சமந்தா இல்லாம கொளுந்தனுக்கு கல்யாணமா..! என்ன நாகார்ஜுனா சார்.. இதெல்லாம் நல்லாவா இருக்கு..!
நாகர்ஜூனாவின் இளைய மகனுக்கு காதல் திருமணம் நடைபெற்றுள்ளது.
உலக சினிமாவில் நாகார்ஜுனாவிற்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவரது நடிப்பில் வந்த "சோனியா சோனியா சொக்க வைக்கும் சோனியா" பாடலை இன்று வரை யாராலும் மறக்க முடியாது. அதே போல் இவர் நடிகர் கார்த்திக்குடன் நடித்த 'தோழா' திரைப்படத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்தார். அதுமட்டுமல்லாமல் நடிகர் நானியுடன் இவர் நடித்த டாக்டர் தாஸ் எம்பிபிஎஸ் எம்டி கோல்ட் மெட்டாலிஸ்ட் என்று சொல்லும் படங்களும் ஹீரோவாக, தாதாவாக வரும் கேரக்டர்கள் அனைத்துமே பின்னி பெடலெடுக்கும்.
இப்படி பட்ட நாகார்ஜுனாவுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஒன்று நாகசைதன்யா மற்றொருவர் அகில் அக்கினேனி. இருவரும் தெலுங்கு சினிமாவில் நட்சத்திர நடிகர்களாக வளம் வந்து கொண்டு இருக்கின்றனர். இப்பயி இருக்க, நடிகர் நாகார்ஜுனாவின் மூத்த மகனான நாகசைதன்யாவும் நடிகை சமந்தாவும் காதலித்து திருமணம் செய்து கொண்ட பிறகு, இருவருக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2021ம் ஆண்டு திருமண பந்தத்தில் இருந்து இருவரும் பிரிந்தனர். இந்த சூழலில் நடிகை சமந்தாவுக்கு நாக சைதன்யா தரப்பில் இருந்து ஜீவனாம்சமாக ரூ.200 கோடி கொடுத்த நிலையில் அதனை சமந்தா மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ரூ.21 கோடி அப்பீட்டு.. ஆப்பு வைத்த நீதிபதி.. அரண்டு போன விஷால்.. இனி ஆட்டம் இவங்க கையில தான்..!
சமந்தாவுடனான பிரிவுக்கு பின், நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை காதலிக்கிறார் என்ற செய்தி வெளியான நிலையில், இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். அதன்பின் முதலில் இருவருக்குமான நிச்சயதார்த்தம் சிம்பிளாக நடைபெற்று, ரூ.200 கோடி பட்ஜெட்டில் இவர்களது திருமணம் நடைபெற்றது. முதலில் ராஜஸ்தானில் நடக்கவிருப்பதாக இருந்த இவர்களது திருமணம், ஒரு சில காரணங்களுக்காக ஹைதராபாத்துக்கு மாற்றப்பட்டு, அங்கிருக்கும் அன்னபூர்ணா ஸ்டூடியோவில், நாகேஸ்வர ராவ் சிலைக்கு முன்பு ஏகப்பட்ட சடங்குகளுடன் 8 மணி நேரம்வரை நடைபெற்றது.
திருமணத்திற்கு பிறகு ஹனிமூனில் பிசியாக இருந்த சோபிதா தற்பொழுது கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நாகர்ஜூனாவின் இளையமகனான அகில் அக்கினேனிக்கு இன்று காதல் திருமணம் நடைபெற்றது. அதன்படி, அகில் அக்கினேனி தனது நீண்டகால காதலியான 'ஸைனாப்பை' இன்று திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணம் நாகசைதன்யா திருமணத்தைப்போல் ஐதராபாத்தில் அதிகாலையில் நடைபெற்றது. திருமணத்தில் சில குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய நண்பர்களை வைத்து இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. மேலும், மணமக்கள் வரவேற்பு நிகழ்ச்சியானது வரும் ஜூன் 8ம் தேதி நாகார்ஜுனாவுக்கு சொந்தமான அன்னபூரனா ஸ்டூடியோசில் நடைபெற உள்ளது.
தற்பொழுது மணமக்கள் இருவரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: ஜப்பானில் மாஸ் காட்டிய கமல்ஹாசனின் "விக்ரம்"..! இதுவரை வசூல் மட்டும் எவ்வளவு தெரியுமா..?