×
 

அகமதாபாத் விமான விபத்து.. இனி எல்லாம் ஆண்டவன் கையில் - ரஜினி சொன்ன அந்த வார்த்தை..!

அகமதாபாத் விமான விபத்து குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வேதனை தெரிவித்துள்ளார்.

இன்று இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகள் முழுவதும் பேசிக் கொண்டிருக்கும் ஒரே ஒரு விஷயம் என்றால் அதுதான் அகமதாபாத்தில் நடைபெற்ற ஏர் இந்தியா விமானத்தின் விபத்து. சுமார் 242 பயணிகளுடன் புறப்பட்ட இந்த ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறின் காரணமாக உண்டான விபத்தில் கிட்டத்தட்ட 241 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த ஒருவரை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்தும் வருகின்றனர். 

அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டனுக்கு 242 பயணிகளும் மிகவும் மகிழ்ச்சியாக தனது குடும்பத்துடன் பயணிக்க தொடங்கிய 25 வினாடி பொழுதில் விமானியின் கட்டுப்பாட்டை இழந்த ஏர் இந்தியா விமானம் அருகில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதி மீது விழும் என ஒருவரும் நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள், அதேபோல் இந்த விமான விபத்தில் கல்லூரியில் மகிழ்ச்சியாக சாப்பிட்டுக்கொண்டும் விளையாடிக் கொண்டும் இருந்த மாணவர்கள் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். மேலும் பலர் பலத்த காயங்களுடனும் உயிருக்கு ஆபத்தான நிலையிலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மட்டும் பாலி எண்ணிக்கை 274 ஆக உள்ளது. 

இதையும் படிங்க: படம் இப்படி இருக்கு..? கூலி படத்தைப் பார்த்த ரஜினியின் ரியாக்ஷன்.. அரண்டு போன படக்குழு..!

பல பேரின் உடல்கள் தீயில் கருகி இருப்பதால் அவர்களது உடலை அடையாளம் காண முடியாமல் இருக்கிறது. ஆதலால் டிஎன்ஏ பரிசோதனைகளை மேற்கொண்டு அவர்களை அடையாளம் கண்டு பிறகு குடும்பத்தாருக்கு அவர்களது உடல்கள் ஒப்படைக்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மேலும் டாடா நிறுவனத்தின் சார்பாக உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் எனவும், உயிர் ஆபத்தான நிலையில் போராடி வருபவர்களுக்கு உண்டான மருத்துவ செலவுகள் அனைத்தையும் நிர்வாகமே ஏற்றுக்கொள்ளும் எனவும் விமான விபத்தில் சிக்கிய விடுதியின் கட்டிடத்தை தாங்களே சரி செய்து தருவதாகவும் டாடா நிறுவனம் உறுதி அளித்துள்ளது. 

இப்படி இருக்க இந்த விபத்தைக் கண்டு பல பயணிகளும் விமானத்தில் செல்ல அஞ்சி வரும் வேளையில், ஏர் இந்தியா விமானத்தின் தரத்தை குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என மத்திய அரசு அந்நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. மேலும், சில விமான விபத்து ஆராய்ச்சி வல்லுநர்கள் சிலர் கோ-பைலட்டின் தவறுதலால் தான் இப்படி நடந்து இருப்பதாக தெரிவித்து இருக்கின்றனர்.

இந்த சூழலில் இன்று சென்னை விமான நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர், " ஜெயிலர் 2 படப்பிடிப்புக்காக வெளிநாட்டிற்கு செல்வதாகவும், கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. படம் வரும் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆகிறது. ஏற்கனவே, படக்குழு சொல்லிவிட்டதே, மேலும் அகமதாபாத் விமான விபத்து ரொம்ப வருத்தமான விஷயம்.. ஆண்டவன் அருளால் இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்கணும் " என தெரிவித்து சென்றார். 

இதனை பார்த்த நெட்டிசன்கள் அது எல்லாம் இருக்கட்டும் நீங்கள் பாத்து பத்திரமாக சென்று வாருங்கள் என தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: சூப்பர் ஸ்டாரையே அடிக்க துணிந்த நடிகர்..! அவருக்கு உரிமை இருக்கு.. சப்போர்ட் செய்த ரஜினி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share