உச்சபட்ச கவர்ச்சி படத்தில் ரட்சிதா.. இனியும் இப்படி தானா..? நடிகை முடிவால் இளசுகள் ஹேப்பி...!
இனி தன் படங்களில் கவர்ச்சி இருக்குமா என்பதை குறித்து பேசியிருக்கிறார் நடிகை ரட்சிதா மகாலட்சுமி.
ஆரம்பத்தில் குடும்ப பாங்காக நடிக்க நினைத்து வரும் நடிகைகள் கூட கவர்ச்சியின் நாயகியாக மாற்றி விடுகிறது இந்த சினிமா உலகம். காரணம் முன்பெல்லாம் படத்தின் கதைகளை பார்க்கும் கூட்டம் தற்பொழுது கிளாமரையும் மசாலாக்கலையும் மட்டும் விரும்புவதே காரணம் என கூறுகின்றனர் சினிமா வல்லுநர்கள்.
சினிமாவுல எல்லாத்தையும் பிராக்டிகலா காமிச்சா தானே நல்லா இருக்கும் என சொல்லி பாலியல் வன்கொடுமைகள் முதல் பெண்கள் கடத்துவது, கற்பழிக்கப்படுவது, ஏமாற்றப்படுவது என அனைத்தையும் நாங்கள் காண்பிக்கிறோம். ஏனென்றால் இது அவர்னஸ்க்கான படம் என சொல்லிவிட்டு ஒரு தவறை எப்படி செய்ய வேண்டும் என்பதை ரூட்டு போட்டு கொடுக்கும் திரைப்படங்கள் தான் இன்று நம் திரையுலகில் அதிகமாக தோன்றுகிறது. தமிழ்நாடு கொண்டாடும் லோகேஷ் கனகராஜ் படமாக இருந்தாலும் சரி, அந்தப் படத்தில் கூட போதைப் பொருட்களை தவிர்ப்பது என காண்பித்து விட்டு சிறார்கள் போதை பொருளுக்கு எப்படி அடிமையாகிறார்கள் என்பதை காண்பிக்க வைத்து இன்று பழைய இளசுகளை போதை பொருட்களை உட்கொள்ள வைக்கிறது.
இதையும் படிங்க: எனக்கு அதில் தான் உற்சாகம் கிடைக்கிறது.. நான் எப்படி விட முடியும்? நடிகை அனுபாமா பரமேஸ்வரன் ஓபன் டாக்..!
தற்பொழுது நடந்து வரும் பல பிரச்சனைகளுக்கு காரணம் என பார்த்தால் சினிமாக்கள் மட்டுமே. அதில் இயக்குனர்கள் காண்பிக்கும் கவர்ச்சிகளாகட்டும் அதில் வரும் உச்சபச்ச கிளாமர் காட்சிகளை பார்த்து இதை நாமும் முயற்சி செய்யலாம் என தான் பல இளசுகளும் சிறுசுகளும் தற்பொழுது முயற்சி செய்து வருகின்றனர். அதனால்தான் இன்று கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற அதிகமான காரியங்கள் நம் நாட்டை சூறையாடிக் கொண்டிருக்கிறது. கே.ஜி.எப் திரைப்படத்தில் சொல்வதைப்போல " ஆரம்பி என்று சொல்ல அம்மா இருந்தார்கள்.. ஆனால் அதனை நிறுத்து என சொல்ல இப்பொழுது யாரும் இல்லை.. என்பதால் இந்த சூறாவளிக்காற்று இன்னும் எத்தனை பேரை பலி கொடுக்குமோ" என்று டயலாக் வரும் அந்த டயலாக்குக்கு ஏற்றார் போல் தான் இப்பொழுது சினிமாவும்.
தவறுகள் இப்படித்தான் நடக்கிறது என ரூட்டு போட்டு ஆரம்பித்து கொடுத்த இவர்கள் அதை இப்படித்தான் நிறுத்த வேண்டும் என்பதை சொல்ல ஒருவரும் இல்லாததால் தற்பொழுது உள்ள இளசுகள் புத்தி மாறி புத்தி பேதலித்து போய் சுற்றிக் கொண்டிருக்கின்றனர். அப்படிப்பட்ட ஒரு திரைப்படத்தை தான் சமீபத்தில் நடித்து இருந்தார் நடிகை ரட்சிதா மகாலட்சுமி. 'ஃபயர்' என்ற திரைப்படத்தில் தனது உச்சபட்ச க்ளாமர்களை காண்பித்து அவர் மீது அதிக நம்பிக்கை வைத்த ரசிகர்களின் மனதை புண்படுத்தி இருக்கிறார் மகாலட்சுமி. ஒருவேளை அவருக்கு இளசுகளின் ரசிகர்கள் அப்பொழுது அதிகமாக இருந்திருந்தார்கள் என்றால் அது பெரியதாக இருந்திருக்காது. ஆனால் பல குடும்ப ஆடியன்ஸின் நம்பிக்கையை பெற்றிருந்த ரட்சிதா மகாலட்சுமி திடீரென கிளாமரில் தோன்றுவதை பார்த்தவுடன் அதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ஆதலால் தற்பொழுது குடும்ப ஆடியன்ஸ்களை முற்றிலுமாக இழந்திருக்கும் நடிகர் ரச்சிதா மகாலட்சுமிக்கு அடிஷ்னலாக கிடைத்திருக்கிறது இளசுகளின் ஆதரவு. இப்படி இருக்க, இந்த ஃபயர் திரைப்படத்தில் நடித்ததற்கு காரணமே இது ஒரு அவேர்னஸ் படம் என்பதால் மட்டுமே என ரட்சிதா தெரிவித்து இருந்தார். அதற்கு பிரபல பத்திரிகையாளர் ஒருவர், அப்படி அவர்னஸ் படம் என்றால் நீங்கள் பணம் வாங்காமல் நடித்திருக்கலாமே எதற்காக பணம் வாங்கி நடித்தீர்கள் என்று கூறினார்.
மேலும், அவர்னஸ் படத்திலிருந்து இவ்வளவு கவர்ச்சிகளை நீங்கள் ஏன்? காண்பித்தீர்கள் எனவும் அவரை சரமாரியாக கேள்வி கேட்டு வந்தார். இப்படி பல எதிர்ப்புகள் தன் மத்தியில் வந்தாலும் அதனை பொருட்படுத்தாமல் தனது இன்ஸ்டாகிராம் ஃபேஸ்புக் என அனைத்திலும் தனது அருமையான அழகான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளின் மனதை துல்லாமல் துள்ள வைத்துக் கொண்டிருக்கிறார் நடிகை ரஞ்சிதா மகாலட்சுமி.
இப்படி இருக்க, தற்பொழுது விக்ராந்துடன் இணைந்து ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார் ரட்சிதா. சமீபத்தில் ஒரு நேர்காணலுக்கு அவர் கொடுத்த பேட்டியில், 'இனி வரும் காலங்களில் நான் எந்தவிதமான கவர்ச்சியான கதைகளிலும் நடிக்கப் போவதில்லை எனவும் எனக்கு எனது ரசிகர்கள் தான் முக்கியம் எனவும் கூறி இருக்கிறாராம். அது மட்டுமல்லாமல் இனி வரும் காலங்களில் கவர்ச்சி இல்லாத நடிப்பால் அனைவரையும் கவரப்போவதாகவும் அடுத்ததாக ஒரு வெப் சீரிஸிலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக' தெரிவித்து இருக்கிறார்.
தற்பொழுது இவரது பேச்சை கேட்ட பல நெடிசன்கள், நீங்கள் கவர்ச்சி காட்டினால் மட்டும்தான் உங்கள் படம் ஓடும் என்பது இல்லை. உங்கள் நடிப்பும் கதையும் அருமையாக இருந்தால் நீங்கள் எப்படிப்பட்ட காஸ்ட்யூமில் இருந்தாலும் உங்கள் திரைப்படம் கண்டிப்பாக ஓடும். அதற்கு நாங்கள் கேரன்டி என தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: என்ன சூரி கலக்குறீங்களே.. எக்ஸ் தளமே அவர் கண்ட்ரோல் தான்.. ஒரே போஸ்டில் வேர்ல்டு லெவல் ஃபேமஸ்..!