×
 

என்னம்மா நீங்க இப்படி பண்ணுறீங்களேமா.. சேலையுடன் இருந்த ரச்சிதா ட்ரௌஸருடன் சுற்ற காரணம் என்ன..?

கிராமத்து பெண்ணாக இருந்த ரச்சிதா மகாலட்சுமி வெளிநாட்டு பெண்ணாக மாறிய தருணம்.

ரச்சிதா மகாலட்சுமி என்பதை விட, மீனாட்சி என்றால் தான் இன்று வரையிலும் பலருக்கு இவரை தெரியும். 

பாவாடை தாவணியில் கிராமத்தின் பெண்மையை விவரிக்கும் தோற்றத்தில் 'சரவணன் மீனாட்சி' என்ற தொடரில் நடித்து பிரபலமானவர் தான் நம்ம ரச்சிதா. 

இதையும் படிங்க: 'தக் லைஃப்' விடுங்க 'மெட்ராஸ் மேட்னி' பாருங்க... விமர்சனத்தில் பாசிட்டிவ் ரேட்டிங்...!

இந்த சீரியலால் பலரது குடும்பத்தில் ஒருவராக பார்க்கப்பட்ட இவர், பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலக்கினார். 

பின் நடிக்கும்பொழுதே சக நடிகரான தினேஷை காதல் திருமணம் செய்தார்.ஆனால் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை இருவரும் பிரிந்து விட்டனர். 

இவரது முன்னாள் கணவரான தினேஷும் பிக்பாஸில் கலந்து கொண்டு ரச்சிதாவுடன் இணைவதற்கான முயற்சியில் ஈடுபட்டார் என்பதும் அனைவருக்கும் தெரியும். 

அதன் பின், ஜேஎஸ்கே சதீஷ்குமார் இயக்கத்தில் பாலாஜி முருகதாஸ் ஹீரோவாக நடிக்கும் 'ஃபயர்' படத்தில் ஹீரோயினாக ரச்சிதா மகாலட்சுமி இணைந்து நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி அனைவரது எதிர்பார்ப்பை தூண்டியது. 

ஆனால் அனைத்தையும் உடைக்கும் விதமாக இப்படத்தின் ட்ரெய்லர் அமைந்தது.ஆனால் அதை விட இப்படத்தின் பாடல் வந்த பின் பெருமளவில் சர்ச்சையில் சிக்கினார் ரச்சிதா. 

காரணம் அந்தப்பாடலில் உச்சபச்சமான கிளாமரில் இருந்தார். இதனால் பலரும் அவரை வசைபாடி தீர்த்தனர். 


இதனை தொடர்ந்து படம் ரிலீசாக, படம் பார்த்த அனைவரும் படம் நன்றாக இருந்தாலும், ஆபாச காட்சிகளை கொஞ்சம் குறைந்து இருந்திருக்கலாம் என்றும் இந்த படம் குடும்பத்துடன் பார்க்க முடியாது என்றும் பாதுகாப்பு என்பது இல்லாத காலகட்டத்தில் இப்படி ஒரு படம் தேவையா? என்றும் கூறி சென்றனர். 


ஆனாலும், ரச்சிதா மகாலட்சுமியை ஒருபக்கம் சிலர் வசைபாடினாலும் அவரை நேசிக்கும் ரசிகர்களும் ஒருபக்கம் உள்ளனர். அவர்களுக்காகவே அடிக்கடி தனது புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார் ரச்சிதா.

இதையும் படிங்க: சமந்தா இல்லாம கொளுந்தனுக்கு கல்யாணமா..! என்ன நாகார்ஜுனா சார்.. இதெல்லாம் நல்லாவா இருக்கு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share