது தவறாகிவிடும். ஜெயிலர் படத்தை பொறுத்தவரை நான் நன்றாக இருப்பதாக நினைத்து பயர் எமோஜி பதிவிட்டேன். ஆனால் எல்லா படங்களுக்கும் அப்படி போடுவது எனக்கு தான் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.
ஆனால் கூலி படம் சூப்பராக வந்துள்ளது. நான் இங்கே பயர் எமோஜியைக் கொடுக்கிறேன்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: சாட் ஜிபிடி-யால் அனிருத் செய்த வேலை..! நேர்மையான பேச்சால் சிக்கிய இசையமைப்பாளர்..!